Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒன்று படு தமிழா! ஒன்றுபடு!

Featured Replies

இதுக்குத்தான் கூறுவது புலிகளின் சேவை நாட்டிற்கு தேவை

இனிமேல் உங்களையெல்லாம் எவர் வந்துகாப்பாற்றபோகிறார்கள்?யாழ் மக்களின் காணிகள் பறிமுதல்

வியாபாரம் பறிமுதல்

கருணாவை ஆயுதம் வைத்திருந்ததாகவும் அவைகாணாமல் போய்விட்டதாகவும் கூறி தற்போது விசாரணை செய்ய முடிவு

டக்கிளசை ஒதுக்க திட்டம்

அரசின் எந்த ரகசியங்களும் இந்தியாவுக்கு கசியகூடாது என்பதில் திட்டவட்டம்

கிழக்கில் ஈரான் அரசின் நேரடி செலவில் 150 ஏக்கர் மக்களின் நிலத்தில் அமைக்கபடும் சர்வதேச தரத்திலான சர்வதேச யாத்திரிகர்களுக்கான மசூதி(இங்கு பயிற்சிக்காக அல்லது பயிற்சி பெற்ற 21பேர் கைதுசெய்யபட்டார்கள் இவர்களனைவரும் பங்களாதேஸ் மற்றும் பாக்கிஸ்தானை சேர்ந்தவர்கள்)

சென்றவாரம் முதல் திருகோணமலையில் மக்கள்கள் வியாபாரிகள் மேல் ஆரம்பிக்க பட்ட உளவியல் யுத்தம்

மலையக இளைஞர்கள் ஆயுத பயிற்சி பெற்றதாக கூறி அவர்கள் மீது ஆரம்பிக்க படவிருக்கும் உளவிய மற்றும் பொருளாதார நெருக்கடி

தமிழ் பெண்களை எப்ப வேண்டுமானாலும் ராணுவமோ பொலிஸோ கற்பழிக்கலாம்

தமிழனை எப்ப வேண்டுமானாலும் கடத்தலாம்

தேவைப்பட்டால் கொலையும் செய்யலாம்

காணாமல் போவோருக்கான மரண சான்றிதழ் வழங்கும் நடைமுறை(கொன்றபின் சான்றிதழ் வழங்கலாம் அல்லது வழங்கிவிட்டும் கொல்லலாம் என்கின்ற நடைமுறை)

புலம் பெயர்ந்த மக்களின் மத்தியில் உருவாக்கபட்டிருக்கும் அரசியல் பிரிவுகள்

தமிழரின் இரத்தம் தோய்ந்த கைகளினால் வழங்கபடும் பணத்தை பெற்று இலங்கை அரசுசார்பான மக்களை குழப்பும் வகையில் செயல்படும் புலம்பயர் ஊடகங்கள் முதலில் வானொலிகள்(இவர்களுக்கு வழங்கப்படும் பணம் தங்கள் தாய் சகோதரிகளை ராணுவத்தினருக்கு கூட்டிகொடுப்பதற்காக வழங்கபடுகிறது என வைத்தி கொள்வோம் மொத்தத்தில் மாமா அல்லது புறோக்கர்)

மொத்தத்தில் இலங்கையில் தமிழன் அழியப்போகின்றான்!அழிக்கபடுகிறான்!அழிகிறான்!

ஒன்று படு தமிழா! ஒன்றுபடு!

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

கனடிய அகதிகளின் சட்டத்திற்கான ஆதரவுக் கடிதங்களில் குழப்பம்: குளோப் அன்ட் மெயில்

கனடாவின் கன்சவேட்டிவ் அரசு பெரும் எதிர்ப்புக்களிடையே நடைமுறைப்படுத்த முயலும் சி-49 என்ற சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெறப்பட்ட கடிதங்கள் போலியானவைகள் என்றும் குழப்பம் நிறைந்தவை என்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையான குளோப் அன்ட் மெயில் இன்று சுட்டிக் காட்டியுள்ளது.

இச் சட்டத்தை எதிர்ப்போர் கனடிய குடிவரவு கட்டமைப்பையே குலைப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்று குடிவரவு குடியகல்வுத் துறை அமைச்சர் ஜேசன் கேனி தெரிவித்து, பலத்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இச்சட்டம் சம்பந்தமாக குளோப் அன்ட் மெயில் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

இச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்த பல்லினக் குழும அமைப்புக்களில் சில அரச நிதியுதவி பெறும் அமைப்புக்கள் எனவும் எனவே அவை தங்களது நிதியுதவித் தொகையில் பாதிப்பு ஏற்படாதவகையில் இவ் ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்துள்ளன எனவும்,

இச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்த வேறு சில அமைப்புக்கள் நடைமுறையில் இல்லையெனவும், அவை பதிவு பெறாத அல்லது உண்மையிலேயே இல்லாத அமைப்புக்களாக இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளதோடு,

இச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்த தமிழர் அமைப்பான “பீல் தமிழர் சமூக நிலையத்தின்” தொடர்பாளராக தன்னைத் தெரிவித்துள்ள பாலன் ரட்னராஜா என்பவர் தாங்கள் இவ்வாறு கடிதம் கொடுத்தால் அரச நிதியுதவியைப் பெறலாம் என்றே தாங்கள் இக் கடிதத்ததைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தான் இந்த அமைப்பை ஒரு வருடத்திற்குள் தான் ஆரம்பித்ததாகவும், அலுவலகம். தொலைபேசி, இணையத் தொடர்பு என்பனவற்றைப் பேணுவதற்கு தங்களிடம் நிதியில்லையென்ற காரணத்தினாலேயே தான் தனது தனிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பிற்குக் கொடுத்ததாகவும் மேற்படி பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த தமிழர் அமைப்பின் கடிதமே பரவலாக இவ்விவகாரத்தை செய்தியாக்கும் செய்தி நிறுவனங்களிற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் கடத்தல்காரர்களை மாத்திரமே தண்டிக்க உதவும் எனவும் இதனால் அகதிகளிற்குப் பாதிப்பு வராது எனவும் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தான் இந்தச் சட்டத்திற்கு ஆதரவுக் கடிதம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி தமிழரான பாலன் ரட்னராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சட்டத்தை மிகவும் தீவிரமாக எதிர்ப்பதற்கு தமிழர்களின் மிகப்பலமான அமைப்பான கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தன்னை வரித்துக்கட்டிச் செயற்படுவதாகவும் தெரிவித்த குளோப் அன்ட் மெயில் பத்திரிகை, இந்த பீல் தமிழர் சமூக நிலையம் என்ற அமைப்பை தமிழர்கள் யாரும் இதுவரை அறிந்திருக்கவில்லையென்றே தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கனடாவின் அகதிகளிற்கெதிரான புதிய சட்டத்தை அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழ் அகதிகள் வந்த முதற் கப்பலான ஓசன் லேடி என்ற கப்பலையே குடிவரவு அமைச்சர் தேர்ந்தெடுத்தார் என்பதும் அதற்கடுத்த பத்திரிகையாளர் மாநாட்டை அந்தக் கப்பலில் வந்த பெரும்பாண்மையோர் வதியும் பிரம்டன் நகரைத் தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளோப் அன்ட் மெயில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.