Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும் ! – தூயவன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும் ! – தூயவன்

எமது பாசமிக்க அன்பார்ந்த உலகத்தமிழ் மக்களே! எல்லாம் முடிந்தது, தலைமை அழிந்தது, இனி நாம் அடிமைகள்தான் என்று பலர் எண்ணி கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல. தமிழீழ தேசத்தில் எங்கே பார்த்தாலும் தமிழர்களுடைய இடங்களில் சிங்களர்கள், சீனர்கள், இந்தியர்கள், வெள்ளையர்கள் மற்றும் பலர் எமது புனித மண்ணை மடிபறித்துள்ளது உண்மைதான்.

ஆனால் முன்பை விடவும் நாம் நமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் வழி நடத்துதலில் சர்வ தேசா£தியில் எல்லாத் துறைகளிலும் மிகவும் பலம் பெற்று வருகின்றோம், இது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மையாகும்.

எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ தேசத்தை தூய்மையான புனித நாடாக உருவாக்கியிருந்தார். மக்களின் விருப்புகளையும், தேவைகளையும் நன்கு அறிந்து எமக்கான புனிதப் பாதையிலே மக்களை நல்ல வழியில் நடத்தினார்.

பல ஆண்டுக் காலமாகத் தமிழர் பண்பாட்டைச் சுடராக ஏந்தி எதி¡¢களையும் நன்கு அறிந்து, எமது மக்களின் சத்தியையும், வலிமையையும் அறிந்து எமது புனிதமிக்க நாட்டை எவா¢டமும் எதற்கும் கையை ஏந்தாமல் காக்க, தன்மானத்துடனும், தன்மதிப்புடனும் உ¡¢மையை நிலை நிறுத்திட இந்த உலகம் எம்மை எப்படிப் பார்க்கிறது என்று எமக்கு உணர்த்தினார். கண்ணியத்துடன் நடந்து கொண்டதா புற உலகு?

சிங்கள அரசு போர் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு எமது நாட்டின் மீது படையெடுத்துப் போர் நடத்தியது.

இச் சிங்கள அரசு நடத்திய நெறியற்ற போ¡¢ல் உலக நாடுகள் பல கைகோர்த்தன சிங்களர்களுக்கு அனைத்து விதமான பணம் மற்றும் போர்க்கருவிகள், புதின நுட்பங்கள், படைப் பயிற்சிகள், போர் வல்லுநர்கள், வேவு ஊர்திகள் என அனைத்து விதமான உதவிகளையும் செய்தன.

ஈழ எதி¡¢களின் வழிகாட்டுதலில் எம் மீது நான்காம் கட்டப் போரைச் சிங்களம் நடத்தியது.

எமது தலைவர் உலக நாடுகளின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் உற்றுக் கவனித்தார்.

சிங்களர்களுக்குத் துணை நின்றதன்மூலம் உலக நாடுகள் எம்மை வஞ்சித்தன.

மக்களை அழிக்க எண்ணும் அந்த அறைகூவலை ஏற்று இந்த நான்காம் கட்டப் போருக்கு உலக நாடுகளே வித்திட்டுப் போ¡¢யல் விதிமுறைகளைக் தகர்த்தெறிந்து சிங்கள அரசுடன் கைகோர்த்து நான்காம் கட்டப்போரை நடத்தின. இது உலகம் அறிந்த உண்மை.

இதைத்தான் எமது தலைவர் அவர்கள் தமது 2008 – ஆம் ஆண்டு மாவீரர் உரையில்

மிகவும் அழகாகவும், தெளிவாகவும் விளக்கித் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தார்.

அவர் முன்வைத்த அத்தனை நிலைப்பாடுகளும் நிறைவேறின.

நாம் தமிழர்கள் எப்படி வஞ்சிக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம்? இன்னமும் இந்த உலக நாடுகளை நம்பி அதை எதிர்பார்த்துக் காலில் விழுந்து கதறி, தேம்பி, விம்மி அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றோம்?

எமது உலகத்தமிழ் உறவுகளே !

நாம் ஏன் இன்னும் சாதி, மதம் என்ற பித்தில் இருக்கின்றோம்?

எமது தமிழ் இனத்தலைவர் தமிழீழத்தை எப்படிச் சாதி, மத வேற்றுமை இன்றித் தூய்மையாக்கித் தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து நாட்டையும் மக்களையும் வழி நடத்தினார் என்பது உலகம் அறிந்த உண்மை.

