Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொழுது போக்காளர்களின் மையமாக மாறிவரும் வன்னி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொழுது போக்காளர்களின் மையமாக மாறிவரும் வன்னி!

பொழுது போக்காளர்களின் மையமாக மாறிவரும் வன்னி!

சத்தியன்

அண்மையில் வன்னிப்பகுதிக்கு பயணம் செய்த ஒருவர் அங்குள்ள நிலைமைகள் குறித்து நேரில் சேகரித்த தகவல்கள்:

வன்னி நிலைமைகள் இன்னும் சீராகவில்லை என்று பலருக்கும் தெரியும். ஆனால், தெரியாத செய்திகள் அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பல இருக்கின்றன. இந்தச் செய்திகளுக்குப் பின்னே மக்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதே இங்கே கவனிக்க வேண்டியது.

வன்னி இப்போது பார்வையாளர்களை அதிகமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக மாறியுள்ளது. அதாவது வன்னி பொழுது போக்காளர்களுக்கான ஒரு மையமாக மாறிவருகிறது. வன்னிக்குச் செல்லும் பொழுதுபோக்காளர்கள் பல வகையினர். இதில் அமைச்சர்கள், தமிழ் - சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்களும் பிரமுகர்களும், சிங்கள மக்கள் எனப் பலவகையினர்.

வன்னியில் போர் நடந்த பகுதிகள் எப்படி என்று அறிவதும் பார்ப்பதும் இவர்களுடைய முதல் நோக்கம். அதிலும் விடுதலைப் புலிகளின் நிர்வாக நகரமாக இருந்த கிளிநொச்சி நகரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதில் இருக்கின்ற ஆர்வம் இன்னும் அதிகம்.

அபிவிருத்திக்கான பயணங்கள் என்ற பேரில் சிலர் வருகிறார்கள். மக்களுடைய பிரச்சினைகளை அறிய வருகிறோம் என்று சிலர் வருகிறார்கள். அரசியல் என்றால் சும்மாவா?

பொழுது போக்காகவும் அதேவேளை புலிகளின் பகுதிகளாக இருந்த இடங்களைப் பார்ப்பதாகவும் இந்தப் பயணங்கள் அமைகின்றன. போகிற போக்கில் போடுகிற தர்மம் என்பார்களே அதேமாதிரித்தான் இதுவும்.

இந்த விருந்தாளிகள், அல்லது சுற்றுலாப்பயணிகளில் சிலர் தரை மார்க்கமாக வருகிறார்கள். அரசியல்வாதிகள் தங்களுக்கிருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஹெலிகொப்ரர்கள் மூலமும் வருகிறார்கள்.

கிளிநொச்சி மத்திய மைதானத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னே விடுதலைப்புலிகளை ஏற்றிக் கொண்டும் ஏற்றிச் செல்லவும் இந்தக் ஹெலிகொப்ரர்கள் வந்திறங்கின. அல்லது புலிகளைச் சந்திப்பதற்கான வெளிநாட்டுப் பிரதானிகளை ஏற்றிக் கொண்டு வந்திறங்கின.

இப்போது சிங்கள அமைச்சர்களும் அரசியற் தலைவர்களும் இங்கே வந்திறங்குகிறார்கள்.

வருகின்ற அமைச்சர்கள், அரசியற் பிரமுகர்கள் எல்லாம் விடுதலைப்புலிகளின் முக்கிய மையங்களாக இருந்த இடங்களைப் போய்ப பார்க்கிறார்கள். குறிப்பாக விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைமைப் பணிமனை, இரணமடுவில் அமைந்திருக்;கும் புலிகளின் இன்னொரு இரகசிய மையம் அப்படியே பாரதிபுரத்தில் அமைந்திருக்கும் இன்னொரு கட்டிடத்தொகுதி.... இப்படிப் பல.

யாழ்ப்பாணத்தைப் பார்க்க வருகிற சிங்கள மக்கள் கிளிநொச்சி நகரத்தில் வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் பெரிய நீர்த்தாங்கியைக் கண்டு வியந்து போகிறார்கள். இந்த நீர்த்தாங்கியைப் பல கோணங்களில் படமெடுக்கிறார்கள். அதனுடன் நின்று போஸ் குடுக்கிறார்கள்.

இந்த நீர்த்தாங்கியைப் போல அதே வடிவத்திலும் அதே அளவிலும் முன்னரும் அதே இடத்தில் இன்னொரு நீர்த்தாங்கி வீழ்த்தப்பட்டது. ஆனால், முன்னர் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்படும் எறிகணைகளுக்கான இரும்புத் தேவைக்காக உடைத்து உள்ளே இருந்த கம்பிகள் எடுக்கபட்டு, பாதிக்குமேல் சிதைந்து போய்விட்டது.

அடுத்ததாக ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருக்கும் போர் நினைவுச் சின்னங்களை பார்க்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் போய் வரக்கூடிய ஒரு இயல்புச் சூழல் வரக்கூடிய நிலைமைகள் இப்போது தெரிகின்றன.

அப்படி உருவாகினால் யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள், முல்லைத்தீவை நோக்கிப் போகக்கூடும். அங்கே இறுதிப் போரின்போது மக்கள் அதிகமாக இருந்த இடங்களையும் போர் முடிந்த முள்ளிவாய்க்கால் பகுதியையும் பார்ப்பார்கள். இங்கேதான் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் - தமிழர்கள் - கொல்லப்பட்டனர் என்பதையும் அவர்கள் அறிவார்களா?

