Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச, தனியார் பஸ்களுக்கிடையிலான மோதலில் நடுத்தெருவில் தவிக்கும் பயணிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பயணிகளை மன்னார் அரச பேருந்து சேவையின் நடத்துனரும், சாரதியும் இன்று அதிகாலை முதல் நடு வீதியில் நிற்க வைத்து விட்டுச் சென்றுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்க கொண்டு வந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பயணிகள் கொழும்பு, அனுராதபுரம், கெக்கராவ ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டு தனியார் பேருந்து மூலம் நேற்று இரவு பத்து மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்தனர்.

பின் இவர்கள் பேசாலை மற்றும் தலைமன்னார் ஆகிய கிராமங்களுக்குச் செல்வதற்கு பஸ்சிற்காக காத்திருந்தனர். இதன் போது கொழும்பில் இருந்து நேற்று இரவு எட்டு மணிக்குப் புறப்பட்ட மன்னார் அரச போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான (Nயு-3628) எனும் இலக்கம் கொண்ட பஸ் ஒன்று இன்று அதிகாலை மூன்று மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை வந்தடைந்தது.

பின் குறித்த பேருந்தானது தலைமன்னார் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு வருவது வழமை. இந்த நிலையில் குறித்த நான்கு பயணிகளும் பஸ்சில் ஏற பஸ் நடத்துனர் பயணிகளிடம் எந்த பஸ்ஸில் வந்தீர்கள்? ஏன்று கேட்க தனியார் பஸ்சில் வந்தோம் என்று கூறியுள்ளனர்.

உடன் நடத்துனர் தனியார் பஸ்சில் வந்தவர்களை நாங்கள் ஏற்ற முடியாது என்று கூறியுள்ளார்.ஏற்ற வேண்டாம் என்று அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை முகாமையாளர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். என்று கூறி உடனடியாக பஸ்சில் இருந்து இறங்குமாறு நடத்துனர் குறித்த நன்கு பேரிடமும் தெரிவித்துள்ளார்.

இறங்க மறுத்த சமயம் டிக்கட் புத்தகத்தினால் தாக்கி நான்கு பயணிகளையும் பலவந்தமாக இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் நன்கு பேரும் பஸ் தரிப்பிடத்தில் நின்று விட்டு அதிகாலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

மன்னார் தனியார் பேருந்திற்கும்-அரச பேருந்திற்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் தொடர்ந்தும் இடம் பெற்று வரும் மோதல்களினால் தற்போது பயணிகள் நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

TamilCnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.