Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழிந்துபோன பெரிய தம்பனை கிராமம்

Featured Replies

வவுனியா மாவட்டத்திலுள்ள பெரியதம்பனை கிராமம் போரினால் முழுமையாகவே அழிந்து எலும்புக் கூடாகக் காட்சியளிக்கின்றது. கடந்த வாரம் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தக் கிராமத்துக்குச் சென்ற போது அதிர்ச்சியான காட்சிகளையே பார்க்க முடிந்தது. மீள்குடியேற்றம் என்பது வெறும் பெயரளவுக்குத்தான் என்பதையும் இங்கு காணக்கூடியதாக இருந்தது. மக்கள் எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தமது வாழ்க்கையை எவ்வாறு மீளக்கட்டியெழுப்புவது எனத் தெரியாது எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் உள்ளனர்.

பேரியதம்பனை கிராமம் பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்ந்துவருகின்றனர். இக்கிராமமானது 1948ஆம் ஆண்டு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டுவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முருகப்பிள்ளை மருதலிங்கம், சபாபதி, இராமநாதர் சகோதரர்களால் தம்பனைக்குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடுவெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது.

1955 இல் அரசாங்கம் 114 கொலனி வீட்டுத் திட்டத்தினை வழங்கியபோதும் இங்கு 30 குடும்பங்கள் மாத்திரமே குடியேறியது. 1956 இல் நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடிதீவு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் குடியேறியபொழுதிலும் நெடுந்தீவு மக்களே இங்கு தொடர்ந்தும் வசிக்கத் தொடங்கினர். 114 குடும்பங்களுடன் தொடங்கிய இந்தக்கிராமம் 1990 களில் 630 குடும்பங்களாகப் பெருகிற்று.

விவசாயத்தினைப் பிரதான ஜீவனோபாயமாகக் கொண்ட இக்கிரமத்தின் பிரதான குளமான தம்பனைக் குளம் 1957 ஆம் ஆண்டின் பெருவெள்ளத்திற்குப் பிறகு கரைகள் உயர்த்தப்பட்டு திருத்தியமைக்கப்பட்டது. இக்கிராமத்தின் நீர் ஆதாரமாக புளியடிமுறிப்பு, வேலங்குளம், கோலமோட்டைக்குளம் என்னும் குளங்களும் உள்ளன.

மக்களின் விழிப்புணர்ச்சியின் காரணமாக இக்கிராமம் 1957ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தினின்று தப்பிப்பிழைத்தது. 1983ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இம்மக்கள் பலமுறை இடப்பெயர்வுகளை மேற்கொண்டு மடுக்கோயில் தஞ்சமடைந்துள்ளனர். அவ்வப்பொழுது விவசாயம் செய்துவந்துள்ளபோதிலும் தொடர்ந்து இக்கிராமத்தில் தங்கியிருந்து தங்களது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கு இம்மக்களால் இயலவில்லை. 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட சமாதான உடனப்படிக்கையின் பின்னரும்கூட யாரும் இங்கு குடியேற முன்வரவில்லை.

06.08.2007ஆம் ஆண்டு முதல் இக்கிராமம் அரச படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபோதும் மோதல்களும் இடம்பெற்றன. இத்தருணத்தில் 114 கொலனிவீடுகள் உட்பட ஏனைய வீடுகள், பெரிய தம்பனை மகாவித்தியாலயம், அம்மன்கோயில், இரண்டு பிள்ளையார்கோயில்கள், அந்தோனியார் தேவாலயம் முதலானவைகள் விமானக் குண்டுவீச்சாலும் ஷெல் தாக்குதலினாலும் நேரடிச்சமரினால் துப்பாக்கிரவைகளாலும் துளைக்கப்பட்டு தரைமட்டமாயின.

சுமார் 400 மாணவர்கள்வரை கல்விபயின்றுவந்த பெரியதம்பனை மகாவித்தியாலய கட்டடம் சின்னாபின்னமாகியுள்ளதோடு தளபாடங்கள், கணனியறையின் குளிருட்டிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் யாவும் மண்ணோடு மண்ணாகியுள்ளன. தற்போது 11ஆசிரியர்களுடன் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதாகவும் பாடசாலையின் அதிபர் திருமதி. த.நாகலிங்கம் கூறினார். பெருந்தொiகையான மாணவர்கள் இன்னும் பாடசாலைகளுக்கு வரத் தொடங்கவில்லை.

சுமார் மூவாயிரம் வரையான தென்னைகள், கிட்டத்தட்ட இதே அளவிலான பனைகள், மா, மற்றும் பயன் தரும் மரங்கள் என்பன முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் வீடுதோறும் இருந்த கிணறுகள் கட்டு இடிக்கப்பட்டு தூர்க்கப்பட்டுவிட்டதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். ஆறாயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் இடம்பெயர்ந்தும் காணாமல் போயுள்ளதுடன் இறந்துமுள்ளன. இதனால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றார்கள்.

