Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தப்புத் தாளங்கள் அவர்களுக்குப் பல சோதனைகளையும், வேதனைகளையும் கூட உருவாக்கிவிடும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதை நோக்கிப் பயணிக்கிறது? என்பதில் பல தரப்பட்ட அபிப்பிராயங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் உச்ச நிலைப் பலத்துடன், உலகம் வியக்கும் சாதனைகளை நிகழ்த்திய காலத்தில் சிங்கள அரசியல் தளத்தில் தமது குரலைப் பதிவு செய்யும் முயற்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தளத்தை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் பிளவும், தலைமைத்துவப் பொட்டியும் உச்ச நிலையை அடைந்து அழியும் நிலையில் இருந்த காலகட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் சக்தி உருவாக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டுக்குள் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ அமைப்பு, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு என்பன மாமனிதர் சிவராம் அவர்களால் பலத்த பிரயத்தனங்களுடன் கொண்டுவரப்பட்டது. விடுதலைப் புலிகளின் கருத்துக்களை சிங்கள தேசத்திற்கும், அனைத்துலக நாடுகளுக்கும் கொண்டு செல்லும் பணியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்தது.

விடுதலைப் பலிகள் பலமாக இருக்கும்வரை வேலி தாண்டாத பத்தினிகளாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை அணிகளும் பக்குவமாக நடந்து கொண்டன. ‘தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை எப்போது நான் கைவிட்டுவிட்டேன் என்று உணர்கிறீர்களோ, அப்போதே என்னைச் சுட்டுக்கொல்லலாம்’ என்ற தேசியத் தலைவர் அவர்களது ஆழமான வாக்குமூலம். அவரைச் சார்ந்த அனைவருக்குமே பொருந்தும் என்பதால், அவர்களுக்கு அந்த எல்லையைக் கடக்கும் தைரியம் அப்போது இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் எப்போது பலத்தை இழக்கும் நிலையை அடைந்தார்களோ, அப்போதிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தடம் மாறிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டது.

சிங்கள தேசத்தின் அச்சுறுத்தல் அரசியலுக்கும், இந்திய தேசத்தின் ஆதிக்க அரசியலுக்கும் இடையே தமக்கு வசதியான பாதையே ‘சுகம்’ என்ற முடிவினை எடுத்துக் கொண்டது போலவே அவர்களது பயணம் முள்ளிவாய்க்காலின் பின்னர் உணரப்படுகின்றது.

எந்த ஒரு அரசியல் அணியும் மக்களை நம்பியதாகவும், மக்களின் நம்பிக்கைக்குரியதாகவும், மக்களது கருத்துக்களுக்கு வடிவம் கொடுப்பதாகவும் செயற்பட்டால் மட்டுமே அதன் பாதையும் சரியானதாக அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் மக்களை கணக்கில் எடுப்பவர்களாகத் தெரியவில்லை. மக்களது அவலங்களுக்கான தீர்வினைத் தேடிப் பயணிப்பவாகளாகவும் தெரியவில்லை. மாறாக, மக்களது அவலங்களைத் தங்களுக்கான அரசியல் தேவைகளுக்கான சந்தர்ப்பமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்த எண்ணுகின்றது. சிங்கள தேசத்தின் உறவையும், இந்திய தேசத்தின் அரவணைப்பையும் ஈழத் தமிழர்களது அவலங்களுக்கான தீர்வாக எண்ணுகிறது போல் தெரிகின்றது.

ஈழத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கையில், பாதிக்கும் மேலானவாகள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களும் தமிழீழக் கனவோடுதான் திசை எங்கும் அலைகின்றார்கள் என்ற யதார்த்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதுமே கருத்தில் எடுப்பதில்லை. அதைக் கருத்தில் எடுப்பது, அவர்களது தலைமைத்துவ சிந்தனைக்குக் கடிவாளம் இடுவதாக அமைந்துவிடும் என்று அச்சம் கொள்கிறார்கள் போலவே தோன்றுகின்றது. புலம்பெயர் தமிழர்களால் அவ்வப்போது விடுக்கப்படும் அழைப்புக்களும் அவர்களால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டே வருவதன் சூத்திரம் அவர்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

புலம்பெயர் தமிழர்களது ஒப்புதலும், அங்கீகாரமும் இல்லாத எந்தத் தீர்வும் இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானத்தை உருவாக்காது என்பதை அமெரிக்காவே ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துக் கூறியுள்ளது. தென் சூடான் தனி நாடாகுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பில், புலம்பெயர் தென் சூடான் மக்களும் உள்ளடக்கப்பட்டதன் நோக்கமும் அதுவேதான். ஆனால், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும், ஆலோசனைகள், அபிப்பிராயங்கள் பெற்றுக் கொள்வதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை தயக்கம் கொள்வதற்கு, அவர்களது தவறான பாதைத் தெரிவே காரணமாக உள்ளது.

