Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடார் ஓட்டுக்களைக் கவர டாஸ்மார்க்கில் கள் விற்பனையா? தி.மு.கவின் அதிரடி திட்டம்.

Featured Replies

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்க, நெருங்க மக்களைக் கவர என்ன செய்யலாம் என அரசியல் கட்சிகள் யோசிக்க ஆரம்பித்து விட்டன. ஆளுங்கட்சியான தி.மு.க., தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கவர்னர் உரையில் மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதில் முக்கிய அம்சமாக ‘கள்’ இறக்க அனுமதி தரப்போகிறார்களாம்.

தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள வாக்குகளை அள்ள ‘கள்’ இறக்குவதற்கான அனுமதியை வழங்கும் அரசின் முடிவை, கவர்னர் தனது உரையில் அறிவிப்பார் என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் சொல்கிறது.

தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது, ”தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் எங்களுக்கு மிகப்பெரிய அடி விழுந்தது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்கள் என எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அது நாங்கள் எதிர்பார்த்த பலனை எங்களுக்குத் தரவில்லை.

கொங்கு மண்டலத்தில் தேங்காய்க்கு சரியான விலை இல்லையே என்று சோர்ந்து போய் இருந்த விவசாயிகள் மத்தியில் கொங்குநாடு முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு கள் இயக்கம் போன்ற அமைப்புகள் ‘கள்’ இறக்கி விற்றால், நல்ல லாபம் கிடைக்கும் என்று தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. கொங்குநாடு முன்னேற்றக் கழகம் இந்தப் பிரச்னையை மையமாக வைத்துத்தான் இப்பகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றது.

தென்மாவட்டங்களில் நாடார் அமைப்புகளும் இப்பிரச்னையில் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு இயக்கங்கள் நடத்தி வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டி, அதன் மூலம் வருகிற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்று தலைமை நினைக்கிறது. அதனால்தான் கள் இறக்க அனுமதி தரப் போகிறார்கள்’’ என்கிறார்கள்.

கள் இறக்கி விற்பது எந்த வகையில் நடைமுறைப்படுத்தப்படும்? என்ற கேள்வியுடன் ஆட்சிக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி அங்கேயே விற்கும் உரிமத்தை அந்த அரசுகள் வழங்கியுள்ளன.

ஆனால், தமிழகத்தில் கள்ளில் கலப்படம் அதிக அளவில் செய்யப்படுவதால் அது விஷக் கள்ளாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக எங்கள் ஆய்வில் தெரிய வந்தது. இதனால் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கள்ளை கொள்முதல் செய்து அதை அரசே பதப்படுத்தி ‘டாஸ்மாக்’ மூலம் விற்பனை செய்யலாம் என அதிகாரிகள் குழு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

கள் இறக்கி விற்கும் தொழிலில் கிராமப்புறங்களில் உள்ள எல்லா சமுதாயத்தினரும் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதற்கு அனுமதி வழங்கினால், கிராமப்புற பொருளாதாரம் வளர வாய்ப்புள்ளது என சிவசுப்பிரமணியம் கமிஷன் அளித்த அறிக்கையை அரசு மிகவும் உன்னிப்பாக பரிசீலித்து வருகிறது. இதன் எதிரொலியாகத்தான் கவர்னர் உரையில் இது தொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகும் என நாங்கள் நம்புகிறோம்’’ என அவர்கள் தெரிவித்தனர்.

கள் இறக்க அனுமதி கேட்டு தொடர் போராட்டங்களை நடத்திவரும் தமிழ்நாடு நாடார் பேரவையின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜிடம் இதுகுறித்துப் பேசியபோது,

‘‘கள் இறக்கும் அனுமதி கேட்டு கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நாங்கள்தான் நடத்தி வந்தோம். 2005-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் நாங்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து எங்களில் சிலரது உயிரை இழந்திருக்கிறோம். அரசு மீண்டும் கள் இறக்க அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டால் அதற்காக எங்கள் நன்றிகளையும், பாராட்டுக்களையும் முதல்வருக்குத் தெரிவிப்போம்.

ஆனால், இந்த ஒரு விஷயம் மட்டுமே அரசுக்கு அதரவு ஓட்டுக்களாக மாறும் என்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது. எங்கள் சமுதாயத்துக்கு அரசியல் அதிகாரம் இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களுக்குரிய அரசியல் அதிகாரத்தை யார் வழங்குகிறார்களோ அவர்களது வெற்றிக்குத்தான் நாங்கள் பாடுபடுவோம்’’ என்றார்.

தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமியிடம் பேசியபோது, “ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உணவு தேடும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் தனது 47-வது பிரிவின் கீழ் வழங்கியுள்ளது. அதன்படி கள் என்பது உணவுப்பொருள் என்பது தான் எங்கள் வாதம்.

எம்.ஜி.ஆர். தனது இறுதிக்காலத்தில் உடல் நலம் குன்றியிருந்தபோது அவருக்கே தெரியாமல் கள்ளை மதுவிலக்குப் பட்டியலில் சேர்த்து விட்டனர். 23 ஆ ண்டுகளுக்குப் பிறகு அதை நீக்கி, இந்த அரசு உத்தரவு பிறப்பித்தால் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.

இல்லையென்றால், நாங்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி வரும் ஜனவரி 21-ம் தேதி திட்டமிட்டபடி கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவோம்’’ என்று தீர்மானமாகக் கூறுகிறார் நல்லசாமி.

கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி ‘‘அப்படி ஓர் அறிவிப்பு வெளியானால் அது கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்த வெற்றிதான். மற்றபடி வரும் தேர்தலில் எங்கள் நிலைப்பாடுகள் குறித்து கட்சியின் உயர்மட்டக்குழு உரிய நேரத்தில் கூடி முடிவு செய்யும்’’ என்றார்.

இதுதொடர்பாக தி.மு.க. வட்டாரங்களில் பேசியபோது, “கொங்குநாடு முன்னேற்றக் கழகம், மற்றும் நாடார் அமைப்புகளிடம் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டத்தில் இரண்டு, மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டது. விவசாயக் கடன் ரத்து மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதில் கொங்கு அமைப்புகள் எங்களுடன் இணக்கமாகவே உள்ளன.

வணிகர்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதன் மூலம் நாடார் சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராகவே உள்ளன. இடையில் சின்னச் சின்ன பிரச்னைகள்தான் உள்ளது. இதையும் கலைஞர் சரிசெய்து விடுவார்’’ என்று நம்பிக்கையோடு பேசுகின்றனர்.

கள் இறக்கும் அனுமதியை வழங்குவதன் மூலம் தமிழகத்தின் இரண்டு பெரும்பான்மை சமுதாய வாக்குகளைக் கவர அரசு எடுத்துள்ள அஸ்திரம், எந்த அளவுக்குத் தேர்தலில் பலனளிக்கப் போகிறது என்று பார்ப்போம்.

படங்கள் பார்க்க.....

http://www.thedipaar.com/news/news.php?id=22908

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.