Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்திய கேப்டன்.

Featured Replies

தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடந்தது. இதையொட்டி பத்திரிகைகளில் தே.மு.தி.க. நிர்வாகிகளால் 7-ம் தேதி மாலை பத்திரிகை ஒன்றில் தரப்பட்ட விளம்பரத்தில், அ.தி.மு.க.வை விமர்சித்து விளம்பரம் ஒன்று வெளியாக, அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி ஏற்படும் என இருகட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த மர்ம விளம்பரம் பெரிய பரபரப்பை ஏற்படுத் தியது. இதையடுத்து, பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பிய விஜயகாந்த், ‘‘முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை விமர்சித்து வந்த விளம்பர த்திற்கும், தே.மு.தி.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரானவர்கள் ஒன்றுசேர்ந்து விடக்கூடாது என்ற தீய நோக்க த்தோடு, கூட்டணியைக் குலைக்கும் வகையில் இந்த விளம்பரம் திட்டமிட்டு தரப்பட்டுள்ளது’’ எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகி விட்டது என உற்சாகமான தே.மு.தி.க. தொண்டர்கள், விஜயகாந்த் அதை சேலம் மாநாட்டில் அறிவிப்பார் என எதிர்பார்த்தனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களைப் பார்த்து மிரண்டு போயுள்ள தி.மு.க. அரசு, சேலம் தே.மு.தி.க. மாநாட்டிற்கும் பல்வேறு தடைகளைப் போட்டது. அதையும் மீறி லட்சக்கணக்கில் திரண்டிருந்தனர் தே.மு.தி.க.வினர்.

சேலம் வரும் வழியெங்கும் சுமார் 1500 கி.மீ. சுற்றளவுக்கு கட்சிக் கொடிகள் இடைவெளியின்றி தொடர்ந்து நடப்பட்டிருந்தன. தே.மு.தி.க.வினரின் பல பேனர்கள் ஆளுங்கட்சியினரின் புகாரையடுத்து, போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டன.

சரியாக மதியம் 12.45 மணிக்கு சேலம் எல்லையான தீவட்டிப்பட்டியை வந்தடைந்த விஜயகாந்துக்கு அதிர்வேட்டு முழக்கத்துடன், தே.மு.தி.க. மகளிரணியைச் சேர்ந்த 100 பேர் பூரண கும்ப மரியாதை செய்தனர். 12 மணிக்கெல்லாம் மாநாட்டுத் திடலில் கொடியேற்றத் திட்டமிட்டிருந்த விஜயகாந்த் காலதாமதத்தால், பிரசார வேனை விட்டுக் கீழிறங்காமல் பூச்செண்டு, சால்வை போன்றவற்றைப் பெற்றுக் கொண்டார்.

அவர் வந்த வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக சுமார் 750-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. போக்குவரத்தில் ஏற்பட்ட திடீர்த் தடையின் காரணமாக அதில் ஐந்து வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. ஆனால், அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மதியம் 2.15 மணிக்கு மாநாட்டுத் திடலை வந்தடைந்த விஜயகாந்த், அங்கு கொடி ஏற்றி விட்டு ஓய்வெடுக்கச் சென்றார்.

தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட, மேடையில் பேசிய அனைவருமே, கூட்டத்தைப் பற்றி வியந்து பேசினர். ‘‘இங்கிருக்கும் கூட் டத்தைப் பார்த்தால் தமிழகத்தின் தலைநகராக சேலத்தைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது’’ என்று சிலாகித்துக் கூறினார் பண்ருட்டியார்.

கூட்டத்தைப் பார்த்த பிரேமலதா உற்சாகத்தில், “மற்ற கட்சிகளைப் போல கொக்கி போட்டு திருட்டு கரண்டை நாங்க எடுக்கலை. மின்சாரத்தை ஜெனரேட் டர்கள் மூலமாக ஏற்பாடு செய்திருக்கிறோம். அதே போல் மாநாடு நடத்துகிறோம் என்பதற்காக தொழிலதிபர்களிடமோ, மில் அதிபர்களிடமோ பணம் வாங்கவில்லை. எல்லோரும் சொந்தக் காசு போட்டு இங்கு குவிந்துள்ளனர்.

