Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண் பெண் நட்பு பற்றி இளந்தலைமுறையினரின் பார்வை ‐ சொக்கன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பெண் நட்பு பற்றி இளந்தலைமுறையினரின் பார்வை ‐ சொக்கன்

இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் மூன்று விதமான தலைமுறையினர் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.1984‐1985 வரை புலம்பெயர்ந்த தமிழர்களில் 50வயதிற்கு மேற்பட்டு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரக் குழந்தைகளைக் கண்டவர்களாகவும், திருமணத்திற்குரிய வயதை அடைந்த பிள்ளைகளைக் கொண்டவர்களாக ஒரு தலைமுறையினரும்.இiளுஞர்களாக திருமண வயதை அல்லது பருவ வயதை அடைந்த வயதுப்பிரிவினர் இரண்டாவது தலைமுறையினராகவும்,குழந்தைகள் அல்லது சிறுவர் என்ற மூன்றாவது தலைமுறையினராகவும் இருந்து வருகின்றனர்.

இன்றைய சமகால இளந்தலைமுறையினர் தமது அடுத்த வாழ்நிலையான திருமண வாழ்க்கை பற்றி சரிவரப் புரிந்து கொண்டிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவும் அச்சம் தருவதாகவும் அமைந்திருக்கின்றது. பொதுவாக பெற்றோர்கள் மத்தியிலும் சமூகப் பிரக்ஞை உள்ளவர்கள் மத்தியிலும்; திருமணத்தின் மூலமாக தொடங்கப்படும் இல்லற வாழ்வு பற்றி என்ன கருத்தை இளந்தலைமுறையினர் கொண்டிருக்கின்றார்கள் என்பது விவாதத்திற்குரியதாக இருக்கின்றது.

ஒரு காத்திரமான சமூகக் கட்டமைப்பிற்காக காலம் காலமாக பேணிப் பாதுகாக்கப்பட்ட திருமண ஒழுக்கவியல் மூலமான வாழ்வியல் இன்று இளந்தலைமுiறினரின் „தனிமனித சுதந்திரம்"என்ற உரிமை பேணலுக்குள் ஓரங்கட்டப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

திருமண வயதிற்குரிய ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்ற இணைப்பின் மூலம் ஒருவருக்கொருவர் உடலாலும் மனதாலும் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்கி வாழும் புனிதமான வாழ்க்கையை இன்றைய இளந்தலைமுறையினர் என்ன கண் கொண்டு பார்க்கிறார்கள் என்பதே சிந்திக்க வேண்டிய விடயமாகின்றது.

இன்று ஒரு இளைஞனும் ஒரு யுவதியும் ஒருவருடன் ஒருவர் பேசிப்பழகுவதை நட்பென முன்னிலைப்படுத்துகின்றனர். ஆனால் இந்த நட்பின் எல்லை எதுவரை என்பதை அவர்களே அறிந்த கொள்வதில்லை.அன்றிருந்த கட்டுப்பாடுகள் இன்றைய தலைமுறையினருக்கு உலகப் போக்குடன் ஒத்துப் போய் தானாகவே தளர்ந்து போயுள்ளன.

ஒரு இளைஞன் தன்னொத்த வயதுப் பெண்ணை நண்பியாக கொள்ள ஆசைப்படுகிறான்.அதே போல்தான் ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனை நண்பனாக கொள்ள ஆசைப்படுகிறாள்.நட்பு அதி உயர்ந்தது புனிதமானது என்ற ஒரு போக்கு இத்தகு நட்புகளை அங்கீகரிக்கின்றது.

இந்த இருவரின் மத்தியில் இருப்பது நட்பா காதலா என்பது அவர்களுக்கே தெரியாமல் அவர்களே தடுமாறும் போக்கு காணப்படுகின்றது.குறிப்பாக 13‐16 வயது வரை ஏற்படுகின்ற பாலியல் கிளர்ச்சிகள் எதிர்ப்பாலருடன் நட்புக் கொள்ள வேண்டும் என்ற உணர்விற்கு வழி வகுக்கின்றது.

இந்த வயதானது நட்பிற்குரிய கட்டுப்பாடான குணாம்சங்களைக் கொண்ட வயதே அல்ல.இந்த வயது திருமணத்திறகோ குடும்ப வாழ்விற்கோ எவ்விதத்திலும் ஏற்புடைய வயதல்ல. உணர்வுகள் பேதலித்து உணர்ச்சிகளின் உந்துதலுக்கு அடிமையாகின்ற வயதே இது.

இளந்தலைமுiறினரில் இன்னொரு போக்கும் மிகப் பரவலாகவே காணப்படுகின்றது.பழகிப் பார்ப்போம் பிடிக்காவிட்டால் விட்டுவிட வேண்டியதுதானே எனச் சொல்கிறார்கள்.ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருப்பது என்பது அந்த நட்பு அதீதமானால் அது காதலாகவே மாறும்.எத்தருணத்திலும் அறுந்து சிதைந்து விடக்கூடிய அபாயகரமான நூலிழை வித்தியாசமே நட்பிற்கும் காதலுக்குமிடையிலிருக்கின்றது.

