Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் வேட்பாளர்களுக்கு திமுக ஒத்துழைக்காவிட்டால், எங்களது இன்னொரு முகத்தை காட்டவேண்டியது வரும்.

Featured Replies

அற்ப நிலத்துக்காக ஆறு பேரின் ஆயுளையே முடித்த குற்றவாளியை, ஒரு மந்திரி ஜெயிலில் போய் குசலம் விசாரிப்பதா? இதற்குத்தான் மக்கள் ஓட்டு போட்டு உங்​களைத் தேர்ந்தெடுத்தார்களா? ஸ்பெக்ட்ரம் விவகாரமும், ஆறு பேர் படுகொலையும்தான் இந்த ஆட்சியின் கரும்புள்ளிகள். சம்பந்தப்பட்டவர்களை தி.மு.க. தலைமை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும். இல்லா​விட்டால், மக்களே தூக்கி எறிவார்கள்!'' - இப்படி சேலத்தில் சிங்கத்தின் குகைக்கே சென்று, அதன் பிடரியை உலுக்கிவிட்டு வந்திருக்கிறார் யுவராஜா. இன்றைய தேதியில் இவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்றாலும், கருணாநிதிக்கோ இடைஞ்சல் காங்கிரஸ்காரர்!

''பாதயாத்திரை, ஆலோசனைக் கூட்டங்கள் செல்கிறீர்கள்... மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?''

''பதவிப் பல்லக்கில் ஏறியதும், நம் ஊர் அரசியல்வாதிகள் வந்த பாதையை மறந்துவிடுகிறார்கள். தொகுதிக்குப் பெரி​தாக எதுவும் செய்யாவிட்டாலும்கூட, அவர்களின் இன்ப, துன்பங்களில் கலந்துகொண்டு மக்களோடு மக்களாக வாழ்ந்தால், எந்தக் கொம்பனாலும் அந்த எம்.எல்.ஏ-வை வீழ்த்த முடியாது. இந்த ஃபார்முலாவைப் பின்பற்றி நாங்கள் மக்களைத் தேடிச் செல்கிறோம். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் எவ்வளவு அருமையான திட்டம். அதில்கூட பெரிய அளவில் முறைகேடுகள் செய்கிறார்கள். இதை எல்லாம் மக்கள் எங்க​ளிடம் குறைகளாகக் கொட்டும்போது, எப்படி நான் பேசாமல் இருக்க முடியும்? காங்கிரஸ்காரர்களான நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒரு பக்கம் தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்க... இன்றும் பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் நோயாளிகள் கால்​கடுக்கக் காத்துக் கிடப்பதைப் பார்க்​கிறேன். எனவே, அந்தத் திட்டத்தை நிறுத்தி​விட்டு, அரசின் 10 சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்களைக் கட்டினால் தமிழ்​நாட்டுக்கு நல்லது!''

''சமீப காலமாகத் தி.மு.க-வைத் தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும்பட்சத்தில், தி.மு.க. தொண்டர்கள் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றிணைந்து உழைப்பார்களா?''

''ஆட்சியில் நடக்கும் தவறைச் சுட்டிக்​காட்டினால், திருத்திக்கொண்டு இன்னும் நல்ல முறையில் மக்களுக்​காக உழைப்பார்கள் என்கிற நல்லெண்​ணத்தில்தான் விமர்சிக்கிறோம். அப்​போதுதான் இந்தக் கூட்டணி மீது மக்களின் நம்பிக்கை நிலைக்கும். நாங்கள் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? இளைஞர் காங்​கிரஸ் என்பது ஒரு தனி அமைப்பு. இதற்கென தனிக் கொள்கை இருக்கிறது. அதன்​படிதான் எங்கள் செயல்பாடுகளும் இருக்கும். தனிப்பட்ட முறையில் தி.மு.க. மீதோ, முதல்வர் கலைஞர் மீதோ, எந்தப் பகையும் கிடையாது. தவறு செய்தவர்களை அடையாளம் காட்டி, நடவடிக்கை தேவை என்கிறோம், அவ்வளவுதான். அன்னை சோனியா கூட்டணி தொடரும் என்றால், தி.மு.க-வுக்காக உழைக்கத் தயார். அதே ஒத்துழைப்பை தி.மு.க-வினரும் எங்களது வேட்பாளர்களுக்கு தருவார்கள் என்று நம்புகிறோம். நடக்காவிட்டால், அதன் பிறகு எங்களின் இன்னொரு முகம் தெரியும்!''

''சேலம் தே.மு.தி.க. மாநாட்டில் தி.மு.க. ஆட்சியை அரக்கனோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார் விஜயகாந்த். இந்த ஆட்சி குறித்து..?''

''இந்த ஐந்தாண்டு காலத்தில் எத்தனையோ மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் பங்கை அவர்கள் மூடி மறைத்து மொத்த பலனையும் அறுவடை செய்துவிடலாம் என்று பார்க்கிறார்கள். முதல்வர் கருணாநிதிக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டுங்கள். ஐந்தாண்டு காலம் உங்களைத் தாங்கிப்பிடித்த 'கை’க்கு இதைக்கூட செய்யாவிட்டால் உங்களோடு இருந்து என்ன புண்ணியம்?''

''இதே கூட்டணி நீடித்தால், வரும் தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?''

''இனியும் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு யாராலும் தமிழ​கத்தை ஆள முடியாது. ஆட்சியில் பங்கு மட்டு​மல்ல, துணை முதல்வர் பதவியையும் சேர்த்தே கேட்​போம். அதற்கான தகுதியும் வளர்ச்சியும் எங்களுக்கு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, வரும் சட்ட​மன்றத் தேர்தலில் கலைஞர் போட்டியிடக் கூடாது. இளை​ஞர்களுக்கு வழிவிட வேண்டும். பல்வேறு ஊர்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் போய் மக்களின் மனநிலையை நன்கு அறிந்துவைத்திருக்கும் ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அவர் ஒதுங்கிக்​கொள்ள வேண்டும்.''

''லட்சக்கணக்காண தமிழர்கள் இலங்கையில் மடியக் காரணமான தமிழர் அழிப்பு யுத்தத்தை இயக்​கியதே காங்கிரஸ்தான் என்ற துரோக முத்திரைவிழுந்துள்ளதே!''

''அரசியல் உள்நோக்கத்துடன் இப்படிச் சொல்​கிறார்கள். இரு மாபெரும் தலைவர்களை அநியாய​மாகப் பலிகொடுத்த எங்களுக்கு மனித உயிர்களின் மதிப்பு நன்றாகவே தெரியும். எனவே, காங்கிரஸ் அது​போன்ற செயல்களுக்கு எக்காலமும் துணை போகாது. முதலில் மக்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படி தமிழன் அழிய காங்கிரஸ்தான் காரணம் என பேசுகிறவர்களுக்கு, தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கிடையாது. ஈழத் தமிழர்​கள் நலனில் எங்களுக்கு நிஜமான அக்கறை உண்டு. விரைவில் தலைவர் ராகுல் காந்தியின் அனுமதியுடன் 10 பேர்கொண்ட குழுவினர் இலங்​கைக்கு நேரில் சென்று, 'இதுவரை இந்திய அரசு வழங்கிய பணம் முறையாகத் தமிழர்களுக்காகச் செலவிடப்பட்டதா? தமிழர்களுக்கு இன்னும் என்னென்ன உதவிகள் தேவை?’ என தீவிரமாக ஆராய்ந்து வரப்போகிறோம்!''

படங்கள் மற்றும் காணொளி காண....

http://www.thedipaar.com/news/news.php?id=23295

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.