மாநாட்டுக்காக ஹெலிகாப்டரில் வரச் சொல்லி சேலம் மாவட்டச் செயலாளர்கள் வற்புறுத்தினார்கள். மக்களோடு மக்களாக வந்து செல்லவேண்டும் என் பதற்காக கேப்டன் தரை வழியாக வேனில் வந்தார். இதுவரைக்கும் நம் தலைவரை கேப்டன் என்றுதான் அழைத்து வந்தோம். ஆனால், இந்த மேடையில் அவரை டாக்டர் என்று அழைக்கப் போகிறோம்’’ என்று விஜயகாந்தை புகழ்ந்து பேசி அமர்ந்தார்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முன்வரிசையில் அமர்ந்திருந்த சிலர் போதை தலைக்கேற கற்களை பத்திரிகையாளர்கள் மீது எறிந்து கலாட் டாவில் ஈடுபட்டனர். இதில் சில பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். சீருடையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொண்டர் படையைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்தார். தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸார் வெளியேற்றினர்.

விவசாயம், நெசவுத் தொழில்கள் சம்பந்தமான சில தீர்மானங்கள் வாசிக்கப்பட்டபோது, சுவாரஸ்யமே இல்லாமல் அமர்ந்திருந்தார்கள் தொண்டர்கள். ‘தி.மு.க. ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும்’ என்ற தீர்மானத்தை மட்டும் காதுகிழிய கைதட்டி வரவேற்றார்கள்.

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அடுத்து மைக்கைப் பிடித்த விஜயகாந்த், சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார். ‘‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என கருணாநிதி சொல்கிறார். அவர் இருக்கும் வரை ஏழைகள் அப்படியேதான் இருப்பார்கள்’’ என்ற விஜயகாந்தின் டயலாக்கிற்கு பொதுமக்கள் ம த்தியில் செம க்ளாப்ஸ் கிடைத்தது.

‘‘செல்வகணபதி, சேடப்பட்டி முத்தையா, இந்திரகுமாரி போன்றவர்கள் எல்லாம் சுடுகாட்டுக்கூரை ஊழல், செருப்பு ஊழல் செய்தார்கள் என்று வழக்குப் போட்டது தி.மு.க. அரசுதான். ஆனால் அவர்கள் அனைவரும் இன்று தி.மு.க.வில்தான் இருக்கிறார்கள்’’ என்று சொன்னவர்,

கருணாநிதியை மையப்படுத்திப் பேச ஆரம்பித்ததும், கூட்டணி குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்த்தனர். ‘‘நான் கூட்டணி குறித்து பேசுவேன் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கும் எழுதுவதற்கு ஏதாவது விஷயம் வேண்டுமே’’ என்று சிரித்த விஜயகாந்த், தொண்டர்களைப் பார்த்து, ‘‘கூட்டணி முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். கூட்டணி வேண்டும் என்கிறவர்கள் கை தூக்குங்கள்’’ என்றதும், பெரும்பாலான தொண்டர்கள் கை தூக்கினர். ‘‘அ.தி.மு.க.வோடு கூட்டணி வேண்டும்’’ என்று தொண்டர்கள் கத்தியது மாநாட்டுத் திடலையும் தாண்டி வெளியே கேட்டது.

‘‘சட்டமன்றத்தில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்த தீர்மானம்தான் நிறைவேற்றப்படும். அதுபோல கூட்டணி வேண்டும் என்கிற உங்கள் முடிவையும் நிறைவேற்றுவேன். ஆனால், கூட்டணிக்காக உங்களை அடகு வைக்க மாட்டேன். தேவைப்பட்டால் என்னைக் கூட அடகு வைப்பேன். கூட்டணி குறித்த முடிவை என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும்’’ என்று சொன்னார்.