செய்வதற்கும், அதற்காகச் சாவைத் தழுவுவதற்கும் தயாரான இளைஞர்கள் எழுச்சி கொண்ட நாட்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தப்புத் தாளங்கள் அவர்களுக்குப் பல சோதனைகளையும், வேதனைகளையும் கூட உருவாக்கிவிடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிங்கள அரசுடன் பேசுவதற்கு முன்னர், வலிகளைச் சுமந்து நிற்கும் தமிழீழ மக்கள் மத்தியிலும், வலிகளைச் சுமக்கத் தயாராக நிற்கும் இளைய தலைமுறையிடமும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மக்களைச் சந்திப்பதற்கு சிங்கள அரச படைகளுடனும், ஆயுதங்களுடனும் செல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கும் ஏற்பட்டுவிடும்.

எல்லா இழப்புக்களையும் எதிர்கொண்டு, தாங்கி, அதனோடு வாழும் ஈழத் தமிழர்களின் ஒரே விருப்பம், சிங்களர் ஆதிக்கமற்ற சுதந்திர வாழ்வை மட்டுமே. அதற்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழீழம் ஏற்றுக் கொள்ளாது என்ற காத்திரமான செய்தி தமிழீழ மக்களிடம் இப்போதும் உள்ளது. அச்சப்படுத்தப்பட்டு, வாயடைக்கப்பட்டுள்ள அந்த மக்களது மௌனங்கள் எல்லாம் செய்யும் தவறுகளுக்கான அங்கீகாரமாகக் கொள்வது ஆபத்தானது. சிங்கள தேசியவாதத்தின் கிள்ளுக் கீரையான வாழ்வுக்காக தமிழீழ மக்கள் ஏங்குவதாகக் கற்பனை செய்துகொள்ளக் கூடாது.

‘எங்கள் தேசம் எங்களுக்கு வேண்டும், எங்கள் தேசமே எங்களுக்கு வேண்டும்’ என்பது தமிழீழத்தின் மக்களது விருப்பம் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களது விருப்பமும் அதுவே. சிங்கள தேசம் தொட்டுவிட முடியாத, மனிதாபிமான தேசங்களின் கரங்களுக்குள் நின்று அவர்கள் தொடர்ந்தும் தமிழீழத்திற்காகப் போராடிக்கொண்டே இருப்பார்கள். மகிந்த வழங்கும் அரை குறைத் தீர்வுக்கோ, இந்தியாவின் வற்புறுத்தல்களுக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலை போகுமானால், அந்த மண்ணில் புதைந்துபோயுள்ள மாவீரர்களும், மக்களும் அதை மன்னிக்க மாட்டார்கள். அவர்களது ஆத்மாக்கள் மீழெழுந்து ஆயுதம் ஏந்தும் காலம் உருவாகிவிடும்.

ஒரு நாட்டின் பாதுகாப்பு படை பலத்தினால் மட்டும் நிச்சயிக்கப்படுவதில்லை. அது, அந்த மக்களது மனங்களினால் உருவாக்கப்பட வேண்டும். சிங்கள தேசம் பெருக்கி வைத்திருக்கும் படை, படைக்கல பெருக்கம் மட்டுமே இலங்கைத் தீவை அமைதிப்படுத்தும் என்பது வெறும் கற்பனாவாதம் மட்டுமே. மரணம் வரை துரத்தப்பட்ட தமிழர்கள்தான் உயிரை மறந்து போராளிகளாகிக் களத்தில் மோதினார்கள். இப்போதும், தமிழர்களை மரணம் துரத்தியே வருகின்றது. அண்மைக்காலப் பமுகொலைகளும், பாலியல் வல்லுறவுக்களும், கடத்தல்களும், காணாமல் ஆக்குதல்களும், அனுராதபுரச் சிறைச்சாலைத் துப்பாக்கிச் சூடுகளும் ஈழத் தமிழர்கள் மீண்டும் போராடியே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைப் புதுப்பித்து வருகின்றது.

கடந்து வந்த பாதையையும், கண்முன்னே நிகழந்த கொடூரங்களையும் வரலாற்றுப் பாடங்களாக்கி முன் செல்வதே ஒரு தலைவனின் கடமை. அந்தக் கடமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான மும்மூர்த்திகளுக்கும் உண்டு. ஒரு காலத்தில் புலிகளுடன் கூட்டு, இப்போது பன்றிகளுடன் கூட்டு என்று தலை சாய்ந்த பக்கம் சிந்திக்காமல், இலட்சியப் பாதையில் இணைந்து கொள்ளத் தகுதி படைத்தவாகளை உடன் இணைத்துக்கொண்டு பயணிப்பது மட்டுமே அரசியல் அறமாக இருக்கும்.

- சுவிசிலிருந்து கதிரவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.