Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்த உடலிலிருந்து நகைகள் கொள்ளை! இப்படியும் ஒரு ஈனப்பிழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த உடலிலிருந்து நகைகள் கொள்ளை! இப்படியும் ஒரு ஈனப்பிழைப்பு!

[ பிரசுரித்த திகதி : 2011-01-11 07:03:18 AM GMT ]

பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 02.01.2011 அன்று இறந்த உடலில் இருந்து இறந்த பெண்ணொருவர் அணிந்திருந்த தாலி மற்றும் தோடு என்பன பிணவறைக்கு பொறுப்பான அதிகாரியால் களவாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொகவந்தலாவை பிரதேசத்துக்குட்பட்ட தோட்டத்தில் வாழும் 50 வயதுடைய புஸ்வள்ளி என்ற பெண் சுகவீனம் காரணமாக 31.12.2011 அன்று பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் பயனின்றி 02.01.2011 மாலை இறந்திருக்கின்றார்.

குறித்த பெண் இறந்த சந்தர்ப்பத்தில் பெண்ணின் மகள் இருவர் மட்டுமே அவரின் அருகில் இருந்ததாகவும் பிணவறை பொறுப்பதிகாரி பூதவுடலை பிணவறைக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பின் குறித்த அதிகாரியிடம் நகைகள் கேட்கப்பட்டபோது இறந்த பெண் நகைகள் ஒன்றும் அணிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கபட்டிருக்கின்றது.

பின் மறுநாள் காலை சில உறவினர்களுடன் சென்று மீண்டும் கேட்கப்பட்டபோது தாலி மட்டும்தான் இருந்ததாக கூறி தாலியை கையளித்திருக்கின்றார். இது தொடர்பாக வைத்தியசாலை உயர் அதிகாரியிடமும் பொகவந்தலாவை பொலிஸ் அதிகாரியிடமும் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவர்கள் பெற்று தருவதாக கூறி ஒரு வாரம் ஆகிய நிலையிலும் இதுவரையிலும் நகைகள் உரியவர்களிடம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி நோயாளர்களை பார்வையிட செல்பவர்களிடத்தில் நோயாளிகள் தங்கியிருக்கும் அறை மேற்பார்வையாளர்கள், காவலாளிகள் காசுகளையும் சிகரட் போன்ற பொருட்களையும் வலுக்கட்டாயமாக பெற்றுக்கொள்வதாகவும் கொடுக்க மறுக்கின்ற பட்சத்தில் அவ்வாறான நோயாளிகளை பார்வையிட செல்பவர்களிடத்தில் பாரபட்சமாக நடந்துக்கொள்வதாகவும் தெரியவருகின்றது.

எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து பூதவுடலையும் அதன் அங்கங்களையும் விற்கும் நிலைக்கூட தோன்றலாம் என் மக்கள் அங்கலாய்க்கின்றனர். இந்த விடயத்தினை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனத்திற் கொண்டு இவ்வாறான அறுவறுக்கத்தக்க ஈனத்தனமான செயல்களை தடுக்க முன்வர வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

மேலும் இவ்வைத்தியசாலையிலே நோயாளர்களுக்கு உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை எனவும் அதில் திருப்பதிகரமான நிலை இருக்கவில்லை எனவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

tamilulakam.com

குளவிக்கல்லால் தாக்கி தந்தை படுகொலை; பன்விலயில் கொடூரம்

குளவிக்கல்லால் தந்தையின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு மகன் பொலிஸில் சரணடைந்த சம்பவமொன்று இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பன்வில பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட மடுல்கலை, கல்கொட கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கந்தையா (வயது 64) என்பவரே கொல்லப்பட்டவராவார். வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரிக்கவே குளவிக்கல்லை எடுத்து வந்த மகன் தந்தையின் தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து மகன் பன்வில பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/14719-2011-01-11-12-51-36.html

70 வயதான பெண் அடித்துக் கொலை

திருகோணமலை மத்திய வீதி உவர்மலை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான பத்மதேவி ஸ்ரீஸ்கந்தராஜா என்ற பெண்மணி இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/14737-70-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.