Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யோகி, பாலகுமாரன் எங்கே?.... நீடிக்கிறது மர்மம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோகி, பாலகுமாரன் எங்கே?.... நீடிக்கிறது மர்மம்!

புதன், 28 ஜூலை 2010 10:54 . .

அரச படையினரிடம் கடந்த வருடம் மே மாதம் சரண் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களான யோகரட்ணம் யோகி, கே.வி. பாலகுமாரன் ஆகியோர் எங்கே? என்கிற மர்மம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது.

சரண் அடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாமில் இந்த இருவரும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்திருக்கின்றார்.

அவர் இப்படி தெரிவித்திருக்கும் செய்தியை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk பிரசுரித்துள்ளது.

பாலகுமாரன், யோகி ஆகியோர் கடந்த வருடம் மே மாதம் அரச படையினரிடம் சரண் அடைந்துள்ள நிலையில் இராணுவத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள் என்று அக்காலப்பகுதியில் அரச தகவல் திணைக்களம் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இராணுவ விசாரணைகள் முடிந்த பிற்பாடு வழக்கு நடவடிக்கைகளுக்காக இருவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அரசுத் தரப்பில் இருந்து இந்த இருவர் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் அண்மைய நாட்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இருவரும் உயிருடன் இல்லை என்கிற தொனியில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர கருத்துத் தெரிவித்திருந்தாரென ஓரிரு வாரங்களுக்கு முன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் பி.பி.சிக்கு பேட்டி வழங்கிய அமைச்சர் அப்படி எதையும் தெரிவித்திருக்கவில்லையென்று கூறியமையுடன் இருவரைப் பற்றியும் தெரியாது என்று சொல்லிக் கையை விரித்து விட்டார்.

அரசின் ஊடகப் பேச்சாளரும் , ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவிடம் ஊடகவியலாளர் நேற்று இந்த இருவரின் நிலை தொடர்பாக கேள்விக்கணைகளை தொடுத்தனர். அமைச்சர் ஒருவாறு விக்கி, விழுங்கி, சமாளித்து அவருக்கே உரிய பாணியில் சுதாகரித்துக் கொண்டார்.

இந்நிலையில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தை மேற்கோள் காட்டி யோகி, பாலகுமாரன் அவரிடம் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கின்றார் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=7227:2010-07-28-11-03-11&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி ‐ கெஹலியவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி

28 July 10 01:37 am (BST)

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக ஏற்கெனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடாத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஊடகவியலாளர்கள் அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவிடம் இக்கேள்வியை எழுப்பியிருந்தனர்.

இந்தக் கேள்வியால் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல் திக்குமுக்காடிப் போனார்.

தன்னை சுதாகரித்து கொண்ட அமைச்சர் அவ்வாறான அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தேடியறிந்து பதிலளிப்பதாகவும் கூறினார்.

ஊடகவியலாளர் மாநாட்டின் கேள்வி நேரத்தின் போது, தமிழீழ விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் குறிப்பிட்ட இரண்டு புலி முக்கியஸ்தர்களின் மனைவிமார்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக உள்ளுர் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது அவ்வாறாயின் கைது செய்யப்பட்ட புலி முக்கியஸ்தர்கள் இருவரின் மனைவிகளும் விதவையானது எவ்வாறு என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

கேள்வியை மீண்டுமொரு தடவை கேட்குமாறு ஊடகவியலாளரிடம் கேட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடக அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என்பதுடன் விடயங்களை தேடியறிந்து பதிலளிக்கின்றேன் என்றார்.

இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹலுகல்ல, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் யு.என்.பீ மெதவெல, கடற்படை பேச்சாளர் கப்டன் செனரத், விமானப் படை பேச்சாளர் கப்டன் நாணயக்கார மற்றும் பொலிஸ் பேச்சாளர் ஜயகொடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக இம்மாதம் 10, 11. 12ஆம் திகதிகளில் முறையே யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா ஆகிய இடங்களில் போரினால் விதவைகளானோரைச் சந்தித்த அமைச்சர் டியூ. குணசேகர அந்த விதவைகள் மத்தியிலே விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பாலகுமாரன் மற்றும் யோகரட்ணம் யோகி ஆகியோரின் மனைவிமாரும் இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

இவ்விரு விடுதலைப் புலி உறுப்பினர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்

எனினும், அவர்கள் எங்கு வைத்து எப்போது கொல்லப்பட்டார்கள் என அமைச்சர் தெரிவித்திருக்கவில்லை.

இதேவேளை இவ்விருவரும் இலங்கை அரசாங்கத்தினரிடம் சரணடைந்திருந்தனர் என்றும் கொழும்பில் பெயர் குறிப்பிடப்படாத இடமொன்றில் வைத்து இவர்கள் மீது விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் படைவ ட்டாரங்களi மேற்கோள் காட்டி முன்னர் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆக, சரணடைந்த பின்னர் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்களா என்கிற கேள்வி தற்போது மேலோங்கியிருக்கிறது.

பேஇதன்காரணத்தாலேயே ஊடகவியலாளர் அமைச்சரவைப் ச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாக ஹெகலிய ரம்புக்வெலவிடம் அக்கேள்வியை எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=27774&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.