Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போபர்ஸ் ஊழலில் குட்ரோச்சி லஞ்சம் பெற்றார்

Featured Replies

போபர்ஸ் ஊழலில் இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குட்ரோச்சி லஞ்சம் பெற்றார் என்று வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் ஆவணங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போபார்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றதாக இத்தாலிய தொழிலதிபரும், சோனியா காந்தியின் உறவினருமான குட்ரோச்சி மீது குற்றம்சாற்றப்பட்டது.

ஆனால் அவருக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறி, அவர் மீதான வழக்கை திரும்ப பெறுமாறு டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இவ்வழக்கை விசாரித்த சிபிஐ மனு தாக்கல் செய்தைத் தொடர்ந்து அவர் மீதான வழக்கு திரும்ப பெறப்பட்டது.

இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, சோனியாவின் உறவினர் என்பதாலேயே குட்ரோச்சி மீதான வழக்கு திரும்ப பெறப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், போபர்ஸ் ஊழலில் இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குட்ரோச்சியும், இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்டு காலமான வின்சத்தா என்பவரும் லஞ்சம் பெற்றார் என்று வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் பழைய ஆவணங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

1987-88 மற்றும் 1988-89 ஆகிய நிதியாண்டுகளில் பெற்ற வருமானத் தொகை ரூ. 52 கோடி மற்றும் 85 லட்சங்களுக்கு வருமானவரி செலுத்த வேண்டும் என வின்சத்தாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது.

வின்சத்தாவின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தார்.

இது தொடர்பான விசாரணையின்போதே, போபர்ஸ் பீரங்கி கொள்முதலுக்காக அரசு 41 கோடி ரூபாயை கூடுதலாக கொடுத்துள்ளதாகவும், இந்த தொகை ஒப்பந்த விதிகளை மீறி குட்ரோச்சி மற்றும் வின்சத்தா ஆகியோரது கணக்குக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பாயத்தின் ஆவணங்களில் காணப்படுவதாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது.

ஆழக் குழித்தோண்டி புதைக்கப்பட்டதாக காங்கிரஸ் நினைத்துக்கொண்டிருக்கும் போபர்ஸ் பூதம், மீண்டும் வெளிவந்திருப்பது அக்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1101/03/1110103050_1.htm

  • தொடங்கியவர்

போபர்ஸ்: லஞ்சம் பெற்றது உறுதியானாலும் குட்ரோச்சி வழக்கிலிருந்து விடுதலை?

வருமான வரித் துறை தீர்ப்பாயத்தின் மூலம் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி லஞ்சம் வாங்கியது உறுதியாகி உள்ளபோதிலும், சிபிஐ-யின் மனுவை ஏற்று அவர் மீதான வழக்கை கைவிட நீதிமன்றம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போபார்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றதாக இத்தாலிய தொழிலதிபரும், சோனியா காந்தியின் உறவினருமான குட்ரோச்சி மீது குற்றம்சாற்றப்பட்டது.

ஆனால் அவருக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறி, அவர் மீதான வழக்கை திரும்ப பெறுமாறு டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இவ்வழக்கை விசாரித்த சிபிஐ மனு தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, சோனியாவின் உறவினர் என்பதாலேயே குட்ரோச்சி மீதான வழக்கு திரும்ப பெறப்படுவதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், போபர்ஸ் ஊழலில் ஒட்டாவியோ குட்ரோச்சியும், இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்டு காலமான வின்சத்தா என்பவரும் லஞ்சம் பெற்றார்கள் என்று வருமான வரித்துறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

1987-88 மற்றும் 1988-89 ஆகிய நிதியாண்டுகளில் பெற்ற வருமானத் தொகை ரூ.52 கோடி மற்றும் 85 லட்சங்களுக்கு வருமானவரி செலுத்த வேண்டும் என வின்சத்தாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது.

வின்சத்தாவின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.

இது தொடர்பாக கடந்த மாத இறுதியில் தீர்ப்பளித்த வருமான வரித்துறை தீர்ப்பாயம், போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ரூ.41 கோடி கமிஷன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த கமிஷன் தொகைக்கு உரிய வரியை வின்சத்தாவும், குட்ரோச்சியும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆழக் குழித்தோண்டி புதைக்கப்பட்டதாக காங்கிரஸ் நினைத்துக்கொண்டிருக்கும் போபர்ஸ் பூதம், வருமான வரித்துறை தீர்ப்பாயம் மூலம் மீண்டும் வெளிவந்தது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குட்ரோச்சி மீதான வழக்கை திரும்ப பெறக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு, நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, லஞ்சம் பெற்றிருப்பது உறுதியாகி இருப்பதால் இது விடயத்தில் சிபிஐ, தனது நிலையை மாற்றிக்கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு பின்னர், இவ்வழக்கு தொடர்பாக புதிய அறிவுறுத்தல்கள் எதுவும் அரசிடமிருந்து சிபிஐ-க்கு வரவில்லை என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக குட்ரோச்சி மீதான வழக்கை திரும்ப பெற நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1101/04/1110104031_1.htm

  • தொடங்கியவர்

போபர்ஸ் வழக்கு: குற்றவாளியை தப்ப விடும் 'உன்னத' புலனாய்வு

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலின் முக்கிய குற்றவாளியான ஒட்டோவியோ குட்ரோக்கியை தப்பச் செய்யவும், அதன் மூலம் அந்த ஊழலில் தொடர்புடையவர்களை காப்பாற்றவும், அந்த வழக்கையே முடிக்க அனுமதி கோரி மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தாக்கல் செய்த மனு மீது டெல்லி பெரு நகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நாளை தீர்ப்பளிக்கவுள்ளார்.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை முடித்துக்கொள்வது என்று மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் அடிப்படையில் ம.பு.க. தாக்கல் செய்த இந்த மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் அஜய் அகர்வால், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட வின் சத்தாவின் மகன், வருமான வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, ஒட்டோவியோ குட்ரோக்கியின் மீதான குற்றச்சாற்றை மேலும் உறுதிபடுத்தியுள்ளது என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு பதிலளித்த ம.பு.க.சார்பில் நேர் நின்ற அரசு வழக்கறிஞர் பி.பி.மல்ஹோத்ரா, வருமான வரித் துறை தீர்ப்பாயத்தின் முடிவு ‘ஒன்றும் புதிதல்ல’ (there is nothing new) என்று கூறி, அது ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பல்ல என்றும், ம.பு.க. தாக்கல் செய்த வழக்கோடு அந்த தீர்ப்பு எந்த விதத்திலும் தொடர்புடையது அல்ல என்றும் கூறியுள்ளார். இதை நீதிபதி வினோத் யாதவும் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குரைஞர் அஜய் அகர்வாலின் வாதம் நாளையும் (வியாழக்கிழமை) தொடரவுள்ளது என்றாலும், “இந்த வழக்கை இதற்கு மேலும் தொடர்வதற்கு எந்த நியாயமும் இல்லை” என்கிற ம.பு.க.வின் வாதமே ஏற்கப்படும் போல் தெரிகிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/05/1110105061_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.