Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 உள்ளுர் மீனவர்கள் இந்திய கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 உள்ளுர் மீனவர்கள் இந்திய கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

22 மார்ச் 2011

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து தொழிலுக்குச் சென்ற 3 உள்ளுர் மீனவர்கள் இந்திய மீனவர்களாலும் இந்திய கடற்படையினராலும் இணைந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது இவர்கள் ராமேஸ்வர காவற்துறையிரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இன்று காலை வழமை போன்று தொழிலுக்குச் சென்ற வேளையிலேயே இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாகவும் பின்னர் அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய இழுவைப் படகு மீனவர்களிடம் கையளித்ததாகவும் தெரிய வருகின்றது. தற்பொழுது இவர்கள் ராமேஸ்வரம் காவற்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. 24 வயதுடைய எம் செந்தூரன் 21 வயதுடைய ப. கேசவரூபன் 22 வயதுடைய ப. பத்மராஜ் ஆகிய மூவருமே பிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் இன்றைய தினம் தொழிலுக்குச் செல்லவில்லை என மீனவ சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இன்றைய தினம் இலங்கை சென்றிருந்த 06 இந்திய மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் வட இலங்கை மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய சந்தி;ப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. மீன்பிடித்துறை அமைசசின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின் போது இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் உட்பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை உள்ளுர் மீனவர்கள் நிராகரித்துள்ளனர். மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

முன்னதாக நேற்றிரவு உள்ளுர் மீனவ சங்கப் பிரதிநிதிகளை ராஜித சேனாரட்ன சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதன் பின்னர் இன்றைய தினம் தமிழகத்திலிருந்து சென்றிருந்த 6 மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் வட இலங்கை சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுக்கள் இடம்பெற்றன. இந்தியக் கடற்பரப்பில் மீன்களின் வருகை குறைவாக இருப்பதால் வாரத்தில் குறித்த சில நாட்கள் இந்திய இழுவைப்படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதி தர வேண்டும் என இந்திய மீனவ அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன. எனினும் உள்ளுர் மீனவ அமைப்புக்ள அதனை முற்றாக நிராகரித்து விட்டன. யுத்ததால் முற்றாக அனைத்தையும் இழந்து விட்ட தாங்கள் மீள கட்டுமாண பணிகளை மீள ஆரம்பித்துள்ள நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் தம்மையே பாதிக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.