Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடபுலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ளது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபுலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ளது:-

11 மார்ச் 2011

இலங்கையின் வடபுலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற உலர் உணவு நிவாரணம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேறியவர்கள் தொழில் வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் வன்னியிலிருந்து மீளக் குடியேறியவர்கள் என 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நிவாரணத்தையே நம்பி வாழ்கின்றனர்.

அதே போன்று வன்னியிலும் மீளக் குடியமர்ந்த தமிழக் குடும்பங்கள் இந்த நிவாரணத்தையே நம்பி வாழந்து வருகின்றன. இந்நிலையில் இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு வழங்கப்படுகின்ற உலர் உணவுப் பொருட்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அந்த வருடத்திற்கான 3 மாத நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் நிவாரணப் பொருட்கள் எவையுமே வழங்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மீளக் குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களும் இதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக எலN;லாருக்குமான இந்த நிவாரணப் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. வன்னிப் பகுதியிலும் இந்த நிவாரணப் பொருட்களை நம்பியே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மிகக் குறைந்தளவிலேயே இந்த நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் இதை நம்பியே வாழ்ந்து வருகின்ற குடும்பங்களின் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளே இதற்கான உதவிகளை வழங்கி வந்த நிலையில் இவற்றுக்கான நிதி உதவிகளை வழங்கி வரும் சர்வதேச நாடுகள் உதவிகளை மட்டுப்படுத்தியதன் காரணமாகவே நிவாரணத்தை வழங்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.