Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடிப்படை வசதிகளின்றி கிளிநொச்சி மத்திய கல்லூரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை வசதிகளின்றி கிளிநொச்சி மத்திய கல்லூரி!

Posted by admin On February 26th, 2011 at 2:38 am

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஒரேயொரு மத்திய கல்லூரியான கிளிநொச்சி மத்திய கல்லூரி இதுவரை கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படாத காரணத்தால் எதுவித அபிவிருத்தியும் இன்றி சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது என கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் குடியிருந்த 28 குடும்பங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படாமல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியுள்ளன. இதன் காரணமாகவே இக்கல்லூரி கல்வி திணைக்களத்திடம் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இருந்தும் இக்கல்லூரியில் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றிக்காணப்படுகிறது. இயற்கை கடன்களைக் கழிக்கக்கூட இந்தப் பாடசாலையில் எதுவித வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

saritham.com

வன்னிப் பகுதிக்கு ஆசிரியர்கள் செல்வதற்கு நடத்தப்பட்ட இலவச போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி, மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு கற்பிக்க செல்லும் ஆசிரியர்களின் நலன் கருதி நடத்தப்பட்ட இலவச போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இடம்பெயர்க்கப்பட்டு, மீள குடியமர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்கள் இதனால் பெரும்சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள்.

இலங்கை போக்குவரத்து சபையினால் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்தப்பட்டு வந்த இலவச போக்குவரத்து சேவை, நிதி இல்லாமையால் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்தது.

ஆசிரியர்கள் பொருமளவு பணத்தை கொடுத்து தினமும் தனியார் பேரூந்துகளில் பயணம் செய்ய முடியாதெனவும், அப்படி இல்லையென்றால், கஷ்ட பிரதேசங்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் தேசிய ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்ராலின் வலியுறுத்தினார்.

இலவச போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டதால் ஆசரியர்கள் பலர் பாடசாலைகளுக்கு செல்வதில்லையெனவும், இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாகவும், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அக்கறையுள்ள தொண்டு நிறுவனங்கள் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணவேண்டுமெனவும் ஜோசப் ஸ்ராலின் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னரைப் போன்று சாதாரண போக்குவரத்து கட்டணத்துடன் வன்னி பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவையை நடத்தினால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியுமெனவும், அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுக்க வேண்டுமெனவும் கிளிநொச்சி கல்வி வலய அதிகாரிகள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி ரூபசிங்கவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான ஏற்பாடுகளை செய்வது கல்வி அமைச்சின் கடமையல்லவென அவர் பதிலளித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6671

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.