Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகிரி மகளை வாசலில் தடுத்து நிறுத்திய கருணாநிதியின் காவலன்கள்.

Featured Replies

திராவிட இயக்கங்களின் வரலாறு தெரிந்தவர்களுக்கு பட்டுக்கோட்டை அழகிரியை நிச்சயம்

தெரிந்திருக்கும்! 'அஞ்சா நெஞ்சன்’ என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரான அவரது பெயரைத்தான் தனது மகனுக்கு வைத்ததாக கருணாநிதி மேடைகளில் இப்போதும் பெருமையுடன் சொல்வதுண்டு!

''அண்ணாவையும் அழகிரியாரையும் தவிர வேறு யாரையும் நான் அண்ணன் என சொன்னதில்லை!'' - இதுவும் கருணா​நிதி சொன்னதுதான். பட்டுக்​கோட்டை அழகிரிக்கு தனது நெஞ்சில் இவ்வளவு உயர்வான இடம் கொடுத்திருக்கும் கருணாநிதியின் கருணைப் பார்வை, கஷ்ட ஜீவனத்தில் இருக்கும் அழகிரியின் கடைசி மகள் ராணி மீது விழவில்லை என்பதுதான் ஆச்சர்யம்!

பட்டுக்கோட்டை அழகிரிக்கு இரண்டு மகன், மூன்று மகள் என மொத்​தம் ஐந்து குழந்தைகள். இதில் மூத்த மகன் இறந்து விட்டார். மற்றவர்கள் ஆளுக்கொரு திசையில் இருக்கிறார்கள். கடைக்குட்டியான ராணி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் பள்ளத்தூருக்கு வாழ்க்கைப்பட்டுப் போனார். ராணிக்கும் பள்ளத்தூர் ரெங்கராஜனுக்கும் 1961-ம் ஆண்டு பெரியார் தலைமையில் திருமணம் நடந்தது. குடும்பத்தின் பொதுச் சொத்தான 'ரெங்கா பிரஸ்’ அச்சகம்தான் ராணியின் குடும்பத்துக்குச் சோறு போட்டது. கடந்த சில வருடங்களாக அதுவும் முடங்கிப் போனதால்... இப்போது ராணிக்கு நித்தியப் பொழுதைக் கழிப்பதே தம்பிரான் புண்ணியம்தான்! விஷயம் கேள்விப்பட்டு ராணியை நேரில் சந்திக்கக் கிளம்பினோம்.

பள்ளத்தூர் அக்ரஹாரத்தில் அந்த வீட்டுக்குள் நுழையும்போதே, ''குனிஞ்சு வாங்க, தலையில இடிச்சுக்காம...'' என்று பதறுகிறார் ராணி. சோறுபோட்ட 'ரெங்கா பிரஸ்’ சோர்ந்து போனதால், அதன் முன்பகுதியிலேயே ராணியும் ரெங்கராஜனும் குடித்தனம் இருக்கிறார்கள். இதற்கு வாடகை ஐந்நூறு ரூபாயாம்!

பழைய நைலான் கட்டிலில் உட்கார்ந்தபடி நம்மிடம் பேசினார் ராணி. ''எனக்கு அஞ்சு வயசா இருக்கும்போதே நைனா இறந்துட்​டாங்க. 'கைக்காசைப் போட்டுக் கட்சி வளர்த்த மனுஷன்’னு அவரைப் பத்தி சொல்றப்ப பெருமையா இருக்கும். பிரஸ் ஓடிக்கிட்டு இருந்த வரைக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அது முடங்கியதிலிருந்து பசியும் பட்டினியும் எங்களுக்குப் பழகிப் போச்சு.

எனக்குத் தையல் தெரியும்கிறதால அதுல கிடைக்கிற வருமானத்துல சமாளிச்சிக்கிட்டு இருந்தோம். நாலஞ்சு வருஷமா அதுக்கும் ஆபத்து வந்துருச்சு. 'சர்க்கரை, ரத்தக் கொதிப்பு’ன்னு பணக்காரங்களுக்கு வரவேண்டிய வியாதி எல்லாம் என்னை சுத்திக்கிச்சு. அதனால, மூட்டுவலி வந்து... தையல் மெஷினில் உட்காரவே முடியல. சாப்பாட்டுக்கே வழியில்லாத எங்களுக்கு வியாதிக்கு வைத்தியம் பார்க்க ஏது வழி? பக்கத்துல தர்ம ஆஸ்பத்திரியும் இல்லாட்டி நான் எப்பவோ போய்ச் சேர்ந்திருப்பேன்...'' என்றவர், தொடர்ந்தார்.

