Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமணம் இன்று! ஏராளமானோர் கலந்து சிறப்பிப்பு (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Featured Replies

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது.

காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார்.

மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்து இருந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்து இருந்தார். சரியாக 8 மணிக்கு மண மகள் சவுந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்கின.

திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவினார்கள். தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் முகூர்த்த மந்திரம் ஓதப்பட்டது. ரஜினி- லதா காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அக்னியை சுற்றியும் வலம் வந்தனர். பின்னர் மணமக்களை ரஜினி மேடையில் இருந்து இறக்கி பார்வையாளர் வரிசைக்கு அழைத்து வந்தார்.

அங்கு உட்கார்ந்திருந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், டைரக்டர் பாலசந்தர், தெலுங்கு டைரக்டர் ராகவேந்திரராவ் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெறசெய்தார். திருமணத்தில் சம்பிரதாய முறைப்படி ரஜினி சிறிது நேரம் தலைப்பாகை அணிந்து இருந்தார்.

அம்மிமிதித்து அருந்ததி பார்த்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சிகளும் நடந்தன. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு தா.பாண்டியன், நல்ல கண்ணு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் சிவகுமார், பிரபு, பாக்கியராஜ், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்க டேஷ் ஆகியோரும் நேரில் வாழ்த்தினார்கள். நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூருடனும், நடிகை மீனா கணவர் வித்யா சாகருடனும் வந்து வாழ்த்தினார்கள். மேலும் வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:- கார்த்தி சிதம்பரம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், திருநாவுக் கரசர், டைரக்டர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, “சத்யஜோதி” தியாகராஜன், கலைப்புலி தாணு, ராம்குமார், நடிகர்கள் சுமன், சின்னிஜெயந்த், எழுத்தாளர் லேனா தமிழ் வாளான், நடிகை சுகாசினி, டைரக்டர் பி.வாசு, ரஜினி ரசிகர் மன்ற பிரமுகர்கள் சத்ய நாராயணா, பினோரா அசோக் மற்றும் ஏராளமா னோர் வாழ்த்தினார்கள். ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் மு.க. அழகிரி, ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “தினத்தந்தி” அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், “இந்து” என்.ராம், தொழில் அதி பர்கள் ஏ.சி.முத்தையா, ஏ.சி. சண்முகம், விஜி.சந்தோஷம், படஅதிபர் ஏ.வி.எம்.சரவ ணன், ஜேப்பியார், ஐசரி கணேஷ், முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால் மற்றும் ஏராள மான பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9602:2010-09-03-06-46-32&catid=39:2009-12-04-18-15-13&Itemid=398

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திருமண நிகழ்ச்சிக்கு அவர் ரசிகர்கள் யாரையும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டாராம் ரஜினி ... என்ன ஒரு மரியாதை !!

இந்த பதிவை பாருங்கள் :

ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்?

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது.

காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார்.

மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்து இருந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்து இருந்தார். சரியாக 8 மணிக்கு மண மகள் சவுந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்கின.

திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவினார்கள். தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் முகூர்த்த மந்திரம் ஓதப்பட்டது. ரஜினி- லதா காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அக்னியை சுற்றியும் வலம் வந்தனர். பின்னர் மணமக்களை ரஜினி மேடையில் இருந்து இறக்கி பார்வையாளர் வரிசைக்கு அழைத்து வந்தார்.

அங்கு உட்கார்ந்திருந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், டைரக்டர் பாலசந்தர், தெலுங்கு டைரக்டர் ராகவேந்திரராவ் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெறசெய்தார். திருமணத்தில் சம்பிரதாய முறைப்படி ரஜினி சிறிது நேரம் தலைப்பாகை அணிந்து இருந்தார்.

அம்மிமிதித்து அருந்ததி பார்த்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சிகளும் நடந்தன. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு தா.பாண்டியன், நல்ல கண்ணு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் சிவகுமார், பிரபு, பாக்கியராஜ், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்க டேஷ் ஆகியோரும் நேரில் வாழ்த்தினார்கள். நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூருடனும், நடிகை மீனா கணவர் வித்யா சாகருடனும் வந்து வாழ்த்தினார்கள். மேலும் வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:- கார்த்தி சிதம்பரம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், திருநாவுக் கரசர், டைரக்டர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, “சத்யஜோதி” தியாகராஜன், கலைப்புலி தாணு, ராம்குமார், நடிகர்கள் சுமன், சின்னிஜெயந்த், எழுத்தாளர் லேனா தமிழ் வாளான், நடிகை சுகாசினி, டைரக்டர் பி.வாசு, ரஜினி ரசிகர் மன்ற பிரமுகர்கள் சத்ய நாராயணா, பினோரா அசோக் மற்றும் ஏராளமா னோர் வாழ்த்தினார்கள். ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் மு.க. அழகிரி, ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “தினத்தந்தி” அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், “இந்து” என்.ராம், தொழில் அதி பர்கள் ஏ.சி.முத்தையா, ஏ.சி. சண்முகம், விஜி.சந்தோஷம், படஅதிபர் ஏ.வி.எம்.சரவ ணன், ஜேப்பியார், ஐசரி கணேஷ், முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால் மற்றும் ஏராள மான பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9602:2010-09-03-06-46-32&catid=39:2009-12-04-18-15-13&Itemid=398

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.