Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி தமிழரான ஜேர்மன் செனட்டர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகையாழ். அரச அதிபருடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி தமிழரான ஜேர்மன் செனட்டர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகையாழ். அரச அதிபருடன்

2011-03-12 21:02:49

பிரபல தொழில் அதிபரும் ஜேர்மன் நாட்டின் ஹம்பேர்க் நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சரும் (செனட்டர்) இலங்கையருமான ஐயன் கிருகரன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

பிரபல தொழில் அதிபரும் ஜேர்மன் நாட்டின் ஹம்பேர்க் நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சரும் (செனட்டர்) இலங்கையருமான ஐயன் கிருகரன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வருகைதந்துள்ள அமைச்சர் கிருகரன் நேற்று யாழ். அரச அதிபர் மற்றும் யாழ்.வர்த்தக தொழில் துறை சார்ந்த பலரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். பருத்தித்துறையில் பிறந்து உயர்கல்விவரை கற்று மேற்படிப்பை லண்டனில் பயின்று பின்னர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக ஜேர்மனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர், இலங்கைக்கான ஜி.ரி.இசற் நிறுவன இணைப்பாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் இங்கு வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஜி.ரி.இசற் நிறுவனத்தில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஜேர்மன் குழு வினருடன் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரும் பங்குபற்றினார்.இதன்போது இங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் முன் னெடுக்க வேண்டிய அபிவி ருத்தித் திட்டங்கள், அவற்றுக்கு உதவ வேண்டியதன் கடப்பாடு கள் தொடர்பாக அரச அதிபர் எடுத்துக் கூறினார். அத்துடன் இந்த விடயங்களுடன் அடங் கிய பட்டியல் ஒன்றையும் அரச அதிபர் அவர்களிடம் கையளித் தார்.

அதில் தற்போது வலிகாமம் மற்றும் வடமராட்சி பகுதிகளில் இடம்பெற்று வரும் மீள்குடி யேற்றம் சம்பந்தமாகவும் அதற்கு உதவ வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட் டது. மேலும் இங்கு நிலவும் சமூக அபிவிருத்தித் திட்டங் கள் கல்வி, விளையாட்டுத் துறை களின் அவசியம் அவற்றை மேலும் வளர்த்தெடுப்பதற்கான உதவிகள் போன்றவை குறித்து அரச அதிபர் இங்கு எடுத்துக் கூறினார்.

இவற்றைச் செவிமடுத்த ஐயன் கிருகரன் குழுவினர் தாம் திரும்பிச் சென்று அங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண் டும் உயர்மட்டக் குழு ஒன்றை இங்கு அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார்.

இன்று வடமராட்சிக்கு விஜ யம் செய்யவுள்ளார். அங்கு கட் டைவேலி மெதடிஸ்த திருச் சபையில் நடைபெறும் சமய வழிபாட்டிலும் கலந்துகொள் வார். பின்னர் கட்டைவேலி கர வெட்டிப் பகுதிக்குச் சென்று அங்குள்ள சமூகப் பிரதிநிதி களுடன் கலந்துரையாடுவார். அதனைத் தொடர்ந்து பருத்தித் துறை மெதடிஸ்த திருச்சபைக்கும் குழுவினர் செல்லவுள்ளனர்.தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலருடனும் இந்தக் குழுவினர் கலந்துரையாடல் ஒன்றை நடத் தவுள்ளனர்.

http://newjaffna.com/fullview.php?id=MjQ2MQ==

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.