Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானைக் கைது செய்தார் கருணாநிதி! காலில் விழுந்தார் தங்கர் பச்சான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானைக் கைது செய்தார் கருணாநிதி! காலில் விழுந்தார் தங்கர் பச்சான்

திகதி: 13.11.2010

‘திரு. தங்கர்பச்சான் அவர்களுக்கு...

உங்கள் பேட்டிகள் எல்லாவற்றிலும் என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்திக்கப் போவதாக கூறியிருக்கிறீர்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் நீங்கள் இந்தக் கருத்தை தொடர்ச்சியாக ஊடகங்களில் கூறிவருவதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏதோ என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்தித்துப் பேசுங்கள் என்று உங்களிடத்தில் கெஞ்சியது போன்ற ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டே நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதை நிறுத்திக் கொள்வது நல்லது.

- மிகுந்த வருத்தத்தோடும், கோபத்தோடும்

சீமான்’’

வேலூர் சிறையிலிருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான், இயக்குநர் தங்கர்பச்சானுக்கு எழுதியிருந்த கடிதம்தான் இது. இந்த நிலையில் கடந்த 3ம் தேதி முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து சீமான் விடுதலை குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான். இது இயக்குநர் சீமான் மற்றும் ‘நாம் தமிழர்’ இயக்கத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தொடர்ச்சியாக தாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், ‘‘தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்கினால், இங்கு வசிக்கும் சிங்களர்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது’’ என்று பேசினார்.

இந்தப் பேச்சுக்காக கடந்த ஜூலை 12_ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீமான், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீமான் விடுதலைக்காக அவரது கட்சியினர் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்தான் தங்கர்பச்சான் முதல்வரைச் சந்தித்திருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘நாம் தமிழர்’ இயக்கப் பொறுப்பாளர் ஒருவர்,

‘‘தமிழர்களை சிங்களர்கள் தாக்கினால், சிங்களர்களை நாங்கள் தாக்குவோம் என்று சீமான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இதற்காகவெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் அவர் மீது பாயவில்லை. சில அரசியல் காரணங்களுக்காகத் தான் இந்த அரசு அவரை சிறைக்குள்ளேயே வைத்திருக்க நினைக்கிறது.

கடந்த அக்டோபர் 10ம் தேதி ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் கூட்டம் மும்பையில் நடந்தது. தமிழ் உணர்வாளர் என்கிற முறையில் இயக்குநர் தங்கர்பச்சானும் அதில் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘சீமான் விடுதலைக்காக தேவைப்பட்டால் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவேன்’ என்றார்.

அதை மேடையிலேயே மறுத்த ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் மும்பை பொறுப்பாளர் ராஜேந்திரன், ‘சட்டப்படி இந்த வழக்கை நாங்கள் எதிர்கொள்வோம். அரசு இந்த வழக்கில் நேர்மையாக நடந்து கொண்டிருந்தாலே இப்போது சீமான் விடுதலையாகியிருக்க முடியும்.

சீமான் விடுதலையாகக் கூடாது என்ற நோக்கத்தில், வழக்கு தள்ளி வைப்பு, வழக்கறிஞர் ஆஜராகாமல் இருப்பது என பல வேலைகளை அரசு செய்து வருகிறது. சீமானைக் கைது செய்ததே கருணாநிதி அரசுதான். அப்படியிருக்க, அவரை விடுதலை செய்யுமாறு கருணாநிதியிடமே போய் கெஞ்சுவது எங்கள் அமைப்புக்கு விரோதமான செயல். சீமான் விடுதலைக்காக யாரிடமும் கெஞ்ச முடியாது’ என்று மேடையிலேயே பதில் சொன்னார்.

ஆனால் அதையும் மீறி இப்போது தங்கர்பச்சான் முதல்வரைச் சந்தித்து சீமான் விடுதலை குறித்துப் பேசியிருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப் போகும் முடிவில் இருக்கிறது. இந்த நிலையில் மறுபடியும் ஈழ ஆதரவாளர் போல் தன்னைக் காட்டிக்கொள்ள தங்கர்பச்சானை வைத்து கருணாநிதி நாடகம் ஆடுகிறாரோ என்கிற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது’’ என்றார் அவர்.

சீமான் மற்றும் அவரது இயக்கத்தினருக்கு தங்கர்பச்சான் மீது ஏற்பட்டிருக்கும் கோபத்திற்கு தங்கர்பச்சான் என்ன சொல்கிறார் எனக் கேட்டோம்.

‘‘இன்று தமிழர்கள் சாதியாலும், அரசியல் கட்சிகளாலும் பிரிந்து கிடக்கிறார்கள். கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் தங்களை கன்னடர்கள் என்றும், தெலுங்கர்கள் என்றும், மலையாளிகள் என்றும் சொல்லும்போது இங்குள்ள அரசியல் கட்சிகள் திராவிடர் என்ற பெயரால் தமிழ் இனத்தை, தமிழ் உணர்வைச் சிதைத்து விட்டார்கள். தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனதற்கு இவர்கள் தான் காரணம்.

ஒட்டுமொத்த மக்களின் ஒற்றுமையும் அரசியல் கட்சிகளால் சிதைக்கப்பட்டு மக்களிடம் இன்று ஒற்றுமை இல்லாமல் போய்விட்டது. கிராமங்களில் அண்ணன், தம்பிகள் கூட எதிராளிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் மக்கள் மாற்று அரசியலுக்காக ஏங்குகிறார்கள். இப்படியிருக்கிற நிலையில் சீமான் ஒருவருக்குத்தான் தமிழின உணர்வும், மக்களைப் பற்றிய அக்கறையும் இருக்கிறது. எனவே, சீமானைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. சீமான் போன்றவர்கள் அடுத்த தலைமுறைக்கு அவசியத் தேவை.

