Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுகாப்பில் குளறுபடி செய்தால் ராகுல்காந்தியின் வருகை தடைபடுமா? தி.மு.க வின் அல்ப ஐடியா.

Featured Replies

திருப்பூர் வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு சரியான பாதுகாப்பு தர தி.மு.க. அரசு தவறிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தரப்பில் இருந்து மேலிடத்துக்கு புகார் சென்றுள்ளது. ராகுலின் வருகையைத் தடுக்க தி.மு.க. இப்படி தப்புக் கணக்கு போடுவதாகவும் அவர்கள் சீறிப்பாயத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்த ராகுல்காந்தி, கடந்த 23-ம் தேதி திருப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் எட்டாயிரம் பேருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சுமார் ஒரு மணி நேரம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந் துரையாடிவிட்டு ஹெலிகாப்டர் மூலம் கிளம்பினார். அப்போது, பாரதிய ஜனதா கட்சி யைச் சேர்ந்த சிலர், காவி தீவிரவாதம் பற்றி ராகுல் பேசிய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவருக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள்.

திருப்பூரில் ராக்கியாபாளையம் பிரிவிலிருந்து கறுப்பு பலூன்களிலும், கறுப்புக்கொடி கட்டிய பலூன்களிலும் கேஸ் நிரப்பி வானில் பறக்கவிட்டு மிகவும் நூதனமுறையில் தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள். ராகுல் பேசி முடித்துவிட்டு ‘ஹெலிபேட்’ கிளம்பும் நேரத்தில் கறுப்புக்கொடி பலூன்கள் திடீரென்று வானில் பறந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

‘கறுப்புக்கொடி பலூன் எதிர்ப்பு தமிழக போலீஸின் பாதுகாப்புக் குளறுபடியால்தான் நடந்துள்ளது’ என்று பிரதமர் மன்மோகன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட அனைத்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் பரபரப்பான புகாரை ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெ.சுரேஷ், அனுப்பியிருக்கிறார்.

திருப்பூர் ‘பலூன் பாலிடிக்ஸ்’ பற்றி கேட்டதும் தி.மு.க. மீது நேரிடையாகவே தாக்குதலைத் தொடங்கினார் ஜெ.சுரேஷ்.

‘‘ராகுல்காந்தி தமிழக ‘விசிட்டை’ தி.மு.க. விரும்பவில்லை. ராகுல் தி.மு.க. எதிர்ப்புக் குரல் கொடுத்து வருவதால் அவர் மீது எரிச்சலில் இருக்கிறது தி.மு.க. எ ன்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ராகுல் தமிழகம் வருகையின்போது நடந்த பாதுகாப்புக் குளறுபடிகளே இதற்கு உதாரணம்.

காவி தீவிரவாதம் பற்றி ராகுல் கருத்துத் தெரிவித்ததால் அவர் மீது பா.ஜ.வினர் ஏக கடுப்பில் இருந்தனர். இந்நிலையில், திருப்பூருக்கு வருகை தரும் ராகு லுக்கு பா.ஜ.வினர் கறுப்புக்கொடி காண்பித்து எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதாக ஏற்கெனவே தமிழக உளவுப்பிரிவு போலீஸுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், அலட்சியமாக இருந்த போலீஸார், இதுபற்றி மத்திய அரசுக்கு எந்தவிதமான தகவலும் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். அதனால்தான், 23-ம் தேதி ராகுலின் ஹெலிகாப்டர் திருப்பூர் வந்தபோது பா.ஜ.வினர் ‘நைட்ரஜன் வாயு’ நிரப்பப் பட்ட பலூன்களில் கறுப்புக்கொடியைக் கட்டி பறக்கவிட்டுள்ளனர்.

பா.ஜ.வினர் விட்ட பலூன்கள், ராகுல் பயணம் செய்த ஹெலிகாப்டர் மைதானம் அருகேயே வந்தது. அதோடு, ஒரு சில பலூன்கள் ‘ஹெலிபேட்’ மைதானத் துக்கு வெளியே இருந்த உயர் அழுத்த மின்சார டவர்களில் சிக்கிக் கொண்டது.

ராகுலை வழியனுப்பிவிட்டு வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘கேஸ் நிரப்பப்பட்ட அந்த பலூன்களை உடனே அகற்றுங்கள். அதில் மின்சாரம் பட்டு வெடித்து பயங்கர பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது’ என்று போலீஸாரை எச்சரித்தார்.

உடனே ஓடிவந்த போலீஸார், மின்சாரத்தைத் துண்டித்து அந்த பலூன்களை அகற்றினர்.

பா.ஜ.வினர் பறக்கவிட்ட பலூன்களில் ராகுலின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் இருந்திருந்தால் என்ன ஆவது? இச்சம்பவத்தை போலீஸ் ‘கை’கட்டி வேடிக்கைதான் பார்த்தது.

விடுதலைப்புலிகள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தலால் ராகுல் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார். அவரை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும். கடமையிலிருந்து தமிழக காவல்துறை தவறிவிட்டது.

‘வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நான் தமிழகத்துக்கு எட்டு தடவை வரவிருக்கிறேன்’ என்று ராகுல் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இப்போது திரு ப்பூர் கலந்துரையாடலின் போது, ‘தமிழகத்துக்கு நான் அடிக்கடி வருவேன். எனது உயிருக்கு தமிழ் மக்கள்தான் பாதுகாப்பு’ என்று பேசியுள்ளார். இந்நிலையில், அவரது பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருப்பது ஆபத்தானது.

எனவே, திருப்பூரில் நடைபெற்ற சம்பவம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி, தமிழக அரசின் போலீஸ் துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட அனைவருக்கும் புகார் அனுப்பியுள்ளேன்.

இளைஞர் காங்கிரஸ் மூலமாக தமிழகத்தில் காங்கிரஸ் வேகமாக வளர்ந்துவருகிறது. தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று எல்லா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ஒரே முடிவில் இருக் கிறார்கள். இதெல்லாம் தமிழகத்தை ஆளும் தி.மு.க.வுக்கு ராகுலின் மீது பயங்கர கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் தமிழகம் வரும்போதெல்லாம் இப்படி பாதுகாப்பு நடவடிக்கையில் குளறுபடி ஏற்பட்டால், ‘தமிழகத்துக்கு ராகுல் வருவதைத் தடுக்கலாம்’ என்று தி.மு.க. தப்புக் கணக்கு போடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. சீப்பை மறைத்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று போகுமா என்ன?’’ என்று சீரிய ஸாக முடித் தார் சுரேஷ்.

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க

http://www.thedipaar.com/news/news.php?id=22526

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.