Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபரிமலை சன்னிதானத்திலும் மொழி வேறுபாடா? குமுறும் தமிழக பக்தர்கள்

Featured Replies

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 2 கோடியைத் தாண்டிவிட்டதாக திருவாங்கூர் தேவசம் போர்டு பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால்... அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் பக்தர்கள் ‘ஐயோ..அப்பா’ என்று அலறுவது யார் காதிலும் விழவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 70 நாள் மகரவிளக்கு பூஜை தொடங்கியது. டீசல், பெட்ரோல் விலை உயர்வால் எகிறிப்போன வாகன வாடகையைக் கூட பொருட்படுத்தாமல், ஐயப்பனை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கானோர் இந்தியா முழுவதும் இருந்து செல்கின்றனர்.

கடும் குளிரிலும் வரும் பக்தர்களுக்கு உணவு, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தருவதிலும் தேவசம் போர்டு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் பக்தர்கள்.

வட்டிக்கு கடன் வாங்கிக் கொண்டு கூட பல பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்கிறார்கள். அங்கு சென்று பசிக்கு உணவைத் தேடும் அவர்கள் விலையைக் கேட்டதும் மயக்கம் போட்டே விழுந்து விடுகிறார்கள். இட்லி, தோசை குறைந்தது 30 ரூபாய்க்கும், சாப்பாடு 100 ரூபாய்க்கும், டீ, காபி 10 ரூபாய்க்கும் விற்கின்றனர்.

கேரள அரசுக்குச் சொந்தமான ஓட்டல்களிலே இந்த விலை என்றால்... தனியார் ஓட்டல்களைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அதிக விலை கொடு த்து சாப்பிட்டாலும், சுகாதாரமற்ற வகையில் உணவு இருப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

கழிப்பிட வசதி ஏதும் இல்லாததால் பக்தர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. சரியான தங்கும் இடம் இல்லாததால் குளிரில் நடுங்கிய 2 பேர் இறந்தனர்.

‘டம்ப் அண்ட் சேஃப்டி’ என்ற முறையில் டிஜிட்டலில் கண்காணிப்பு செய்து பேட்ச் பேட்சாக சன்னிதானத்துக்கு பக்தர்களை அனுப்புகிறார்கள். அப்போதும் கூட நெரிசல் அதிகமாகி வயதான பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு போகிறார்கள்.

வரிசையில் செல்வதை ஒழுங்குபடுத்துவதற்காகக் கட்டப்பட்ட கயிறு அறுந்து சமீபத்தில் 2 பேர் இறந்தார்கள். 14 பேர் காயமடைந்தனர். அதன் பின்னரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவசம் போர்டு தயாராக இல்லை.

கேரள அரசு காட்டும் பாரபட்சம் மற்ற மாநிலத்தவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. ரூம் புக்கிங், ரெஸ்ட் ஹால் போன்றவற்றிற்கு கேரள மாநிலத்தவருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சபரிமலைக்குச் சென்று திரும்பிய தாமரைக்குளத்தைச் சேர்ந்த சேது என்பவர் அங்கு நடக்கும் நிகழ்வுகளை கொட்டித் தீர்த்தார்.

‘‘குமுளி, எரிமேலி, பம்பை, நீலக்கல் ஆகிய செக் போஸ்ட்டுகளில் ‘வாகனப் புகை பரிசோதனை செய்கிறோம்’ என்று வேண்டுமென்றே நீண்ட நேரம் தமிழர்களைக் காக்க வைக்கின்றனர். ஒவ்வொரு செக் போஸ்ட்டுகளிலும் நீண்ட வரிசையில் நிற்பது தமிழக வாகனங்கள்தான். கேரள வாகனங்களை கண்டு கொள்ளாமல் உடனே அனுப்பி விடுகின்றனர்.

சபரிபீடம், சரங்குத்தி, அப்பாச்சி மேடு, நீலிமலை ஆகிய இடங்களில் கேரள வாகனங்களை மட்டும் அனுமதிக்கின்றனர். தமிழக வாகனங்களை 10 கி.மீ. தூர த்துக்கு முன்பாகவே நிறுத்திவிட்டு பக்தர்களை அலைக்கழிக்கின்றனர். தமிழர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்துகிறார்கள். இத்தனைக்கும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்தான்’’ என்றார்.

இதற்கிடையே, தமிழக பக்தர்களுக்கு நேரும் துன்பங்கள் குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டுக்கும், கேரள அரசுக்கும் புகாராக அனுப்பியிருக்கிறது இந்து மக்கள் கட்சி.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணனிடம் கேட்டோம்.

‘‘இந்த வருடம் ஐயப்பன் கோயில் உண்டியலில் நாம் மட்டும் 75 கோடி ரூபாயை காணிக்கையாகக் கொட்டியிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பக்தர்களால் கோயிலுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

நாம் மொழி, இன பேதம் பார்ப்பதில்லை. ஆனால், அவர்கள் மொழி வெறியர்களாக இருக்கிறார்கள். எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் பக்தர்களை அவதிப்பட வைக்கின்றனர்’’ என்றார்.

தமிழகத்தில் இருந்து புறப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயரிடம் கேட்டோம்.

‘‘எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. இதில் தமிழக, ஆந்திர பக்தர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அனைவருக்கும் அடிப்படை வசதிகளை தேவசம் போர்டு செய்து வருகிறது.

தகவல் மையங்களில் கூட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை பணியாளர்களாக நியமித்துள்ளோம். இதுவரை 2 கோடி பக்தர்கள் தரிசனம் முடித்தி ருக்கிறார்கள். நாங்கள் மொழி, மாநிலப் பாகுபாடு ஏதும் பார்ப்பதில்லை. எல்லோரும் ஒரே வழியில் வருவதால் செக்போஸ்ட்டில் வேண்டுமானால் கால தாமதம் ஏற்படலாம்.

மற்ற இடங்களில் ஏற்படும் தாமதத்துக்கு கூட்ட நெரிசலே காரணம். இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் சிரமத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

‘‘இருமுடி செலுத்த 18 படிகளில் ஏறும்போது, போலீஸாரும், தேவசம் போர்டு செக்யூரிட்டிகளும், தமிழர்களை திட்டும் வார்த்தைகள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷத்தையும் மீறிக் கேட்கிறது. நாயைப் போல நடத்துகிறார்கள்’’ என்று வேதனையில் புலம்புகிறார்கள் தமிழக பக்தர்கள்.

படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=23068

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.