Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமனில் தீயில் கருகி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி

Featured Replies

தமிழகத்தை சேர்ந்த நான்குபேர் உள்பட 5 பேர் ஓமன் நாட்டில் தீயில் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே வெள்ளங்குழி கிராமத்தை சேர்ந்த இசக்கி மகன் சுப்பிரமணியன்(35). இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவியும் இரண்டரை வயதில் பிரியதர்சினி, ஒன்றரை வயதில் இஷாந்திகா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு மணிகண்டன் ஓமன் நாட்டில் எலக்ட்ரிஷியன் வேலைக்கு சென்றிருந்தார். பைசியா என்ற நகரில் நண்பர்கள் 5 பேருடன் ஒரே அறையில்தங்கியிருந்தார். இவருடன் நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன்(32) என்பவரும் தங்கியிருந்தார். இவருக்கு திருமணமாகி தங்கம் என்ற மனைவியும் சக்திமாரி(2) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தபாலச்சந்திரன்(45), ஜானி(45), கேரள மாநிலத்தை சேர்ந்த அனீஷ்(26) ஆகியோர் தங்கியிருந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த பகுதியில் மின்சாரம் இல்லாததால் இரவில் பெட்ரோமாக்ஸ் விளக்கு பற்ற வைத்துவிட்டு தூங்கிவிட்டனர்.நள்ளிரவு 1.40 மணிக்கு லைட் கவிழ்ந்து எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அறையில் தூங்கிக்கொண்டிருந்த ஐந்துபேருமே கருகி உருத்தெரியாமல் இறந்துவிட்டனர். வீட்டில் இருந்து கரும்புகை தொடர்ந்துவெளியே வந்துகொண்டிருந்தது. சம்பவம் குறித்து ராயல்ஓமன் போலீசார் விசாரித்தனர்.நெல்லையை சேர்ந்த மணிகண்டன், சுப்பிரமணியன் ஆகியோர் இறந்த சம்பவம் அவர்களது வீடுகளுக்கு ஓமன் நாட்டில் பணியாற்றும் நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது.இருப்பினும் அவர்கள் பணியாற்றும் நிறுவனமோ, ஓமன் அரசோ இதுவரை முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை.

புளியங்குடி மணிகண்டன். மனைவி 7 மா கர்ப்பிணியாக இருக்கும்போது ஓமனுக்கு வேலைக்கு சென்றுள்ளார். தற்போது அவரது மகளுக்கு 2 வயதாகிவிட்டது. இதுவரையிலும் மகளை பார்க்கவரவில்லை. அடுத்தமாதம் சொந்த ஊர் வருவதாக இருந்தது. இதே போல சுப்பிரமணியன் வீட்டிலும் அவரை நம்பித்தான் வாழ்க்கை நகர்ந்தது. அவர்களதுஉடல் எப்போது வரும் என்பதே கூட இன்னமும் தெரியாமல் பெற்றோர்கள், உறவினர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=148979

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.