தமிழீழ நாட்டை விட்டு ஏனைய நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்து வாழும் தமிழ் மக்களே!

தமிழீழத்தில் நான்காம் கட்டப் போ¡¢ன் போது ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் என்பதற்காகவே அழிக்கப்பட்டார்களே தவிர இவர்கள் என்ன சாதி அல்லது எந்த மதம் என்று கேட்டா எமது தமிழ் உறவுகளைத் தேடித்தேடிக் கொன்றார்கள்?

அப்படிச் சாதிக்கும், மதத்திற்கும் இவ் வுலக நாடுகள் முன்னு¡¢மை தந்திருந்தால் அல்லது கருதியிருந்தால் இந்தியாவிலே உள்ள அத்தனை சாதி மதமும் தானே தமிழீழத்தில் இருந்தது. இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் பவுத்தத்தைப் பின்பற்றுவோர்கள். சாதி வழியாக இந்தியாவில் சாதிக்கு என்று பல கட்சிகள், மதத்திற்கு என்று பல கட்சிகள் இருந்தும். தமிழர்களுடைய உயிர்களைச் சாதி மற்றும் மதம் என்ற பார்வையில் விட்டுவிட்டா? இல்லையே?

சாதி மதம் என்ற பெயர்களில் அரசியல் நடத்திக் கொண்டுள்ள நாடுகளும் சா¢, அல்லது உலக நாடுகளிலெல்லாம் வழிகாட்டும் அமைதியின் விளக்காக விளங்கும் கிறித்துவர்களின் தலைவர்-போப் (POPE) ஆவது மக்களைக் கொல்லுவது, அழிக்கப்படுவது கிறித்துவ நெறிகளுக்குப் புறம்பானது என்று போரை நிறுத்திட உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டாரா? இல்லையே?

தமிழீழத்தில் நடந்தது ஒர் இன அழிப்புப்போர். இங்கு நடந்தது ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் சாதி, மதம் என்று பார்க்காமல் அழிக்கப்பட்டதற்கு நாம் தமிழர்கள் என்பதுதான் காரணம்.

மனித நேயம் என்ன செய்தது?

மனித நேயம் எது? மனித நேயம் ஒர் உயிருக்குத் தீங்கு / கேடு நோ¢ட்டபோது அதைத் தடுக்கவும் இடா¢லிருந்து காப்பாற்றவும், மனிதம் தன்மானத்துடனும், கண்ணியத்துடனும், தன்மதிப்புடனும், பாதுகாப்புடனும் நல் வாழ்விற்கு ஆதரவு நிலைத்திடவும், சம நீதி நெறிகளை நிலைப்படுத்திடவும் தானே மனித நேயம்.

பெரு அழிவிலிருந்து மக்களைக் காப்பதற்குத்தான் மனித நேயம் உருவெடுத்தது.

ஆனால் தமிழீழத்தில் நடந்த இனப் படுகொலைகளை இந்த உலக மனித நேயம் வேடிக்கை பார்த்தது. ஒரே நாளில் மட்டும் குறைந்தது 40,000 – திற்கு மேலான மக்கள்

தீவிரவாதம் என்ற பெயா¢ல் அழிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்ததுதான் இந்த உலக மனித நேயம்.

எதற்கு இந்த வேடிக்கை? ஏன் இந்த உலகம் தன்னுடைய கண்களையும், காதுகளையும் வாயையும் மூடிக்கொண்டது தொ¢யுமா?

காரணம் – நாம் தமிழர்கள்

தமிழர்களின் தனித்தன்மையையும், ஆற்றலையும், சிறப்பையும், பண்பாடு, நாகா¢கம் அனைத்தையும் இந்த உலக நாடுகள் நன்கு அறிந்திருகின்றன.

உலகிலே யூதர்கள்தான் தங்களை உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் என்ற எண்ணத்தையும் அகந்தையையும், தோற்றத்தையும் கொண்டு இவ் உலகத்தை பல்வேறு வழிகளில் ஆண்டு வருகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

தமிழர்கள்தான் முதலில் இந்த உலகை ஆண்டார்கள். பின்பு வந்தேறிகளிடம் நாட்டையும், மண்ணையும், உ¡¢மையையும் இழந்து அடிமையானார்கள்.

நாம் இந்த உலகத்தில் எத்தனை கோடி தமிழர்கள் இருக்கின்றோம்?

