Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ன ஜாதி? திருமாவளவன் ஆராய்ச்சி.

Featured Replies

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயருடன் ‘பிள்ளை’ என்ற பெயர் சேர்ந்து வருவதால் அவரை எல்லோரும் ‘பிள்ளைமார்’என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. பிரபாகாரன், ‘மீனவர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’என்ற புதிய தகவலை வெளியிட்டார் திருமாவளவன்.

மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் மீனவர் வாழ்வுரிமை மூன்றாவது மாநில மாநாடு திருச்செந்தூரை அடுத்துள்ள வீரபாண்டியப்-பட்டினத்தில் கடந்த 11-ம் தேதி நடந்தது.

திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். கூட்டம் நடந்த வ.உ.சி. திடல் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகளின் ஃபிளக்ஸ் போர்டுகளே ஆக்கிரமித்திருந்தது.

திருமாவளவன் கூட்டத்திற்கு வருகிறார் என்பதாலோ என்னவோ தெரியவில்லை,அவர் வருவதற்கு முன்பாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில து ணைச் செயலாளர் சி.மகேந்திரன், அவசர அவசரமாக பேசிவிட்டுச் சென்றார்.

அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் அண்டன் கோமஸ்,மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி டிபேன்,பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பால் பிரபாகரன் ஆகியோர்,தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு வரும் நிகழ்ச்சியையே பிரதானப்படுத்திப் பேசினார்கள். அவர்களின் பேச்சில் தி.மு.க. கூட்டணி மீதான தாக்குதல் அதிகம் இருந்தது.

அவர்களின் பேச்சை எந்தவித சலனமும் இல்லாமல் கவனித்துக் கொண்டிருந்த திருமாவளவன், இறுதியாகப் பேசும்போது சற்று சூடாகவே பதில் சொன்னார்.

“தமிழர்களின் பூர்வீகக் குடிமக்கள் மீனவர்கள். ஆனால், இன்றைக்கு நாதியற்ற சமுதாயமாக இருக்கிறார்கள்.மீனவர் சமுதாயத்தினர் சாதாரணமானவர்கள் அல்ல. மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்கள்.இந்த இடத்தில் ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நீங்கள் நினைப்பதுபோல பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் உங்களது மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தின் உட்பிரிவுகளின் ஒன்றான ‘கரையாளர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2002-ம் ஆண்டு வன்னியில் அவரை சந்தித்தபோது இந்தத் தகவலை தெரிவித்தார். எனினும், விடுதலைப் புலிகள் இயக்கம் சாதிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம். 21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய புரட்சியாளராக விளங்கி உலக சரித்திரத்தில் இடம் பிடித்த பிரபாகரன் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்கு சந்தோஷமான விஷயமாக இருக்கும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்’’ என்று பேசி மீனவர்களை உற்சாகப்படுத்திய அவர், அப்படியே தமிழக அரசியலுக்கு வந்தார்.

“எனக்கு எவனும் நெருக்கடி தரமுடியாது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள்தான் ஈழத்தைப் பற்றி பேசினால் அம்மா நமக்கு ஆப்படித்துவிடுவார் என்று ஈழத்தைப் பற்றி பேச பயப்படுகிறார்கள். வைகோ, நெடுமாறன், தா.பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்தும் மேடைகளில் பேசியிருக்கிறேன்.

தி.மு.க. கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக நான் ஒரு நாளும் ஈழம் பற்றி பேசத் தயங்கியதில்லை. ஆனால், அவர்கள் தயங்கினார்கள். 2006-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் இருந்தது. ஆனால், தேர்தல் நேரத்தில் எனக்கே தெரியாமல் விடுதலைச் சிறுத்தைகள் வே ட்பாளராகப் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தினார் ஜெயலலிதா.

அதற்குப் பிறகுதான் நாங்கள் தி.மு.க. கூட்டணிக்குப் போனோம். தி.மு.க. வேட்பாளர்களை ‘வாபஸ்’ பெறச் சொல்லிவிட்டு எங்கள் வேட்பாளர்களை ஆதரிக்கச் சொன்னார் கலைஞர்.

தி.மு.க.தலைவர் என்னை அப்படி பேசக் கூடாது என்றும் சொன்ன-தில்லை. எனக்கிருக்கும் அந்தத் துணிவு, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த தலைவர்களுக்காவது இருக்கிறதா?

ஈழம் உருவாகக் கூடாது என்பதில் மற்ற நாடுகளை விட இந்தியாதான் உறுதியாக இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர். உதவினார் என்றால் அப்போது இருந்த நிலை வேறு. அதற்குப் பிறகு ஒரு நாளாவது ஈழத்தை ஆதரித்துப் பேசியிருப்பாரா ஜெயலலிதா? பிரபாகரனைக் கைது செய்து தூக்கில் போடவேண்டும் என்று பேசியவர்தான் ஜெயலலிதா. விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்க நான்தான் காரணம் என்று இன்றும் பெருமைப்பட்டுக் கொண்டி ருப்பவர் அவர்.

பிரபாகரனைச் சந்தித்தபோது ‘நார்வே நாடு ஏன் அமைதி ஏற்படுத்த இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல். அன்பு முகம் நார்வே’ என்றார். அதாவது, இலங்கையில் ஈழம் மலர்வதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை சூசகமாக அப்படிச் சொன்னார்’’ என்று தனது விறுவிறுப்பான பேச்சை முடித்துக்கொண்டார் திருமாவளவன்.

சில நாட்களுக்கு முன்புதான் மீனவர் மக்கள் கட்சி சார்பில் இப்பகுதியில் மீனவர் மாநாடு நடந்து முடிந்தது. அந்த மாநாட்டில் அ.தி.மு.க. கூட்டணிக் கட் சியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த இரண்டு மாநாடுகளிலும் அந்தப் பகுதி மீனவர்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து கலந்து கொள் ளவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்!

திருமாவளவன் படங்கள் மற்றும் பிரபாகரன் வீடியோ காண.....

http://www.thedipaar.com/news/news.php?id=22202

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.