மும்பையில் நடந்த ‘நாம் தமிழர்’ கூட்டத்தில் இந்த அடிப்படையில்தான் நான் கலந்து கொண்டேன். சிறையில் சீமான் இருக்கும்போது ‘நாம் தமிழர்’ இயக்கத் தம்பிகள் சோர்ந்து போய்விடக்கூடாது என்று நினைத்தேன். நான் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் கட்சி உறுப்பினர் அல்ல. ஒரு நண்பனாக, கலைஞனாக, தமிழனாகத்தான் மும்பையில் பேசினேன்.

அங்கு பேசும்போது, ‘முதல்வரைச் சந்தித்து சீமானின் கைது நியாயமற்றது என்பதை வலியுறுத்துவேன்’ என்றுதான் சொன்னேன். அதற்குப் பிறகு சீமான் கைது தொடர்பாக நான் ஊடகங்களுக்கு எந்தப் பேட்டியும் அளிக்கவில்லை. ஊடகங்கள் தான் திரும்பத் திரும்ப இந்தச் செய்திகளை எழுதின. காவிரிப் பிரச்னை தொடர்பாக நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போதும் ஒரு பத்திரிகையாளர், சீமான் கைது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போதும் ‘இது அந்தப் பிரச்னையை பேசுவதற்கான இடமல்ல’ என்றுதான் நான் குறிப்பிட்டேன்.

முதல்வரைச் சந்தித்த போதும் நான்‘சீமானை விடுதலை செய்யுங்கள்’ என்று கெஞ்சவில்லை. முதல்வரைச் சந்தித்த அந்த இருபது நிமிடங்களிலும் சீமானின் கைது எவ்வளவு நியாயமற்றது என்பதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். சீமானை போன முறை கைது செய்தபோதாவது ஈழத்தமிழர்கள் என்று ஒரு காரணம் இருந்தது. ஆனால் இந்தமுறை சீமான் தமிழகத் தமிழர்களுக்காகப் பேசித்தான் கைதாகி இருக்கிறார். அவர் பேசியதால் தமிழகத்தில் எந்தக் கலவரமும் ஏற்பட்டு விடவில்லை.

இந்த நிலையில் சீமானை இன்னமும் சிறையிலேயே வைத்திருப்பது நியாயமற்றது என்றுதான் பேசினேன். ஒரு முதல்வரிடம் என்ன பேசினேன் என நான் அப்படியே வெளியில் சொல்வது நாகரிகமாக இருக்காது. ஆனால் நான் சந்தித்துப் பேசியதன் உட்கருத்து இதுதான். சீமானை விட முந்நூறு மடங்கு அதிகமாகப் பேசியவர்கள் எல்லாம் முதல்வரோடு இன்று நல்ல உறவில் இருக்கும்போது தமிழர்களுக்காக பேசிய சீமான் மட்டும் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

நான் வேலூர் சிறையில் சீமானை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். இரண்டாவது முறை என்னோடு என் மனைவியும் வந்திருந்தார். அப்போது நான் முதல்வரை சந்திக்கப் போவதாக தலைப்பிட்டு வந்த செய்தியை சீமான் படித்தார். அதுகுறித்து இருவரும் விவாதித்தோம். அப்போது ‘இதுகுறித்து முதல்வரைச் சந்தித்து பேசவேண்டாம்’ என்று அவர் என்னிடம் சொல்லவில்லை.

அதன்பிறகும் வரும் தேர்தலில் நாம் தமிழரின் நிலைப்பாடு குறித்து எனக்கிருந்த ஐயத்தையும் விவாதித்தேன். அதன் பின்பு கூட முதல்வரைச் சந்திக்க வேண்டாம் என்று சீமான் சொல்லியிருந்தால் நிச்சயம் சந்தித்திருக்க மாட்டேன்.

சீமானும், ‘நாம் தமிழர்’ இயக்கத் தம்பிகளும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சீமானை விடுதலை செய்யுங்கள் என்று கெஞ்சும் செயலை சீமானோ, நானோ மட்டுமல்ல தன்மானமுள்ள தமிழர்கள் யாரும் செய்ய மாட்டார்கள். தம்பிகள் உணர்ச்சிவசப்படாமல் யோசித்துப் பார்க்க வேண்டும். தமிழின உணர்வாளர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி யாரும் குளிர்காய நினைக்க வேண்டாம்.

சீமான் போன்ற ஒருவரை இங்கிருக்கிற கல்வித்திட்டத்தாலும் உங்களிடம் எவ்வளவு பணமிருந்தாலும் உருவாக்கி விட முடியாது. ஏற்கெனவே என்போன்ற, சீமான் போன்ற தமிழினப் போராளிகளும்இ உணர்வாளர்களும் கட்சி, அமைப்பு, இயக்கம் போன்றவற்றால் 200, 300 பேராக விரிந்து சிதைந்து போன வரலாறு எங்களுக்குத் தெரியும்.

அதுபோன்ற சூழ்ச்சிகளை எங்களிடம் நிகழ்த்தி எங்களை உணர்வு ரீதியாகப் பிரித்து வைக்க முற்பட வேண்டாம். நான் மட்டும் சீமானின் விடுதலையை விரும்பவில்லை. வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் தாயகத் தமிழர்களும் சீமானின் விடுதலைக்காக அக்கறை-யோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் தமிழினத்திற்கு செய்யும் நல்லதாக இருக்கும்’’ என்று முடித்துக் கொண்டார் தங்கர்பச்சான்.

sankathi

தமிழின விரோத கொலைஞர், ஜெயலலிதா, காங்கிரஸ் குழுக்களுக்கு மாற்றுக் குழு வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.