நாம் 12 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த உலகில் நாம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவும், இந்த உலக நாடுகளுக்கு அனைத்து விதத்திலும் துணையாகவும் அனைத்து நாடுகளுடைய அனைத்து விதமான வளர்ச்சிக்குத் துணையாகவும் விளங்கிக் கொண்டுதான் இருக்கின்றோமே தவிர ஏனைய நாடுகளுக்குக் கேடு விளைவிக்கின்றவர்களாக நாம் திகழவில்லை.

5000 மக்கள் தொகை கொண்டுள்ள ஒர் இனத்திற்கு என்று ஒரு தனி நாடு இருக்கின்ற பொழுது, நாம் 12 கோடி தமிழர்கள் இவ் வையகத்தில் நிலைபரப்பி இருக்கின்றோம்,

நமக்கு என்று ஒரு தனி நாடு இருப்பதை இந்த உலகம் ஏன் ஏற்க மறுக்கின்றது?

தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு அமைந்து விட்டால் அவர்கள் மீண்டும் இந்த உலகை ஆள்வார்கள் என்ற எண்ணமும், அச்சமும் இந்த உலக நாடுகளுக்கு இருக்கின்றது. அதனால் தான் இந்த உலகம் தமிழர்களுடைய சிக்கலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.

இப்படி எல்லாம் வேடிக்கை பார்ப்பது அவர்களின் வாடிக்கைதான். இதையும் எமது தலைவர் அவர்கள் நன்கு அறிந்திருந்தார் என்பதும் உண்மைதான்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் கட்டப்போ¡¢ல் எமது தலைவர் அவர்கள் இதைத் தமது பட்டறிவை ஏனைய உலகத் தமிழர்களுக்கு உணர்த்திவைத்தார்.

எம்மை இந்த உலக நாடுகள் அழிக்கப் பார்த்தனவே தவிர, எமக்கு உதவவும் அல்லது ஆறுதலாகவும் கூட வாயே திறக்கவில்லை, இது தான் இந்த உலக நாடுகளின் நிலை.

எமது வீரமிக்க தாயகப் போராளிகளும், மக்களும் உயிர்களை இழந்தது உலக நாடுகளை நம்பியே!

ஏனென்றால் இந்த உலகம் எம்மை எதி¡¢யாகத்தான் கருதிச் சிங்கள இனவெறியர்களுடன் கைகோர்த்துப் போர் பு¡¢ந்தது.

இந்தச் சூழ்நிலையில் எமது பாசமிக்க மக்கள் எம்முடன் நின்று உலகமே மெய்சிலிர்க்கும் வகையில் போர்க்களத்தில் உலகப் படைகளை எதிர் கொண்ட நிலையில், எமது அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பதற்காகத்தான் எமது தேசியத் தலைவர் அவர்கள் தலைமையிலிருந்து துப்பாக்கி ஓசையை அமைதிப்படுத்திப் போரை நிறுத்தினார். அதனால் நாம் போ¡¢ல் தோல்வி அடைந்ததாகப் பொருள் இல்லை.

நம்மை அனைத்து உலகமுமே சேர்ந்து ஏமாற்றியது வீழ்த்தியது என்ற எண்ணத்தில் பெரு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது, எமது புனிதமிக்க தாய் மண்ணான தமிழீழத்தைப் பங்கு போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் உலக வல்லரசுகள் ஏங்கிக்கொண்டிருக்கின்றது.

மீண்டும் நாங்கள் வருவோம், எப்படி வருவோம், எங்கிருந்து வருவோம் என்பது இவ்வுலகிற்கு ஒரு மாயையாகவே இருக்கட்டும்.

எம்மை அழிக்கத் துணை நின்ற நாடுகளுக்கு ஒர் நல்ல பாடம் புகட்டுவதுதான் எமது பாசமிக்க மாவீரர்களுக்கு நாம் செய்யும் கடமையாகும்.

தலைமை வலிமையாகவே இருக்கின்றது,

அஞ்ச வேண்டாம்.

இதை எவராலும் மாற்றவோ, அழிக்கவோ, தடுக்கவோ முடியாது.

இப்படிக்கு:

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின்

அன்புத் தம்பி

தூயவன்

தமிழர் நாடு.

தமிழர்களின் தேசியத் தலைவரான எல்லாளன் என்கிற பிரபாகரனின் 56 – ஆம் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

thooyavan@ymail.com

http://meenakam.com/2010/12/11/15928.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.