மக்களை விட அமைச்சர்களாக வருகிறவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியற் பிரமுகர்கள் எல்லாம் தங்களுக்கு இருக்கின்ற கூடுதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னும் பல இடங்களுக்கும் போகிறார்கள். போகும் இடங்களில் இருக்கின்ற சனங்களை, அவர்கள் வாழ்கின்ற தரப்பாள் கூடாரங்களை, தகரக் குடிசைகளை எல்லாம் பார்க்கிறார்கள். அவற்றைப் படமெடுத்தும் கொள்கிறாரகள்.

இப்படி இவர்கள் வந்து இந்த மக்களைப் பார்த்துப் படமெடுத்து அதற்குப் பரிகாரமாக ஏதாவது உருப்படியாகச் செய்தால் அது பரவாயில்லை. அதையே சனங்களும் எதிர்பார்க்கிறார்கள்.

சனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஏராளம் பிரச்சினைகளிருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேணும். அதுவும் உடனடியாக வேணும். வீடில்லை, தொழில் இல்லை என்பதெல்லாம் நீண்டகாலமாகப் பொறுத்திருந்து அலசி, ஆராய்ந்து, கூட்டம் போட்டு, மாநாடு நடத்தி, அறிக்கைகள் தயாரித்து, யாப்பு எழுதி செய்யக் கூடியவையல்ல.

உடனடிப் பிரச்சினைகள், உடனடித் தேவைகள் என்ற தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவைகளோடும் பிரச்சினைகளோடும் அவர்கள் கிடந்து மல்லாடிக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுடைய எதிர்பார்ப்புகள் ஏராளம்.

இவை ஒருபுறம் என்றால், இன்னொரு புறத்தில் வன்னியில் இருக்கின்ற சில முக்கியமான இடங்கள் இப்போது படையினரின் கட்டுப்பாட்டிலும் பயன்பாட்டிலும் இருக்கின்றன.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்த முக்கிய இடங்களைப் படையினர் தமது அதிகாரத்தின் கீழும் ஆளுகையின் கீழும் வைத்திருக்கின்றனர். இதில் அரச கட்டடங்களும் காணிகளும் உள்ளடங்கும். பல இடங்களிலிருந்து படையினர் வெளியேறி வருகின்ற போதும் இன்னும் பல பகுதிகள் படையினரின் வசம் இருக்கிறன.

புதிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான திட்டமிடலுக்கு இந்த நடைமுறைகள் தடங்கல்களாக இருக்கின்றன என்று அரசாங்க அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், பாதுகாப்புக்கே முதலிடம் என்று படைத்தரப்பும் அரசாங்கமும் சொல்கின்றன.

கேந்திர நிலையங்கள் பலவற்றிலும் படை முகாம்கள் இருப்பதால் நகர அபிவிருத்தி என்பவை படைத்தளங்களையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கப் போகிறது. அதாவது படைமுகாம்களும் இந்த அபிவிருத்தியில் அடங்கும். ஆகையால், படைமுகாம்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையில் என்னதான் அபிவிருத்தி அடைந்ததோ இல்லையோ படைகள் மட்டும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தினுள் மிகச் சிறப்பாக அபிவிருத்தியாகியுள்ளன என்று ஒரு தடவை நண்பர் ஒருவர் பகிடியாகச் சொன்னார்.

அவர் சொன்னது இப்பொழுது பார்க்கையில் மிகச் சரியாகவே படுகிறது. படையின் அபிவிருத்தி எத்தகைய விளைவுகளைத் தரும் என்று அதிகம் விளக்கத் தேவையில்லை. அதுவும் வளர்முக நாடுகளில் படைப் பெருக்கம் கொண்டுபோய் விடும் புள்ளி என்பது எப்படியானது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

இலங்கையிலும் அத்ததைய ஒரு நிலைக்கு அதிக காலம் செல்லத் தேவையில்;லை. அதிகரித்திருக்கும் படையினருக்கு இப்பொழுது அதிக வேலைகளும் இல்லை. அதனால் அவர்கள் தேநீர்க் கடைகளை நடத்துகிறார்கள்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கிடையில் ஏறக்குறைய 400 வரையான தேநீர்க்கடைகளும் உணவகங்களும் இயங்குகின்றன. அத்தனையும் படையினருடையவை. அங்கே சமையலும் படைச் சிப்பாய்களே. உபசரிப்பாளர்களும் படைச்சிப்பாய்களே. இப்படியும் ஒரு போர்ப்பணி. இப்படியும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடு.

இங்கே இருக்கின்ற இந்தக் கடைகள் எல்லாம் திறந்த வெளிக்கடைகள். தமிழ்ச்சனங்களின் வீட்டுப் பொருட்களையும் படையினர் போருக்குப் பயன்படுத்திய படைக்கலன்களின் கழிவுப் பொருட்களையும் சூழலில் இருக்கின்ற வளங்களையும் பயன்படுத்தி இந்த உணவகங்களை அமைத்திருக்கிறார்கள். இந்தக் கடைகள் அமைந்திருக்கிற காணிகளில் பலவும் மக்களுடைய காணிகள். அல்லது அரரசாங்கத் திணைக்களங்களுக்குரியவை.

இதில் அடுத்த கட்டமாக இன்னும் யார் யார் எல்லாமோ வரப்போகிறார்கள். அதாவது இன்னும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வடபகுதிக்கு வரத் தொடங்கவில்லை. அதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கவும் இல்லை.

அவர்களும் வந்தால் நிலைமை இன்னும் பரவாயில்லாமல்தானிருக்கும்.

எல்லோரும் பார்ப்பதற்கு வன்னி ஒரு களமாகத்தான் இருக்கிறது. அது என்ன வகையான களம் என்பதுதான் இங்கே கவனிக்கவும் விளங்கியும் கொள்ள வேண்டியது.

http://ponguthamil.com/agappakkam/agappakkamcontent.asp?sectionid=7&contentid={0E10F0BB-D8E5-4A68-AFE2-133D0383E1F8}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.