Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈரலின் பழுதடைந்த பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு புதிய துண்டைப் பொருத்தி

Featured Replies

ஈரலின் பழுதடைந்த பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு புதிய துண்டைப் பொருத்தி மறுவாழ்வு காணும் வைத்தியத்தில் வெற்றி… !

குடிச்சுக் குடிச்சே ஈரல்; போய் இளையதம்பி செத்தான்.. என்று நமது நாட்டில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் மதுவால் இறப்பவர்கள் பற்றிப் பேசிக்கொள்வார்கள். ஈரலில் துளைபட்டு நாசமானாலும், பழுதடைந்த பகுதியை வெட்டி எறிந்து, அந்த இடத்தில் இன்னொருவரின் ஈரலை ஒட்டி வாழ்வை புத்துணர்ச்சியுடன் தொடங்க இப்போது புதுவழி பிறந்திருக்கிறது. பஞ்சரான டயரை ஒட்டி மறுபடியும் காற்றடிப்பது போல வைத்தியத்துறையில் இந்தப் புதுமை எட்டித் தொட்டுள்ளார்கள் அமெரிக்க வைத்தியர்கள்.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கில் யோனத்தன் நுஸ் என்ற குழந்தை பிறந்த எட்டு மாதங்களில் ஈரல் பழுதடைந்து இறக்கும் நிலையை அடைந்தது. இக்குழந்தையை அவசரமாக பாதுகாப்பதற்காக இருக்கும் ஈரலை அகற்றாமலே துணைக்கு இன்னொரு ஈரலையும் சேர்த்து வைத்தியர்கள் குழந்தையை தற்காலிகமாக காப்பாற்றினார்கள். இச்சம்பவம் 2007ம் ஆண்டு நடைபெற்றது, ஆனால் மூன்று வருடங்களின் பின்னர் குழந்தை பாரிய பிரச்சனைகளை சந்தித்தது. பொருத்தப்பட்ட புதிய ஈரலின் ஒவ்வாமை உடலில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தி மறுபடியும் மரணத்தின் வாசலை நோக்கி குழந்தையை இழுத்துச் சென்றது.

குழந்தையை எப்படிக் காப்பாற்றலாம் என்பது வைத்திய நிபுணர்களுக்கு பாரிய சவாலாக அமைந்தது. இருந்தாலும் அன்று புதிய ஈரலை பக்கமாகப் பொருத்திய வைத்தியர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் சிறுவனின் சொந்த ஈரலை அகற்றாமல் விட்டது இப்போது வாய்ப்பாக அமைந்திருந்தது. சிறுவனுக்கு பொருத்தப்பட்ட வேறொருவரின் ஈரலை அகற்றிவிட்ட வைத்தியர்கள், அடுத்த கட்டமாக அவனுடைய சொந்த ஈரலில் பழுதடைந்த பகுதியை கண்டறிந்து அதை மட்டும் வெட்டி நீக்கினார்கள். பின்னர் சிறுவனின் இரத்தப்பிரிவுடன் பொருந்தி வரும் இன்னொரு தானமாக வழங்கப்பட்ட ஈரலில் இருந்து தேவையான பகுதியை மட்டும் வெட்டி சிறுவனின் ஈரலுடன் பொருத்தினார்கள்.

ஈரலின் பிரதான இயல்பு அது 4 இல் இருந்து 8 வாரங்களில் வளர்ச்சியடைந்துவிடும். ஆனால் அதைப் பொருத்துவதற்கு சரியான வைத்திய நிபுணர்கள் தேவை. இந்தச் சத்திரசிகிச்சை மிகவும் சிரமமானது, சுமார் 12 மணி நேரங்கள் வைத்தகண் வாங்காமல் பணியாற்ற வேண்டிய நுட்பாந்திரமான பணி என்று நியூயோர்க் வைத்தியசாலை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் தமது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள்.

சிறியதோர் துண்டாகப் பொருத்தப்பட்ட புதிய ஈரலை ஏற்றுக்கொண்ட சிறுவனின் உடல் மறுபடியும் மெல்ல மெல்ல சீராகத் தொடங்கியது. இதற்காக வழங்கப்பட்ட விசேட மாத்திரைகளும், சிறுவன் மீதான வைத்தியர்களின் இடையறாத கண்காணிப்பும் அவனை இப்போது முற்றாக சுகப்படுத்தியுள்ளது. இது ஈரல் அறுவைச் சிகிச்சையில் புதியதோர் பரிமாணம் என்று இம்மாதம் வெளியான அறிவியல் உலக நூல்கள் அனைத்தும் விதந்துரைத்துள்ளன.

அமெரிக்காவில் மட்டும் ஈரல் பழுதடைந்து தற்போது 17.000 பேர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய சொந்த ஈரலில் பழுதடைந்த பகுதியை மட்டும் அகற்றி, சிறிய துண்டு ஈரலைப் பொருத்துவதன் மூலம் இவர்கள் வாழ்வை காப்பற்ற முடியும் என்பதை யோனத்தனுக்கு செய்த சத்திரசிகிச்சை எடுத்தியம்பியுள்ளது. இதுமாத்திரமல்ல மதுவால் ஈரல் பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்து நிற்கும் உலக மாந்தர் பலருக்கு இந்தச் செய்தி புதிய நம்பிக்கையை தருவதாயுள்ளது.

http://panipulam.net/?p=6049

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.