Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ம அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுகிறதா கூட்டமைப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி! அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுகிறதா கூட்டமைப்பு?

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி! அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுகிறதா கூட்டமைப்பு?

வன்னி மக்கள் படும் அவலங்களை காரணம் காட்டி வடக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக கொழுப்பு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், அகதிமுகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பற்காக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

கடந்தவாரம் கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வன்னிக்கு விஜயம் செய்து அங்கு மீளக்குடியேறிய மக்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டறிந்து கொண்டனர். வன்னிப் படுகொலைகள் நிறைவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வன்னிப் பயணத்தை மேற்கொண்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

ஆனால் வன்னிப்பயணம் முடிந்து ஒரு வாரத்தினுள் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டயிடவுள்ள தனது முடிவை கூட்டமைப்பு வெளியிட்டிருப்பது அவர்களின் பயண நோக்கம் தொடர்பாக பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் முடிவு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்திருப்பதாவது:

சர்வதேசத்துக்கு அரசு கூறிவருவது போன்று அங்கு எதுவும் நடக்கவில்லை. மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசு ஒரு ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. இதனை அம்பலப்படுத்தவும் அந்தத் தேர்தலைப் பயன்படுத்த உள்ளோம்.

அல்லற்படும் அந்த மக்களின் அவலங்களுக்கு ஏற்ற தீர்வைப் பெற்றுக் கொடுக்கவாவது வடக்கு மாகாண நிர்வாகத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியாக வேண்டும். அந்த நிர்வாகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் வன்னி மக்களின் அவலங்களுக்கு முடிவைக் காணலாம்.

சர்வதேசத்துக்கு அரசு அறிவித்து வருவது போன்று மக்கள் வன்னியில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. இன்னமும் அகதி நிலையிலேயே அந்த மக்கள் பசி, பட்டினியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு விடிவு கிடைத்து சகஜவாழ்வுக்கு அவர்கள் திரும்ப மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளது என திரு அரியநேத்திரன் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில், வடக்கு கிழக்கு இணைப்பிற்கு குறைவான எதற்கும் இணங்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை கூறி வந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபத்திலும் வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தியிருந்தது.

ஆனால் தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் எனும் எண்ணக்கருவையே சிதைக்கும் நோக்;குடன் அரசினால் திட்டுமிட்டு நடத்தப்படவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவது, வடக்கு கிழக்கை அரசியல் ரீதியாகப் பிரிக்கும் அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு கூட்டமைப்பு வழங்கும் அங்கீகாரமாகவே இருக்கும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் பலம்பெற்றிருந்த காலத்தில் நடத்தப்பட்ட கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. ஆனாலும் இன்று வன்னி மக்களின் அவலத்தை தீர்த்து வைக்கப் போவதாக காரணம் கூறிக்கொண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் கூட்டமைப்பின் முடிவு குறித்து பலமட்டங்களிலும் சந்தேகமும் கேள்வியும் எழுந்துள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சராக உள்ள பிள்ளையான் அரசுடன் இணைந்து நின்று கொண்டே கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாத நிலையிலேயே இருந்து வருகிறார்.

கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் சாதாரண மீள்குடியேற்றப் பிரச்சினைகளிலிருந்து கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வரை எவற்றிற்குமே தீர்வுகாண முடியாத நிலையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் இருந்து வருகிறார். இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குரிய அதிகாரங்களும்; மாகாணசபைக்கு இல்லை என்பதே உண்மை.

மாகாண முதலமைச்சரின் அதிகாரங்கள் பற்றி கிழக்கு முதலமைச்சர் தனது அதிருப்தியை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிட்டுவரும் சூழலில், வன்னி மக்களின் அவலத்தை தீர்க்க அதே முதலமைச்சர் பதவியைப் பயன்படுத்த உள்ளதாக கூட்டமைப்பு தெரிவிப்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருக்கும்.

வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டின் கீழான தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தும் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி, வடக்கு கிழக்கை அரசியல் ரீதியாகப் பிரிக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்குமாயின் அது வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் ஒரு முயற்சியாகவே தமிழ் மக்களால் நோக்கப்படும்.

அதேநேரம் இம்முடிவு குறித்து அரியநேத்திரன் வெளியிட்டுள்ள கருத்து கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக கொள்ளத்தக்கதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் கூட்டமைப்பின் உயர்பீடம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்தை அரியநேத்திரன் ஊடாக வெளியிடுவதன் மூலம் தமிழ் மக்களின் சிந்தனையோட்டத்தை நாடி பிடித்துப் பார்க்க முயல்கிறதா என்ற கேள்வியையும் பலரும் எழுப்பி வருகின்றனர்.

எமது கருத்துக் கணிப்பு பகுதியின் ஊடாக வாசகர்கள் இவ்விடயம் தொடர்பான தமது கருத்தை வெளிப்படுத்தலாம்

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={A386684B-21C9-46F5-ACA2-85DD4CD4CE5A}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.