Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைபெறுகிறார் ரொனால்டோ

Featured Replies

உலகக் கால்பந்து பிரபலங்களில் ஒருவரான ரொனால்டோ தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேஸிலைச் சேர்ந்த ரொனால்டோ நசாரியோ மூன்று முறை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபாவின் சிறந்த வீரர் விருது பெற்றவர்.

உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளில் அதிகப்படியான கோல்களை அடித்தவர் என்ற பெருமை ரொனால்டோவுக்கு உண்டு. அப்போட்டிகளில் அவர் 15 கோல்களை அடித்துள்ளார்.

உலகளவில் 18 ஆண்டுகள் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருந்த ரொனால்டோ பல உச்சங்களைத் தொட்டவர். அதேபோல் வீழ்ச்சிகளையும் கண்டவர்.

199697 ஆம் ஆண்டுகளில் அவர் பார்சிலோனா கால்பந்து அணிக்காக ஆடியபோது கோல்போடும் ஒரு இயந்திரமாகவே காணப்பட்டார்.

தேவைப்படும் நேரத்தில் வேகமாக ஓடி, வேகத்தைக் குறைக்க வேண்டிய சமயத்தில் அதைச் சரியாகக் கையாண்டு குறித்த தருணத்தில் பந்தை கோல் வலைக்குள் தள்ளுவதில் அவர் வல்லவர்.

பார்சிலோனாவிலிருந்து இண்டர் மிலான் அணிக்கு அவர் மாறிய போது, அவரது விளையாட்டில் ஒரு மென்மை போக்குத் தெரிந்தது. அவரது நகர்வுகளில் புத்திசாலித்தனமும் தந்திரங்களும் நன்றாக வெளிப்பட்டன.

எனினும் அப்போது தான் அவரது முழங்காலில் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன. தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு கிட்டத்தட்ட கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனாலும் 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை பிரேஸில் வென்றபோது அவரது கால்பந்து வாழ்க்கை ஒரு உணர்வுபூர்வமான உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பிறகு தனது உடல் தகுதியை தக்க வைத்துக் கொள்ள அவர் மிகவும் சிரமப்பட்டார்.

ரசிகர்களின் கோபம்

2011 ஆம் ஆண்டு அவரது கால்பந்து வாழ்க்கையில் ஒரு மகுடமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் ஏற்பட்ட வன்முறை காரணமாக ஒரு கசப்புணர்வுடனேயே தான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் நிலைக்கு ரொனால்டோ ஆளாகியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் பரபரப்புகள் மற்றும் வெற்றிகளின் பின்னணியில் பிரேஸிலின் கொரிந்தியாஸ் அணியில் அவர் சேர்ந்தார். அவரது நோக்கம் இந்த ஆண்டு தென் அமெரிக்காவின் பிரபலமான லிபரேடடொர்ஸ் கிண்ணத்தை கொரிந்தியாஸ் அணிக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே.

சாவ் பாலோவில் இருக்கும் கொரிந்தியாஸ் அணிக்கு 25 மில்லியன் ரசிகர்கள். பல முக்கிய போட்டிகளை அந்த அணி வென்றிருந்தாலும் பிரபலமான இந்த லிபரேடடொர்ஸ் கிண்ணத்தை வென்றதில்லை.

ஆனால், இந்த ஆண்டின் முற்பகுதியில் சிறிதே அறியப்பட்டிருந்த கொலம்பிய நாட்டு அணியான டிபோர்டெஸ் டோலிமா அணியுடன் கொரிந்தியாஸ் தோல்வியடைந்தது.

மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்தத் தோல்விக்கு ரொனால்டோவே காரணம் என பல ரசிகர்கள் கருதினர்.

இதையடுத்து போட்டி இடம்பெற்ற மறுநாள் சாவ் பாலோவிலுள்ள கொரிந்தியாஸ் அணியின் பயிற்சி மைதானம் முழுவதும் அவரை அவமானப்படுத்தும் வகையில் வாசகங்களும் படங்களும் வரையப்பட்டிருந்தன.

அதற்கு மறுநாள் அவர் பயணித்த பஸ் மீது ரசிகர்கள் கல்லெறிந்த சம்பவம் இடம்பெற்றது. இதற்குப் பிறகு அந்தத் தோல்விக்குத் தனது பங்கை டுவிட்டரில் அவர் தெரியப்படுத்தினார்.

கொரிந்தியாஸ் அணியின் மற்றொரு பிரபலமான நெட்டோ, கால்பந்து விளையாட்டில் காசுக்காகவே விளையாடும் ஒரு கைக்கூலி என ரொனால்டோவை விமர்சித்தார்.

இப்படியான பின்புலங்களின் கால்பந்து விளையாட்டிலிருந்து ரொனால்டோ விடைபெறுகிறார்.

நன்றி

தினக்குரல்

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=8213:2011-02-24-10-16-09&catid=45:football&Itemid=65

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.