Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் சிறைகளிலுள்ள வெளிநாட்டுக் கைதிகள் திருப்பி அனுப்பப்படுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் சிறைகளிலுள்ள வெளிநாட்டுக் கைதிகள் திருப்பி அனுப்பப்படுவர்

திங்கட்கிழமை, 08 நவம்பர் 2010 18:01

பிரிட்டிஷ் சிறைகளிலுள்ள வெளிநாட்டுக் கைதிகள் எஞ்சிய தண்டனைக் காலத்தை தமது சொந்த நாடுகளில் கழிக்கக் கூடியதாக அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் படவுள்ளனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பிரிட்டிஷ் சிறைகளிலிருந்து தமது சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

பிரிட்டிஷ் அரசாங்கம் அண்மையில் அறிமுகம் செய்த செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக இந்த நடவடிக்கைப் பின்பற்றப்படவுள்ளது. இதற்கு இசைவாக பிரிட்டனில் தண்டனை விதிக்கப்படும் ஒரு கைதியை அவரின் விருப்பமின்றி சொந்த நாட்டுக்கு அனுப்பமுடியாது என்று இதுவரையயில் அமுலில் இருந்த உடன்படிக்கைகளை பிரதம மந்திரி டேவிட் கமரூன் கிழித்தெரியவுள்ளார்.

பிரிட்டிஷ் சிறைகளிலுள்ள கைதிகளுள் ஏழு பேருக்கு ஒருவர் வெளிநாட்டவராவார்.இவர்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.ஆனால் இந்த முயற்சி எந்தளவு வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குறியே. காரணம் கைதிகள் சட்டத்தரணிகள் ஊடாக இந்த முயற்சிக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பக்கூடும்.

பிரிட்டன் சிறைகளில் 11135 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இவர்கள் கொலை கொள்ளை மற்றும் போதைப் பொருள் போன்ற பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள்.இதில் ஒருவருக்கான பராமரிப்புச் செலவு வருடாந்தம் 38000 ஸ்ரேலிங் பவுண்களாகும்.அண்மைய செலவுக்குறைப்புத் திட்டத்தின்படி 2014ல் சிறையில் உள்ளவர்களின் உண்ணிக்கையை மூவாயிரத்தரல் குறைக்கவேண்டியுள்ளது.

tamilcnn.com

பிரித்தானிய அரசிடம் சில கேள்விகள்.

ஒரு பக்கம் மகிந்தர் போர்க்குற்றம் செய்தவர் என சொல்லுகிறீர்கள் மறுபக்கம் அவரே கொடுங்கோல் ஆட்சி செய்யும் நாட்டுக்கு புகலிடம் தேடிவந்த தமிழர்களை அனுப்புவேன் என்கிறீர்கள். உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான நீங்களே இப்படி செய்யலாமா?

மேலும், நீங்கள் தான் எமது இந்த அவலங்களுக்கு எல்லாம் மூல காரணம். 1948ஆம் ஆண்டு இரண்டு

நாடுகளாக பிரித்து கொடுத்து சென்றிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. எனவே உங்கள் பாவத்தை புண்ணியமாக்கி நாட்டில் முதலில் ஒரு அரசியல் தீர்வை கொண்டுவாருங்கள். பின்னர் தமிழர்களை அனுப்பலாம்.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக் கைதிகள் அவரவர் நாடுகளுக்குத் திரும்பினால் £1,500 !! - பிரிட்டன் அளிக்கும் ஜாக்பாட்

புதன், 10 நவம்பர் 2010 11:47

வெளிநாடுகளிலிருந்து வந்து கொலை , கொள்ளை, பாலியல் வல்லுறவு ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு பிரிட்டனில் சிறை தண்டனை பெற்று வரும் கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு £1,500 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிரிட்டன் சிறைகளில் கூட்டம் அதிகமாகி விட்டதாலும் சிறை பராமரிப்பிற்கென பல ஆயிரக்கணக்கான பவுண்டுகளை ஆண்டு தோறும் செலவிட வேண்டிய நிலை இருப்பதாலும் வெளி நாட்டுக் கைதிகள் திருப்பி அனுப்பப்பட்டு அவரவர் நாட்டிலேயே எஞ்சிய தண்டனைக் காலத்தை அனுபவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தங்கள் நாடுகளுக்குத் திரும்பும் கைதிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் தற்போது இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 1500 பவுண்டுகளில் 500 பவுண்டுகள் கைதிகள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும் போது வங்கி அட்டையாக கொடுக்கப்படும். இந்த அட்டையை பயன்படுத்தி உலகம் முழுதிலும் உள்ள எந்த நாட்டின் எ.டி.எம்மிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

மீதமுள்ள 1000 பவுண்டுகள் பிரிட்டன் மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட கைதிகளின் வங்கிக் கணக்குகளில் சேர்ப்பிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

tamilcnn.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.