பழகிப் பார்த்து திருமணம் செய்தல் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றின் ஒளிநாடா ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அதில் ஒரு ஆணுடன் நட்புக் கொண்டு தனக்கு தோதான கணவராக வருவதற்கு அவருக்கு தகுதியுண்டா என்பதை பழகிப் பார்த்ததன் பின்பே காதலாகி திருமணம் செய்து கொள்வதே சரியென வாதிட்டிருந்தார் ஒரு இளம் யுவதி.

இந்தப் பழகிப் பார்த்தல் என்பது நட்புடன் கூடியதா அல்லது காதலுக்குட்பட்டதா என்பதும் பழகிப் பாரத்தலின் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடைமுறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் பழகும் எல்லையைப் பொறுத்துமே அமைந்துவிடுகின்றது.

பழகிப் பார்க்கும் கால எல்லைக்குள் ஒருவருக்கொருவர் தத்தமது வீட்டின் அன்றாட நிகழ்வுகள் அத்தனையையுமே சொல்லி விடுவதுமுண்டு.பழகிப் பார்த்தல் நடைமுறை வௌ;வேறு விதமாக இருக்கின்றது.

கோப்பிக் குடிக்கச் செல்லுதல்,படம் பார்க்கச் செல்லல், பிரண்ட்ஸ்ஸோட சேர்ந்து போகிறோம் என்று பெற்றோருக்குப் பொய் சொல்லிச் செல்வது என்பனவும் உண்டு. எல்லை மீறிய நட்பு காதலாகி எல்லை மீறிய காதல் உடல் சார்ந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அமைந்து விடுவதுமுண்டு.

ஒரு வருடத்திற்கு முன்னர் இளந்தலைமுறையிரை பிள்ளைகளாக வைத்திருக்கும் சில பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தேன், பெண்பிள்ளைகளை பெற்றோர் அளவுக்கதிகமாகவே கண்காணிக்கிறார்கள் இது பெண்ணுரிமைக் கெதிரானதல்லவா எனச் சில பெண்கள் சொன்னார்கள். ஏன் பெற்றோர் பயப்படுகிறார்கள் என்பதையும் பெண்பிள்ளைகள் சார்ந்து நிற்கும் விடயத்தை வெளிப்படையாக சொல்லத் தயங்கினார்கள் எப்படிச் சொல்வது என்று சங்கடப்பட்டார்கள். எல்லை மீறிய நட்பால் சில சமயங்களில் பாலியல் தொடர்பு ஏற்பட்டால் அதனால் வரும் பார தூரமான விளைவுகள் பற்றியே பெற்றோர் பயப்படுகின்றனர் என நான் வெளிப்படையாகச் சொன்னேன்.அதுதான் உண்மை என அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஒரு இளந்தலைமுறை ஆணும் பெண்ணும் பழகிப் பார்த்து ஒத்துப் போகவில்லையென பிரிவார்களானால் இதில் பாதிக்கப்படுவது பெண் பிள்ளைகளே.திருமணம் என்று வந்தவுடன் தனக்கு மனைவியாக வரப் போகின்ற பெண் வேறு எந்த இளைஞனுடனும் எக்காலத்திலாவது நட்புக் கொண்டவளாக இருந்திருக்கக்கூடாதென்பதை தெளிவாகவே மனதில் வைத்திருக்கின்றான்.

இன்னும் சில இளைஞர்களும் யுவதிகளும் திருமணம் ஆகாமல் கணவன் மனைவியாக வாழ்வதையும் வாழ்வதில் தவறில்லை என்ற கருத்தை வைத்திருக்கிறார்கள்.

அதற்குக் காரணம் தனிமனித சுதந்திரம் என்ற உரிமைப் போக்கில் இளந்தலைமுறை ஆணும் பெண்ணும், ஒருவருக்கொருவர் ஆழமான தீவிரமான ஆண்‐பெண் நட்பு அல்லது காதலை மேற்கொண்டு ஏதோ காரணத்தால் பிரிந்து இன்னொரு திருமணம் செய்யும் போது அவர்களது குடும்ப வாழ்க்கையில் பழைய நட்பு அல்லது காதலின் சுவடுகள் பூதாகரமாக வெடிக்கின்றன.திருமண முறிவுகளும் ஏற்படுகின்றன.

இத்தகு நிலைமை தோன்றாமலிருக்க இளந்தலைமுறை ஆண் பெண் இரு பாலாரும் தமக்குள் ஒரு கடுமையான எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். புலம்பெயர் நாடுகளில் தன்னைத்தானே காத்துக் கொள்ளக்கூடிய பொருளாதார சூழ்நிலை அமைந்திருப்பதும் இத்தகு அவலங்களுக்கு காலாகின்றன என்றுகூட சொல்லலாம். பொருளாதார பாதுகாப்பினாமல் மட்டுமே நெறியான வாழ்க்கையை கொடுத்துவிட முடியாதென்பதை இளந்தலைமுறையினர் உணர வேண்டும்.

எனவே எமது இளந்தலைமுறையினர் தமது பருவ வயதில் கண்காணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோரும் கடுமையாக நடந்து கொள்ளாமல் பிள்ளைகளுடன் இயல்பாக பழகி ஒவ்வொரு வயதிலும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்

www.globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.