கூட்டணி பற்றி வெளிப்படையாக விஜயகாந்த் கூறாதது தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தினாலும், இதுவரை கூட்டணி பற்றியே பேசாதவர், கூ ட்டணி வைப்பேன் என்று சொன்னதே பெரிய விஷயம். நிச்சயம் எங்கள் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் என ஆறுதல் சொல்லியபடி கலைந்து சென்றனர் தொண்டர்கள்.

அ.தி.மு.க.வை விமர்சித்து தே.மு.தி.க. சார்பில் யார் விளம்பரம் கொடுத்திருப்பார்கள் என்கிற கேள்வியும் மாநாட்டில் அதிகமாகப் பேசப்பட்டது. தே.மு.தி.க. கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செந்தாமரைக் கண்ணன், துறைமுகம் பகுதிச் செயலர் விசாகராஜன், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் ஆர்.கோவிந்தன் ஆகியோர் பெயரில்தான் அந்த விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவர்கள் அனைவரும் சேலம் மாநாட்டில் கலந்து கொண்டதோடு, மேடையிலும் அமர வைக்கப்பட்டனர். அவர்கள் தவறு செய்திருந்தால் நிச்சயம் விஜயகாந்த் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பார். எனவே, இதன் பின்னணியில் தி.மு.க.வின் மத்திய அமைச்சர் ஒருவர் இருப்பதாக சந்தேகப்படு கிறார்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள். அவர்தான், ‘‘தே.மு.தி.க. - அ.தி.மு.க. உறவில் குழப்பம் ஏற்படுத்தி விஜயகாந்தை தனித்து போட்டியிட வைப்பேன்’’ என தன் தலைமையிடம் சவால் விட்டாராம்.

காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு இந்த சதியில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகமும் தே.மு.தி.க.வினருக்கு இருக்கிறது. தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கக் கூடாது என சென்னை வந்த மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினாராம் அ.தி.மு.க.வில் இருந்து காங்கிரஸுக்குத் தாவிய அந்த பிரமுகர்.

அந்தப் பத்திரிகை விளம்பரத்துக்கு விஜயகாந்தின் உடனடி ரியாக்ஷனும், ஜெயலலிதா பாணியில் ‘கூட்டணி முடிவை நான் எடுக்கிறேன்’ என்ற அறிவிப்பும் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணியை உறுதிப்படுத்தியிருப்பதாகவே நம்பத் தோன்றுகிறது.

சேலம் மாநாட்டில் தான் முதன்முதலாக தே.மு.தி.க. சார்பில் நிதி வசூல் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் அருண் குமார் 51 லட்சம் நிதி கொடுத்தார். மேற்கு மாவட்ட மேச்சேரி ஒன்றியச் செயலாளர் பூபதி 50 ஆயிரம் தேர்தல் நிதி தந்தார்.

இது தவிர மாநாட்டுத் திடலில் பெரிய உண்டியல் வைக்கப்பட்டு நிதி வசூலிக்கப்பட்டது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.ஆர்.பார்த்திபன் வெள்ளிச் செங்கோலை விஜயகாந்துக்கு நினைவுப் பரிசாகத் தந்தார். வெள்ளி வாள் ஒன்று தே.மு.தி.க. தொண்டர் ஒருவரால் விஜயகாந்துக்கு பரிசளிக்கப்பட் டது. விஜயகாந்தின் அறிக்கைகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு மாநாட்டில் வெளியிடப்பட்டது. புத்தக விற்பனை நிதியும் தேர்தல் நிதியில் சேர்த்துக் கொள்ள ப்படுமென விஜயகாந்த் அறிவித்தார்.

சேலம் மாநாடு குறித்த படங்கள் மற்றும் வீடியோ பார்க்க......

http://www.thedipaar.com/news/news.php?id=23053

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.