Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழல் அரசியல்வாதிக்கு உற்சாகம் கொடுத்த திருந்தாத தமிழ் மக்கள்.

Featured Replies

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றம், எதிர்க்கட்சிகள், சி.பி.ஐ. ரெய்டு என்று மும்முனைத் தாக்குதலுக்கு ஆளான ராசா, கடந்த வியாழன் அன்று பெரம்பலூருக்கு வந்தபோது, உற்சாக வரவேற்பு கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துவிட்டனர் உடன்பிறப்புகள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுவிட்டு சொந்த ஊருக்கு வரும்போதோ அல்லது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வரும்போதோ அவருக்கு சொந்த ஊரில் வரவேற்பு அளிப்பது வழக்கம். இங்கே சற்று வித்தியாசமாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராசாவுக்கு ‘செ ன்டிமெண்ட்’ வரவேற்பு கொடுத்து அசத்தினர் அவரது ஆதரவாளர்கள்.

‘தி.மு.கழகத்திற்கும், தலைவர் கலைஞருக்கும் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மலே’ என்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று போஸ்டரை தயார் செய்தவர்களுக்கே தெரியவில்லை. இன்னொரு போஸ்டரில் ‘தர்மத்தை வீழ்த்த அதர்மங்கள் ஒன்றுகூடி யுத்தம் நடத்துகிறது. தர்மமே வெல்லும்’ என்று சொன்னது.

‘ஊட்டி மலை ரோஜா பெரம்பலூருக்கு ராஜா’, ‘அநியாயமாய் காயம்பட்ட நியாயமே’ என்று பெரிய எழுத்துக்களில் மின்னியது பல போஸ்டர்கள். ராசா பெரம்பலூருக்குக் கொண்டு வந்த திட்டங்களை முன்னிலைப்படுத்தியது இன்னொரு போஸ்டர்.

எங்கு பார்த்தாலும் போஸ்டர் மயமாக இருக்க... சென்னையில் இருந்து பெரம்பலூர் வந்த ராசாவுக்கு 13 கி.மீ. முன்பு திருமாந்துறையில் வரவேற்பு கொடுத்து அசத்தினார் மாவட்டச் செயலாளர்.

அங்கிருந்து மீண்டும் வாகன அணிவகுப்போடு வந்தவரை பெரம்பலூருக்குள் நுழையும் இடத்தில் கூடி நின்ற மக்கள் கூட்டம் கோஷம் எழுப்பி வரவேற்றது. மாலை நான்கு மணிக்கு பெரம்பலூருக்குள் நுழைந்தவர் ஒன்றரை கி.மீ. தூரத்தைக் கடந்து தனது அலுவலகத்துக்கு வர ஏழு மணியாகி விட்டது.

வாண வேடிக்கைகள், பூரண கும்பம், மாலைகள், சால்வைகள் என்று அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் மக்கள்(!). கூட்டம் அதிகமாகிப் போனதால் எல்லோரும் பார்க்கும் வண்ணம் அலுவலகத்தில் இருந்த மேஜை மீது அவரை ஏற்றி விட்டனர் உடன்பிறப்புகள்.

மக்களுக்குக் கை கொடுத்து அவர்களின் ஆதரவை ஏற்றுக்கொண்டார் அவர். சற்று நேரத்தில் களைத்துப் போனார். உள்ளே போய் அரை மணி நேரம் ஓய்வெடுத்தார். வெளியே ஏராளமான மக்கள் காத்திருப்பதைச் சொன்னதும், திரும்ப வந்து மக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.

ராசா பெரம்பலூருக்குச் செய்துள்ள சேவைகள் பற்றியும், ‘ஸ்பெக்ட்ரம் மறைக்கப்படும் உண்மைகள்’, ‘தலைவர் கி.வீரமணி அறிக்கை’, ‘மன்னிக்குமா பெரம்பலூர் மண்?...’ என்று பல தலைப்புகளிலும் கட்சியினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டு ராசா உள்ளே போக இரவு ஒன்பது மணியானது. அதன் பின்னர் கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்தவர், மறுநாள் மதியம் அங்கிருந்து கிளம்பினார். கடுமையான வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்டு வருகிறாராம் ராசா.

