Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவிகளை ஏமாற்றி 200 பவுன் நகை பறிப்பு: மோசடி ஆசிரியர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Featured Replies

கோவையை அடுத்த அன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் முஜிந்தர் (வயது 32). இவர் மாணவிகளை ஏமாற்றி 200 பவுன் நகை பறித்த வழக்கில் கோவை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

மோசடி ஆசிரியர் முஜிந்தர் போலீசில் சிக்கியது குறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது:-

கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கார் விற்பனை நிறுவனத்திற்கு முஜிந்தர் மனைவி ராதாமணி, குழந்தைகள் கார் வாங்க வந்தார். ரூ. 10 ஆயிரம் முன்பணம் கொடுத்தார். தன்னை அரசு ஆசிரியர் தேர்வாணைய குழு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். காரை ஓட்டி பார்ப்பதாக கூறி, மனைவி, குழந்தையுடன் புது காரை கடத்தி சென்றுவிட்டார். இதில் ஏமாந்துபோன நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து முஜிந்தரை தேடினோம்.

இந்த சம்பவம் 24.7.10-ல் நடந்தது. அவர் கொடுத்த செல்போன் நம்பர் மூலம் அவரை கண்காணிக்கும்படி கோவை மாநகர சைபர் குற்றபிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் முஜிந்தர் 16 சிம்கார்டுகளை மாற்றி பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சிம்கார்டுகளை 8 வேறு விதமான மொபைல் போன்களில் பேசியதும் தெரிய வந்தது. கடைசியாக அவர் இருக்கும் இடம் செல்போன் மூலம் சிவகாசி அடுத்த ஈஞ்சம் என்ற கிராமம் என்று தெரிய வந்தது. அவரது செல்களில் இருந்து சேகரித்த எண்களில் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களின் எண்கள்தான் இருந்தது. அங்கு சென்று விசாரித்தபோது அவர் வேலைக்கு சேர்வதற்காக கொடுத்த ஆவணத்தின் மூலம் அவரது சொந்த ஊரான ஈஞ்சத்தில் முஜிந்தர் வீட்டின் முகவரி சிக்கியது. அவரை மிகவும் ரகசியமாக பின் தொடர்ந்து வீட்டிற்கு சென்று கோவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கார் கடத்திய நாளில் இருந்து இன்றுவரை பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாலும் கடந்த 7 வருடங்களாக தமிழகம் முழுவதும் 40 வழக்குகளில் தேடப்பட்டு வந்த மெகாமோசடி ஆசாமி என்பது தெரிய வந்தது. அவரிடம் சில மணி நேரம் நடந்த விசாரணையிலேயே அவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. முஜிந்தர் கணக்கு ஆசிரியராக வேலையை தொடங்கி உள்ளார். அவர் கணக்கு பாடத்தில் மிக திறமையாக செயல்பட்டதால் அதை துருப்புசீட்டாக கொண்டே பல்வேறு மோசடிகளை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளார். புதுக்கோட்டையில் ஒரு வீடு எடுத்து தங்கி டியூசன் எடுத்துள்ளார். 3 மாதத்தில் இவரை விட்டால் கணக்கு சொல்லி கொடுக்க ஆளே கிடையாது என்பது போல் அந்த பகுதி முழுவதும் பிரபலமாகிவிட்டார். 150 மாணவிகள் டியூஷன் படித்துள்ளனர்.

இதை கேள்விப்பட்டு அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்று எவ்வளவு சம்பளம் வேண்டுமானலும் தருகிறோம் என்று இவரை பற்றிய விவரம் ஏதும் தெரியாமலேயே பணிக்கு அமர்த்தி உள்ளது. அந்த பள்ளிக்கூட மாணவிகள் மட்டுமல்லாமல் முஜிந்தர் பணிபுரிந்த 10-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் மாணவிகளிடம் மயக்கும் விதமாக பேசி தன்னை ஒரு ஆராய்ச்சியாளன் என்று கூறி 200 முதல் 250 பவுன் நகைளை கொள்ளையடித்திருக்கலாம் என்று கருதுகிறோம்.

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் இருந்து மொத்தம் ரூ. 3 லட்சம் வாங்கி கொண்டு தலைமறைவாகி உள்ளார். ஏற்கனவே போர்டு கார் ஒன்றையும் கடத்திய வழக்கில் தொடர்பு உள்ளது. பொதுவாக மாணவிகளிடம் பேசும்போது தன்னை நம்பும்படியாக மிகவும் நயத்துடன் பேசி ஏமாற்றி உள்ளார். பொள்ளாச்சியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது அதே பள்ளியில் படித்து வந்த ராதாமணி என்ற மாணவியை மயக்கி திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ராதாமணியும் அவருடன் சேர்ந்து மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார். மோசடி செய்த நகைகள் மற்றும் பணம் மூலம் சிவகாசியை அடுத்த ஈஞ்சம் கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை அறையுடன் சொகுசு பங்களா கட்டி உள்ளார். உடுமலையில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு ஒன்றையும் விலைக்கு வாங்கியுள்ளார். அவரது வீட்டில் மாநகர குற்றபிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். துப்பு துலக்குவதில் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. சொத்து ஆவணங்கள் பறிமுதல்: மோசடி ஆசிரியர் வீட்டுக்கு சீல் மோசடி ஆசிரியர் முஜிந்தரின் சொந்த ஊரான ஈஞ்சத்தில் உள்ள சொகுசு பங்களாவில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் அவர் மோசடி செய்து சேர்த்த சொத்துகளுக்கான ஆவணங்கள், நகைகள், சான்றிதழ்கள், போலி பெயரில் பயன்படுத்திய சான்றுகள் போன்றவை சிக்கின. மாணவிகளிடம் அவர் நகைகள் மட்டுமின்றி ஆடைகளையும் வாங்கி உள்ளார். அவற்றையும் போலீசார் கைப்பற்றினர். நகைகளில் சிலவற்றை தனது மனைவிக்கு அணிய கொடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதங்னகள் 16 சிம்கார்டுகளுக்கான பில்கள், 8 செல்போன்களையும், 1 காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு விசாரணைக்கு வசதியாக முஜிந்தரின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். அவரது மனைவி, குழந்தை இருவரும் பெண் போலீசார் பாதுகாப்பில் உள்ளனர். முஜிந்தரின் வங்கி கணக்குகளை முடக்கவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் முஜிந்தரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறினார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10522:-200-&catid=37:2009-12-04-18-14-29&Itemid=396

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.