Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சட்டவிரோதமாக 20 ஆயிரம் வெளிநாட்டவர்

Featured Replies

இலங்கையில் சட்டவிரோதமாக சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆங்கில ஊடகமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

உரிய அங்கீகாரமில்லாமல் இவர்கள் தொழிலாளர்களாகவும் வீட்டுப் பணியாளர்களாகவும் சமையல்காரர்களாகவும் பரிசாரகர்களாகவும் பணிபுரிவதாகவும் பல்வேறு நகரங்களிலுள்ள உணவுச் சாலைகளில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் புள்ளி விபரம் "உத்தியோகபூர்வ மதிப்பீடு" என்று கூறியுள்ள அந்த ஊடகம் அதேசமயம் உண்மையான தொகையை நாட்டின் குடிவரவுத்துறைத் தலைவர் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

"நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போர் தொடர்பாகக் குறிப்பிட்ட சோதனைகளை நாம் முன்னெடுத்திருக்கிறோம்" என்று குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் சூலாலநந்த பெரேரா கூறியதாக அந்த ஊடகம் மேற்கோள்காட்டியுள்ளது. "மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக நான் விபரிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதே இது கடினமானதாக்கிவிடும்" என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளும் வசதிகள் 85 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிலர் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் முன்கூட்டியே விசா அனுமதி பெற்று வந்த வெளிநாட்டவர்கள் விசா முடிந்த பின்னரும் அதிக காலம் தங்கியிருப்பதும் பணியாற்றுவதும் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் போன்ற துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் உல்லாசப் பயணிகள், சேவைத் துறையை நாடுவோர் அதிகளவுக்குச் செல்லும் இடங்களாக இருப்பதுடன் அந்நாடுகளைச் சென்றடைந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளும் வசதிகளும் உள்ளன. தெற்காசியாவுக்கான சுற்றுலா, சேவைத்துறையை வழங்கும் நாடாக வருவதற்கான அபிலாஷைகளை இலங்கையும் கொண்டுள்ளதுடன் சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்துவருகிறது.

சட்ட ரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ பணியாளர்கள் செல்வத்தை விருத்தி செய்ய உதவுகின்றனர். பரஸ்பர அனுகூலமான ஒப்பந்தத்தின் பிரகாரம் சேவைகளை வழங்க அவர்கள் முன்வருகின்றனர்.

விசாக் காலம் முடிவடைந்த பின்னரும் அதிக காலத்துக்குத் தங்கியிருப்பது குற்றமாகும். ஆனால், வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படும் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. பாதிப்பில்லாத குற்றங்களை குற்றமற்றவையாக்க வேண்டுமென சுதந்திரமான சமூகங்கள் விரும்புகின்றன.

இத்தாலி போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் சட்டவிரோதமாகப் பணியாற்றி பெருந்தொகைப் பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் சட்ட ரீதியாக வேலை செய்து வரியும் செலுத்துகின்றனர். வரிக் கணக்கைத் திறப்பதற்கு குடியேற்றவாசி என்ற அந்தஸ்தைப் பிரகடனப்படுத்த வேண்டிய தேவை இல்லை. சட்டத்திற்கு அமைவாகச் செயற்படுவோரின் குடிவரவுத்துறை அந்தஸ்தை

விசாரிக்க வேண்டும் என அமெரிக்காவிலுள்ள பொலிஸாரிடம் எதிர்பார்க்கப்படவில்லை. தொழிலாளரின் சுதந்திரமான நடமாட்டத்துக்குத் தடையாக வேலை செய்வதற்கான அனுமதிப்பத்திரமே உள்ளது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் விசாவில் நாட்டை வந்தடையும் வெளிநாட்டு பாலியல் வர்த்தகப்பணியாளர்களுக்கு எதிராக இலங்கைக் குடிவரவுத் துறை அதிகாரிகள் காலத்துக்குக்காலம் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

புறக்கோட்டை பகுதியில் சில வர்த்தகத் துறையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கடுமையாக உழைப்பதாலும் மதுபாவனை போன்றவற்றால் தொழிலுக்கு வருகை தராமல் இருப்பதில்லை என்பதால் மற்றும் அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் அவர்களைப் பணிக்கமர்த்துவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் அவற்றின் சனத்தொகையிலும் பார்க்க வெளிநாட்டு பணியாளர்கள் அதிக தொகையினராக உள்ளனர். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் சட்டரீதியாக வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=5366&catid=1

==========================================================

மேலே குறிப்பிடப்பட்ட ஆங்கில பத்திரிகையின் இணையத்தள செய்தி

http://www.sundaytimes.lk/101017/News/nws_01.html

Edited by akootha

  • தொடங்கியவர்

பாகிஸ்தானில் இருந்தும் கொழும்பை அடைந்தவுடன் விசா எடுக்க கூடிய வசதி உள்ளதால் கீழ்வரும் செய்தி மேலுள்ளதுடன் ஒருவகையில் தொடர்பு பட்டதுதான், பீரிசார் மறுத்தாலும்.

லஸ்கார் இதொய்பா இலங்கையை தளமாக பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை பேராசிரியர் பீரிஸ்

தீவிரவாத அமைப்பான லஸ்கார் இதொய்பா பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்க இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துகின்றது எனத் தெரிவிப்பது தொடர்பாக எந்தவொரு ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

நான்கு நாள் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த அமைச்சர் பீரிஸ், இவ்வாறு கூறுவதில் பிரயோசனமான தன்மை கிடையாது என்று நேற்று முன்தினம் சனிக்கிழமை கூறியதாக "ரைம்ஸ் ஒவ் இந்தியா" பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

இலங்கையில் லஸ்கார் இதொய்பா இயக்கத்தினர் பயிற்சி பெற்றதாக பூனே பேக்கரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முன்னர் கூறியிருந்தார்.

"இந்த விடயம் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை எமது பாதுகாப்பு அதிகாரிகள் பரிசீலித்திருந்தனர். ஆனால், அது தொடர்பாக நாம் எதனையும் கண்டறிந்திருக்கவில்லை. அந்த மாதிரியான ஏதாவது நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான புலனாய்வுத் தகவல் பரிமாற்ற பொறிமுறையில் இருநாடுகளும் ஈடுபட்டிருந்தன" என்றும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார்.

பூனே பேக்கரி குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவர் தெரிவித்திருந்தமை தொடர்பாக இந்திய பாதுகாப்பு முகவரடைப்புகள் இலங்கை பாதுகாப்பு முகவரமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தன. கொழும்புக்கு சமீபமான இடத்திலேயே பயிற்சி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அப்பகுதி கடும் பாதுகாப்பு பிரசன்னமான இடம் என்று கூறி அதனை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

இதேவேளை, சீனாவுக்கு நெருக்கமாக இலங்கை செல்வது அதிகரித்துவரும் விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இந்தியாவுடன் கொழும்பு தொடர்ந்து விசேடமான உறவைக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்திவருகின்ற அதேசமயம் இந்தியாவுடன் விசேட உறவைப் பேணும் என்று கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு எதிராக இலங்கை மண்ணை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் பீரிஸ் கூறியிருக்கிறார்.

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=5367&catid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.