''1974-ல கலைஞர் பள்ளத்தூருக்கு வந்திருந்தப்ப, நாங்க போயி அவருக்குத் துண்டு போட்டுட்டு வந்தோம். கலைஞர் போனப்புறம் கட்சிக்காரங்க எங்ககிட்ட வந்து, 'நீங்க அஞ்சா நெஞ்சனின் மகளாம்மா... உங்களுக்குக் கட்சியில இருந்து ஏதாச்சும் உதவி வேணும்னா சொல்லுங்க, செய்யுறோம்’னு கேட்டாங்க. அன்னிக்கி எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. அதனால, 'நாங்க பணம் காசுக்காக தலைவரைப் பார்க்க வரல, மரியாதைக்காகத்தான் வந்தோம்’னு சொல்லிட்டோம். ஆனா, இப்ப...'' என்று சொன்னவர், மூக்குக் கண்ணாடியை கழற்றி, சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்...

''நாங்க படுற கஷ்டத்தைப் பாத்துட்டு, 'உங்க அப்பாவை பத்தித்தான் கலைஞர் அடிக்கடி பேசுறாரே... அவருகிட்ட போயி ஏதாச்சும் உதவி கேட்கலாம்ல?’ன்னு அக்கம் பக்கத்துல சொன்னாங்க. அதை நம்பி கலைஞரைப் பார்க்கறதுக்காகப் போன ஆகஸ்ட் மாதம் கோபாலபுரம் வீட்டுக்கே போனேன். ஆனா, அங்கே இருந்த செக்யூரிட்டிகள் என்னை உள்ளயே விடல. ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை...

சொந்தக்காரங்க வீட்டுல தங்கி இருந்துகிட்டு நாலஞ்சு தரம் கலைஞர் வீட்டுக்குப் போனேன். 'நான் பட்டுக்கோட்டை அழகிரியின் மகள். தலைவரைப் பார்த்து என்னோட கஷ்டத்தைச் சொல்லிட்டுப் போகணும்’னு சொல்லியும்கூட என்னை உள்ளே விடலை. திருச்சியில் இருக்கிற எங்க அண்ணனுக்கு போன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். 'தலைவரை பார்க்க முடியாட்டி பரவாயில்லை... பி.ஏ-வான சண்முகநாதனைப் பார்த்து, மனுவைக் குடுத்துடு. தலைவர் உன்னைக் கூப்பிட்டுப் பேசுவார்’ன்னாரு.

அப்புறம், சண்முகநாதனை ரொம்ப பிரயாசைப்​பட்டுத்தான் பார்த்தேன். அவருகிட்ட என்னைப் பத்தி சொல்லிட்டு, மனுவையும் குடுத்துட்டு வந்தேன். 'தலைவர்கிட்ட குடுத்துடுறேன்’னு சொன்னாரு. மாசம் அஞ்சாகப் போகுது... ஆனா, என் மனுவை கலைஞர்​கிட்ட குடுத்தாங்களா... படிச்சாரான்னு எதுவுமே தெரியல.

அழகிரியைப் பார்க்க மதுரைக்குப் போனேன். அவரைப் பார்க்க முடியாதுன்னு அங்கிருந்தவங்க சொல்லிட்டாங்க. அப்புறம்தான் கலைஞரைப் பார்க்கப் போனேன். அவரையும் பார்க்க முடியலியே! நாங்க இருக்கப் போற இன்னும் சொச்ச காலத்துக்கு வயித்துப்​பாட்டுக்கு ஒரு வழி கெடச்சா போதும். கஷ்டத்துல இருக்கும் எங்களை அவருதான் காப்பாத்தணும்...'' - மீண்டும் கண்கலங்கிப் போகிறார் ராணி.

கருணாநிதியின் விரல்கள், கண்ணீர் துடைக்க... ராணி வீடு வரை நீளுமா?

படங்கள் பார்க்க ......

http://www.thedipaar.com/news/news.php?id=23610

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.