Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை

Featured Replies

வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை ( 04 ஐப்பசி 2010 ) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பம்

வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளையிலேயே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை சட்டத்தரணிகள் சங்கமும் எதிரணிக் கட்சிகளும் இணைந்து நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளுடன் சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கருஜயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேகர,கயந்த கருணாதிலக்க, ரோசி சேனாநாயக்க, சந்திராணி பண்டார, ஜனநாயகத் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துநெத்தி,டிரான் அலஸ் ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன், இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன மற்றும் எதிரணி மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அனோமா பொன்சேகா உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் எண்ணெய் விளக்கேற்றி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் உயர் நீதிமன்ற நுழைவாயிலிருந்து பிரேமதாஸ சிலை அமைந்துள்ள இடத்தை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். இவ்வேளையில், வெலிக்கடை சிறையிலிருந்து சரத்பொன்சேகா நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை வளாகத்தில் அழைத்து வரப்பட்டார். அவ்வேளையில் ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் அந்த வாகனத்தைச் சூழ்ந்த வண்ணம் கோஷமெழுப்பிய வண்ணமிருந்தனர். அந்த இடத்தைவிட்டு வாகனம் நகர முடியாமல் சுமார் 10 நிமிடத்துக்கும் மேலாக அப்படியே நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊர்வலம் திரும்பி நீதிமன்றக் கட்டிடத் தொகுதி வரை செல்லத்தொடங்கியதும் அதன் பின்னால் சரத்பொன்சேகாவை அழைத்து வந்த வாகனமும் மெதுவாக ஊர்ந்து சென்றது. சுமார் 20 நிமிடங்களின் பின்னர் வாகனம் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தது.

அதன் பின்னர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக நின்று நீண்டநேரம் அரசுக்கு எதிராக கோஷமெழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. எனினும் நீதிமன்ற வளாகம் அமைந்திருந்த புதுக்கடைப் பிரதேசமெங்கும் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கலகத்தடுப்புப் பொலிஸாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஜெனரல் சரத்பொன்சேகா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட வேளையில் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் வரை வாகனப் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கரு ஜயசூரிய நேற்றுக்காலை 9.30 மணியளவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று சரத்பொன்சேகாவைச் சந்தித்து உரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்தது.

http://www.sankamam.com/beta/index.php/news/eelam-srilanka/930-2010-10-05-02-21-26.html

Edited by akootha

  • தொடங்கியவர்

இந்த வழக்கின் முதல் சாட்சியாக சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் பிராடேடிக ஜான்ஸ் ( Ms. Fredica Janz ) சாட்சியமளிக்க உள்ளார். இந்த வழக்கு மூன்று பேர் கொண்ட அதி உயர் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்பட்ட உள்ளது.

முன்னை நாள் இராணுவத்தளபதி பொன்சேகா, சரணடைந்த சகல விடுதலப்புலிகள் போராளிகளையும் பாதுகாப்பு செயலாளர் சுட்டுகொல்லுமாறு உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகைக்கு கூறியிருந்தார்.

http://tamilnet.com/art.html?catid=13&artid=32737

  • தொடங்கியவர்

சரணடையும் புலிகளை சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் உத்தரவு பிறப்பித்தார் - பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் ஆசிரியர் சாட்சி

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருகின்ற விடுதலைப்புலித் தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்­வே பிரிகேடியர் சவீந்திர சில்வா வுக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் நேற்று நீதி மன்றத்தில் தெரிவித்தார்.

வன்னி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலித் தலைவர்களைச் சுட் டுக் கொன்றமை குறித்து சரத் பொன்சேகா தெரி வித்த கருத்துத் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை இடம்பெற்றது. இவ் வழக்கு விசாரணைக்கு சரத் பொன்சேகா அழைத்து வரப் பட்டிருந்தார்.

நீதவான் தீபாலி விஜயசுந்தர, டபிள்யூ.டி.எம்.பி.வார வெல மற்றும் எம்.இசாட் ரசீம் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் சாட்சியமளித்தார்.அந்தச் சாட்சியில் அவர் பின் வருமாறு தெரிவித்தார்,

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அத் தேர்தலில் வேட்பாளரான சரத் பொன்சேகாவின் வாழ்க்கைக் குறிப்பைத் தொகுப்பதற்காக அவரைச் செவ்வி காணத் திட்டமிட்டேன்.அச் செவ்வியின் இறுதியில், போரின் கடைசிக் கட்டத்தில் என்ன நடந்தது? எனக் கேள்வி ஒன்றைக் கேட்டேன்.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் குழு வொன்று சரணடைய வருவதாகவும் அவர்களைச் சரணடைய விடாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்குப் பாதுகாப்புச் செயலாளர் தொலை பேசி மூலம் உத்தர விட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்தது எனப் பொன்சேகா கூறினார்.அது பரபரப்பான தகவல் என்பதால் அதை அவ்வாறே சண்டேலீடர் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக்குவதற்குத் தீர்மானித்தேன்.

அச் செய்தியை வெளியிடுவதற்கு முதல் நாள் சரத் பொன்சேகா வுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்துத் தெரி வித்தேன். அவர் பிரச்சினையில்லை என்றார்.இவ் விடயம் குறித்துப் பிரிகேடியர் சவீந்திர சில்வா மற்றும் அப்போதைய இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் இச் சம்ப வத்தை நிராகரித்தனர் என்றார்.இவ் வழக்கு மீண்டும் நாளை விசாரிக்கப்படவுள்ளது.

[ வலம்புரி ] - [ Oct 05, 2010 04:00 GMT ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.