‘ஒரு நாளைக்கு ஐந்து முறை சிறிதளவு உணவு சாப்பிட வேண்டும்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். தொடர்ச்சியான பயணங்களாலும், விசாரணைகளாலும் அதைக் கடைப்பிடிக்க முடியாமல் போனதே இந்த வயிற்றுக் கோளாறுக்குக் காரணமாம்.

‘‘எத்தனையோ எம்.பி.க்கள் இந்த பெரம்பலூர்ல இருந்து ஜெயிச்சிருக்காங்க. ஆனா அவங்க யாரும் செய்யாத சாதனைகளைச் செய்து, இந்த பெரம்பலூருக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்து இந்த மாவட்டத்தையே முன்னேற்றியவர் அவர். அவர் இல்லைன்னா பெரம்பலூர் மாவட்டமே வந்திருக்காது.

பெரம்பலூரில் அதிகாரிகள் தங்கி வேலை பார்த்ததே இல்லை. இவரது திட்டங்கள் செயல் வடிவம் பெற்ற பிறகுதான் இதுவும் மக்கள் வாழத்தக்க ஒரு இடமாக மாறியது. இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர்கிட்ட பேசி பெரம்பலூர் மருத்துவக் கல்லூரிக்கு 50 கோடி நிதி வாங்கியிருக்கார்னா அவர் இந்த மண்ணை எவ்வளவு நேசிக்கிறார்னு பாருங்க’’ என்று கட்சிக்காரர்கள் அவரது புகழை அடுக்கிக்கொண்டே போனார்கள்.

“குடிக்க நல்ல தண்ணி இல்லாம இருந்த இந்த ஊருக்கு கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, இன்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக், சிறப்பு பொருளாதார மண்டலம், எம்.ஆர்.எஃப். டயர் கம்பெனி, பருத்தி ஆராய்ச்சி மையம் என அவர் கொண்டு வந்த திட்டங்களால் பெரம்பலூர் இன்னும் பத்து வருடங்களில் எங்கேயோ போய்விடும்.

தி.மு.க.வின் வேட்பாளர்கள் வெற்றி பெற இது உதவப் போகிறது. ஆனால், இதையெல்லாம் செய்த அவர் இன்னைக்கு சங்கடத்தில் இருக்கும்போது, இந்த மக்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல ஓடி வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?’’ என்று கேட்டார் தி.மு.க.வின் அண்ணாதாவூத்.

‘‘ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தால், சமீபகாலமாக அவர் காயப்பட்டதற்கு மருந்து தடவியது போல் அமையும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் யோசனை தெரிவித்தனர்.

அதன்படியே, ராசாவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்தோம். தலைவர் வெளிமாவட்டங்களுக்கு வரும் போது எந்த அளவுக்கு தொண்டர்கள் உணர்ச்சி பொங்க வரவேற்பு கொடுப்பார்களோ...அதே போல் பெரம்பலூர் எல்லையில் இருந்தே ராசாவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தோம்.

நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்தோ...பிரியாணி கொடுத்தோ அழைத்துவரவில்லை. இங்கு வந்தவர்கள் அனைவரும் உணர்ச்சி பொங்க அவர்களாகவே வந் தார்கள். எத்தனை சோதனை வந்தாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என்று அவர்கள் ராசாவை உற்சாகப்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்’’ என்று முடித்துக்கொண்டார் முக்கிய நிர்வாகி ஒருவர்.

ராசாவுக்குக் கொடுத்த வரவேற்பை வீடியோ எடுத்து அதை லோக்கல் சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள் உடன்பிறப்புகள். இதுகுறித்து எதிர்க்கட்சிகளிடம் கேட்டதற்கு, ‘நல்லா காமெடி பண்றாங்க...’ என்றனர்.

இந்த செய்தி குறித்த படங்கள் மற்றும் வீடியோ பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=22780

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.