Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாகரைப் பிரதேசத்தில் தமிழ் மன்னனின் இராசதானி! தொல்பொருள் சான்றுகள் மூலம் நிரூபணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகரைப் பிரதேசத்தில் தமிழ் மன்னனின் இராசதானி! தொல்பொருள் சான்றுகள் மூலம் நிரூபணம்

www.tamilcnn.com

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச எல்லைக்குட்பட்ட காயங்கேணி கோபாலபுரம் தமிழ் கிராமத்தில் பண்டைய தமிழ் அரசன் ஒருவரின் இராசதானி இருந்தமைக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அரண்மனைக் கல் தூண்களின் சிதைவுகள், கல்வெட்டு,05 குளங்கள் என்பன கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டன.

புத்த பிக்குகள் கொஞ்சப் பேர் இக்கிராம மக்கள் சிலரின் உதவியுடன் அண்மைய நாட்களில் புதையல்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இது சம்பந்தமாக வாகரை பிரதேச செயலகத்துக்கு ஊரவர்களால் தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி அவருடைய சக அலுவலர்கள் சகிதம் குறித்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

* Click to open image! Click to open image! Click to open image!

* Click to open image! Click to open image! Click to open image!

* Click to open image! Click to open image! Click to open image!

* Click to open image! Click to open image! Click to open image!

* Click to open image! Click to open image! Click to open image!

* Click to open image! Click to open image! Click to open image!

* Click to open image! Click to open image! Click to open image!

* Click to open image! Click to open image! Click to open image!

*

அவர்கள் அங்கு இந்த தொல்பொருள் சான்றுகளை நேரில் கண்டு அதிசயித்தனர். பிரதேச செயலாளரின் உடன் நடவடிக்கையை அடுத்து அப்பகுதிக்கு தற்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் இந்த விடயத்தை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் நேரடிக் கவனத்துக்கு கவனத்துக்கு கொண்டு வந்தார். அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வெகு விரைவில் அந்த இடத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தவை வருமாறு:-

”வாகரைப் பிரதேச எல்லைக்குட்பட்ட காயாங்கேணி கோபாலபுரம் கிராமத்தில் இந்த இடம் இடம் முற்புதர்கள் நிறைந்து காணப்பட்டு வந்துள்ளது.

நீண்ட காலமாக இப்பிரதேச மக்களிடையே இங்கு ஏதோ வித்தியாசமான சக்தி இருக்கின்றது என்ற ஐயம் இருந்து வருகின்றதுது. நாங்களும் எங்களின் பிரதேச செயலகத்தால் இங்கு சென்று இங்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தோம். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவே இல்லை.

இதற்கிடையில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இப்பிரதேச மக்களிடையே பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டமையை அவதானித்தோம். பின்னர் அக்கிராம மக்களிடம் வினவிய போது குறித்த இடத்தில் புதையல் இருக்கின்றது எனவும் அங்கு இரவு நேரங்களில் சிலர் நடமாடுகின்றனர் என்றும் மக்கள் சொன்னார்கள்.

மறுநாள் சனிக்கிழமை வாகரைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் , நானும் அங்கு சென்றோம். அங்கு முற்புதர்கள் அதிகமாகவிருந்தன. ஜந்து அடி அகலமும் , ஒன்றரையடி உயரமும் கொண்ட பழைமை வாய்ந்த கட்டிடங்கள் இருந்தமைக்கான தடயங்களாக கருங்கற் தூண்கள் நிலத்துக்கு மேலே தெரிந்தன அதே நேரம் சில நாட்களுக்கு முன் மடை வைத்து பூசை செய்ததற்கான அடையாளங்களாக பூ, பழம், தேங்காய், எண்ணை, போன்ற பொருட்கள் அங்கு காணப்பட்டன.

இங்கு ஏதோ ஒரு விடயம் நடந்துள்ளது என்பதற்கான சந்தேகத்தை அவை எங்களுக்கு வலுப்படுத்தின. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இவ்விடத்துக்கு வந்து இன்னும் சில தூரம் உள் நோக்கிச் சென்றோம்.

அங்கு 2000 சதுர அடி பரப்பளவு கொண்ட 4 அடி அகலம் கொண்ட கருங்கல்லிலான அத்திவாரங்கள் தென்பட்டன. இன்னும் தூரம் உள்நோக்கிச் சென்றோம் அங்து சுமார் 25 பேர்ச் சுற்றளவு கொண்ட ஐந்து குளங்கள் தென்பட்டன.

அங்கு குழி ஒன்று புதிதாக தோண்டப்பட்டிருந்தது. இது பலத்த சந்தேகத்தை எங்களுக்கு தோற்றுவித்தது. இங்கிருந்து சிலர் புதையல்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என்கிற சந்தேகத்தை எமக்கு மேலும் வலுவடையச் செய்தது. இவை எமது பண்டையகால சொத்துகள்.இவற்றை பிறர் அபகரித்துச் செல்கின்றமையை அனுமதிக்க முடியாது.

அதே நேரம் அழிந்து விடாமலும் இவற்றைப் பாதுகாக்க வேணடடிய பொறுப்பு எமக்குண்டு. நாங்கள் வாகரைப் பொலிஸாரின் உதவியை நாடினோம் தற்போது இங்கு பொலிஸார் காவல் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரிடம் விபரத்தை கூறினோம்.

அவர் தொல்பொருள் ஆராச்சி திணைக்களத்தினருக்கு விடயத்தை தெரியப் படுத்தி உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்கக் கோரி உள்ளார்."

( கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகளின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. -தமிழ்- சி.என்.என் இற்காக செய்தியும் புகைப்படங்களும் பு.கேதீஸ்-)

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.