Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றது – ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றது – ரணில் :

அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை :

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்றால் ஏன் படைவீரர்கள் மரக்கறி விற்பனை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் டி.எம். ஜயரட்ன குறிப்பிடுவதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய அச்சுறுத்தல் காணப்பட்டால் ஏன் படைவீரர்கள் சந்திக்கு சந்தி மரக்கறி விற்பனை செய்ய வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு புறத்தில் அரசாங்கம் படைவீரர்களை மரக்கறி விற்பனையில் ஈடுபடுத்தி வருவதாகவும் மறு புறத்தில் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து அவசரகாலச் சட்டத்தை நீடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமரோ அல்லது ஆளும் கட்சியின் வேறும் உறுப்பினர்களோ பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை :

09-03-2011- 13:18

நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக பிரதமர் தெரிவி;த்துள்ளார்.

பிரதமரின் இந்தக் கூற்று உண்மையென்றால் இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர் பிரச்சினை மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இலங்கையும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதற்கான ஏதுவாக பிரதமர் இதனைக் குறிப்பிடுவதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றது – ரணில் :

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள நான்கு பௌத்த பீடங்களின் தலைவர்கள் கூறும் அறிவுரை இந்த அரசாங்கம் கேட்பதில்லை. நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாற்ற போவதாக அரசாங்கம் உறுதியளிதிருந்த போதிலும், அபிவிருத்தி என்பது விளம்பர பலகைகளுக்குள் மாத்திரமே அடங்கியுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க - சீதுவ பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போடடியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கை வைக்கும் சகல இடங்களிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.ஒழுங்கான திட்டத்தின் அடிப்படையில் பணியாற்ற அரசாங்கம் தவறியுள்ளது. மக்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கு இறங்கி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையுமாறும ணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி முழு நாடும் உள்ளடங்கும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1977 ஆம் ஆண்டு ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்களே தற்போதும் காணப்படுகிறது. இதில் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் பிரதானமானது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அரசாங்க ஊழியர்களுக்கு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை மறந்துள்ளது. மக்கள் தற்போது மிகவும் கஷ்டமான நிலையில்p வாழ்ந்து வருகின்றனர் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/58853/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.