Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்வெட்டித்துறையில் இராணுவ முற்றுகை: பார்வதி அம்மாளின் அனுதாபச் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறையில் இராணுவ முற்றுகை: பார்வதி அம்மாளின் அனுதாபச் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டன.

[sunday, 2011-02-20 13:40:19]

தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள், அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்புக் கொடிகள் அனைத்தினையும் அங்கு திடீரென வந்த படையினர் அகற்றியதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திடீரென அங்கு வந்த படையினர் இவற்றினை அகற்றியதுடன் தேசியத் தலைவர் பிரபாகரன் என எதிலும் குறிப்பிடக் கூடாதெனவும் அச்சுறுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பிரபல அரசியல்வாதிகளான வைகோ, நெடுமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோரின் சிறப்புப் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர் எனத் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியான தொல் திருமாவளவனும் இறுதிச் சடங்குகளில் கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

seithy.com

வல்வெட்டித்துறையில் இராணுவ முற்றுகை: பார்வதி அம்மாளின் அனுதாபச் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டன.

சிங்கள பௌத்த காட்டுமிராண்டிகள்.

முழு ஆரோக்கியத்துடன் இருந்த தந்தையாரை உரிய சிகிச்சையின்றி படுகொலைசெய்த சிங்கள பௌத்த பயங்கரவாதிகள், தற்போது நோய்வாய்ப்பட்டிருந்த அம்மையாரின் மரண கிரியைகளில் அத்துமீறி செயற்பட்டு வருகின்றனர்.

சிங்கள பயங்கரவாத அரசுடன் ஐக்கியம் பேசும் கூத்தமைப்பின் குள்ளநரி சம்பந்தன், முதலமைச்சர் பதவிக்கு அடிபடும் வித்தியாதரன் - சுரேஷ் பிரேமச்சந்திரன், சிங்கள பயங்கரவாத அரசுடன் தமக்குள்ள உறவை பயன்படுத்தி சிங்கள ராணுவக் காடையர்களை கட்டுப்படுத்த வக்கில்லாமல் உள்ளனர்.

தமிழ் மண்ணிலிருந்து சிங்கள பயங்கரவாதக் கும்பல்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டிய அவசியம் சர்வதேச நாடுகளுக்கு விளங்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோகமயமாக வல்வெட்டித்துறை: கறுப்புக்கொடிகளை அகற்றுமாறு படையினர் அச்சுறுத்தல்

* Monday, February 21, 2011, 5:30

பார்வதி அம்மாவின் மரணச் செய்தி வெளியானதையடுத்து யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சோகமயமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறைப் பகுதியில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திவருக்கின்றார்கள்.

இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்பாவின் உடலுக்கு பெருந்தொகையான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். வல்வெட்டித்துறைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கறுப்புக்கொடிகரள அகற்றுமாறு படையினர் எச்சரித்துள்ள போதிலும் பெருமளவு கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு வல்வெட்டித்துறை சோகமயமாகக் காணப்படுகின்றது.

தீருவில் திடலில் மக்களின் அஞ்சலிக்காக பார்வதி அம்மாவின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பெருமளவு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிவில் உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கறுப்புக்கொடிகளை அகற்றுமாறு படையினர் நிர்ப்பந்திக்கின்ற போதிலும், பொதுமக்கள் அதற்கு மறுத்துவருவதால் அப்பகுதியில் பதற்றநிலை காணப்படுகின்றது.

அதேவேளையில், பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளில் காணப்படும் பிரபாகரனின் பெயரை அகற்றிவிடுமாறும் படையினர் பொதுமக்களை நிர்பந்திப்பகதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களைத் துன்புறுத்தும் வகையிலான இவ்வாறான நடவடிக்கைகளை படையினர் தொடர்ந்தால் பாதகமான விளைவுகளை படையினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என வல்வெட்டித்துறை சிவில் சமூக அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்கிழமை காலை இடம்பெறும் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழகத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் இதில் இதில் பங்குகொள்வதற்காக இன்று கொழும்பு வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.