Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுக் கேட்டதால் ஒழிந்துபோன அரசியல்வாதிகள்

Featured Replies

எஃப்.எம். ரேடியோக்களை விட இன்று அதிக அளவில் பொதுமக்களால் விரும்பிக் கேட்கப்படுவது தொலைபேசி உரையாடல்கள்தான். இந்திய அரசியலில் இன்று தவிர்க்கவே முடியாமல் போய்விட்ட தொலைபேசி உரையாடல்கள் அரசியல்வாதிகள் பலரின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைபேசி உரையாடல்கள்தான் முக்கிய பங்கு வகித்தது. ஆ.ராசாவின் பதவி பறிப்பு, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முடங்கியது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீதான சர்ச்சை என நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பல ரகசியங்களை வெளிக் கொண்டு வந்தன.

‘நாட்டின் பாது காப்புக்கும், வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கவும் இப்படிப்பட்ட தொலைபேசி ஒட்டுக்கேட்பு தேவைதான்’ என அண்மையில் பிரதமர் ம ன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்திருந்தார். இது தனி மனித உரிமையில் தலையிடுவது என்ற கருத்தும் ஒருசாராரால் வைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் 1963-ல் ஜான் கென்னடி ஜனாதிபதியாக இருந்தபோது, அட்டர்னி ஜெனரலாக இருந்த அவரது தம்பி ராபர்ட் கென்னடி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் உட்கட்சிக்குள் தங்களுக்கு எதிரிகளாக இருந்தவர்களது தொலைபேசிகளை டேப் செய்யச் சொல்லி உத்தரவிட்டிருந்தார். இது அப்போதே பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. 1972-ல் அமெரிக்க அதிபராக இருந்த நிக்ஸன் எதிர்க்கட்சியினர் போன்களை டேப் செய்ததால் பதவி இழந்தார்.

இந்தியாவில் 1988-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே எதிர்க்கட்சியினரது தொலைபேசிகளை டேப் செய்ய உத்தரவிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை தேசிய அளவில் எழுப்பியதால் அவரது பதவி பறிக்கப்பட்டு, எஸ்.ஆர்.பொம்மை முதல்வர் ஆக்கப் பட்டார்.

ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி மாளிகை தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங் பரபரப்பான கு ற்றச்சாட்டுக்களை எழுப்பினார். தற்போது கர்நாடக முதல்வராக உள்ள எடியூரப்பா எதிர்க்கட்சியினரது தொலைபேசிகளை டேப் செய்து வருவதாக மதச்சார்பற்ற ஜனதாதள

தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டிவருகிறார். தமிழகத்திலும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்திய அரசின் டெலிகிராப் ஆக்ட் பிரிவு 5(2)ன்படி, ‘‘ஒருவரது நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அவரது தொலைபேசி உரையாடலைக் கண்காணிக்கலாம்’’ என்று கூறுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 21-ன் கீழ், ‘‘அரசாங்கத்தால் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவது தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறித் தலையிடுவது போலாகும்’’ என்று சிவில் உரிமைக்கான மக்கள் கழகம் இந்திய அரசாங்கத்தை எதிர்த்து 1997-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மூன்று முக்கிய தீர்ப்புகளை வழங்கியது.

‘‘ஒருவரது தொலைபேசியை டேப் செய்துதான் தீரவேண்டுமென்றால் மத்திய, மாநில அரசுகளின் உள்துறைச் செயலாளர்கள் அதற்கான உத்தரவை எழுத்து பூர்வமாகப் பிறப்பிக்க வேண்டும்.

ஒருவரது டெலிபோனை டேப் செய்ய வேண்டுமென்றால் அதற்கான காரணங்கள் வலுவாக இருக்க வேண்டும்.

உள்துறைச் செயலரின் உத்தரவு இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னரும் டேப் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மற்றொரு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். இது ஆறு மாதங்கள் செல்லத்தக்க வகையில் இருக்கும்.

இந்த உத்தரவின் நகல்களை கேபினட் செயலர், சட்டத்துறைச் செயலர் மற்றும் தொலைத்தொடர்புத் துறைச் செயலர் போன்றோருக்குக் கட்டாயம் அனுப்பிவைக்க வேண்டும். டேப் செய்ததில் தேவையான விவரங்களைச் சேகரித்த பின்னர், அதை இரண்டு மாதங்களுக்குள் அழித்துவிட வேண்டும்’’ என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த வழிமுறைகளைப் பின்பற்றாமல், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு வேண் டப்படாதவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு வருகிறது என்பது மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.

இந்திய அரசின் சார்பாக ‘நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன்’ என்ற அமைப்புதான் இந்த டெலிபோன் டேப் செய்யும் விவகாரத்தைக் கவனித்து வருகிறது என்பது அவர்களின் கூடுதல் குற்றச்சாட்டாகும்.

இதுகுறித்து நாம் சட்ட வல்லுனர்கள் சிலரிடம் பேசியபோது, “தொலைபேசி டேப் செய்வதில் சுப்ரீம் கோர்ட் 1997-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்புப்படி எந்த அரசும் இதுவரை செயல்படவில்லை. உதாரணத்துக்கு, நீரா ராடியா 2009 மே மாதம் பேசியதாகக் கூறப்படும் டேப்புகள் இப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது அரசியல் பரபரப்புக்குப் பயன்படுமே தவிர சட்டப்படி செல்லுபடியாகாது. ஒருவேளை அரசு முறையான உத்தரவைப் பிறப்பித்து நீராராடியாவின் பேச்சுக்களைப் பதிவு செய்திருந்தாலும், தாமதமாக அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது பயன்தராது. பதிவு செய்யப்பட்ட டேப்புகளை இரண்டு மாதத்திற்கு மேல் வைத்திருப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது என்று சொல்லி அவர்கள் எளிதில் தப்பிவிட வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் அரசாங்கம் தங்களுக்கு வேண்டப்படாதவர்களின் பேச்சுக்களை டேப் செய்து அதை மீடியாக்கள் மூலம் கசிய விட்டு தங்கள் எதிரிகளின் அரசியல் இமேஜை டேமேஜ் செய்வதற்கு மட்டுமே இது பயன்படும். இதன் மூலம் எவரையும் நடவடிக்கைக்கு அவ்வளவு சீக்கிரமாக உட்படுத்த முடியாது’’ என்றனர்.

இச்செய்தி குறித்த படங்கள் மற்றும் வீடியோ பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=22781

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.