பெரியதம்பனை கிராமம் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் கேந்திரப்பிரதேசமாக விளங்குவதால் இப்பகுதியைத் தக்கவைத்துக் கொள்ள யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்பினருமே முனைப்புக் காட்டினர். இதனால் இக்கிராமத்தில் நீண்டகாலம் சமர் தொடர்ந்தது. ஒட்டுமொத்தத்தில் இக்கிராமம் இரண்டாம் உலகப்போரில் சிதிலமடைந்த ஐரோப்பிய கிராமங்களில் ஒன்றுபோல் பயங்கரமாகக் காட்சியளிக்கின்றது.

இக்கிராமத்தின் அனைத்து வீதிகளும் திருத்தியமைக்கப்பட்டு புதிய தார்ச்சாலைகள் அமைத்துக்கொடுக்க வேண்டும், மின்சார இணைப்புப் பெற்றுக்கொடுக்க வேண்டும் கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டு கிணற்றின் கட்டுக்கள் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு அரணுக்காகப் போடப்பட்ட மண்பண்டுகளை அகற்ற வேண்டும், இரண்டு வீடுகளில் முகாமிட்டுள்ள பாதுகாப்புப் படையினர் வெளியேற வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோருகின்றார்கள்.

ஏனைய மீள்குடியேற்ற கிராமங்களைப் போன்றே இங்கும் மருத்துவ சேவை பின்தங்கியே உள்ளது. குறைந்தபட்சம் வாரம் இருமுறையாவது நடமாடும் மருத்துவசேவை இடம்பெற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மிகவும் முக்கியமாக டெங்கு, மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சேதமுற்றுள்ள கழிவறைகளைத் திருத்திக்கொடுக்குமாறும் மக்கள் கோருகின்றனர்.

தற்பொழுது இக்கிராமத்தில் 275 குடும்பத்தினர் மீள்குடியேறியுள்ளனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளில் 5,000 ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை இன்னமும் வழங்கப்படாதுள்ளது. இந்திய மக்களின் அன்பளிப்பு என்று அச்சிடப்பட்ட பெட்டியில் அடங்கியிருந்த மண்வெட்டி, காட்டுக்கத்தி, கல்வாரி போன்ற உபகரணங்கள் தரமற்றவைகளாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பொது மக்கள், பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர் மற்றும் ப.நோ.கூ.ச முகாமையாளர் ஆகியோரின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

"உங்களது குறைகள் மற்றும் நெருக்கடிகளை உங்களிடமிருந்து கேட்டறிந்துள்ள நான் உங்கள் தேவைகளைப் ப10ர்த்தி செய்வதற்கு ஆவன அனைத்தையும் மேற்கொள்வேன். ஜனாதிபதி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடத்தில் உங்கள் பிரச்சினைகளை முன்வைப்பேன். இந்திய அரசாங்கம் .4,25,000 ரூபா மதிப்பிலான வீடுகளை நிர்மாணிக்கவுள்ளது.

மீள்குடியேறியோருக்கான பணிகளை மேற்கொள்ள 32 தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருக்கின்றது. நீர்ப்பம்பிகள் வழங்குவதற்கு நிறுவனங்களின் மூலம் நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் மாரிக்காலத்திற்கு முன்பாக தென்னங்கன்றுகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றேன்" என்றும் கூறினார்.

"இடம் பெயர்ந்த மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் விசேட கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம். யுத்தத்தின் பின்பு அரசிடம் நிதியில்லை. வெளிநாடுகள் நிபந்தனைகளுடன் உதவி வழங்கத்தயாராக உள்ளன. இந்தியாவிற்கு இலங்கை அரசின் தலைவர்கள் சென்றுள்ளனர். அரசியல் தீர்விற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கின்றது. ஜனாதிபதியிடம் தடுப்பு முகாமிலுள்ளோருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறும் அனைவரையும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்குமாறும் கோரியுள்ளோம்.

அவசரக் காலச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்றும், விரைவான அரசியல் தீர்வு காணுமாறும் அரசை வெளிநாடுகள் நிர்ப்பந்திக்கின்றன. விரைவில் கட்டுப்பாடுகள் தளரலாம். இழப்பதற்கு இனி ஏதுமற்ற எமக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம். உங்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்கின்றேன். உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எமது பிராந்திய அலுவலகத்தை நாடலாம்"என்றும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

வன்னியில் போரினால் அழிந்துபோயுள்ள கிராமங்களுக்கு பெரியதம்பணை ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற பல கிராமங்கள் வன்னியில் அழிந்துபோயுள்ளன. அவை அனைத்தும் எப்போது மீளக்கட்டிnயீப்ப்படும். மக்கள் எப்போது புத்துயிர் பெறப்போகின்றார்கள்? இவற்றை மீளக்கட்டியெழுப்புவதற்கான திட்டங்களோ அல்லது விருப்பமோ அரசுக்குள்ளதா? எல்லாம் கேள்விக்குறிகளாக மட்டுமே உள்ளன!

படங்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்

நன்றி பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.