Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா: தமிழர் பிரச்சினைக்கு முன்னுரிமை

அகில இந்திய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

சோனியா காந்தி தமிழகத்தை முற்போக்கு மாநிலம் என்று வர்ணித்து, கருணாநிதியின் தலைமைக்கு புகழாரம் சூட்டி, அவர் தலைமையில் மாநிலம் முன்னேறி வருவதாலேயே திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியைத் தொடர்கிறது என்றார்.

தேர்தல் பிரச்சாரம் என்றாலும் முதல்வர் கருணாநிதி தென்னக நதிநீர் இணைப்பு, முல்லைப் பெரியார் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி, தலித் கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும் முதல்வர் கருணாநிதி தனது கவலையைத் தெரிவித்தார். பதிலுக்கு சோனியா காந்தி, அண்டை நாடுகள் பிரச்சினைகளிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில்தான் மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருவதாகவும், இடம்பெயர்ந்த தமிழர் மீள்குடியேற்றத்திற்காக அதிக அளவில் நிதி உதவி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் கண்ணியமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியல் சட்டத்தில் செய்யவேண்டுமென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருவதாகவும், இப்பிரச்சினையில் தன்னால் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்யும் என்றும் சோனியா காந்தி உறுதியளித்தார்.

கருணாநிதி கச்சத்தீவு பிரச்சினை பற்றியும் குறிப்பிட்டார். பதிலுக்கு சோனியா காந்தி தமிழக மீனவர்கள் சுடப்படமாட்டார்கள் என்று இலங்கை வாக்களித்திருப்பதாகவும், அவ்வாக்குறுதி மீறப்படாமல் இருக்க இந்தியா ஆவன செய்யும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக பாண்டிச்சேரியிலும் அவர் தேர்த்ல் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு கேரளா சென்றார் சோனிய காந்தி.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110405_soniainmadras.shtml

  • கருத்துக்கள உறவுகள்

2016, 2021, 2026ல் நடக்கும் தேர்தலிலும் ஆள் தமிழர் பிரச்சனைக்கு முன்னுரிமை என்று தான் சொல்லுவார். சூடு சுறணையற்ற தமிழர்கள் இவருக்கு வாக்களிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் கண்ணியமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியல் சட்டத்தில் செய்யவேண்டுமென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருவதாகவும், இப்பிரச்சினையில் தன்னால் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்யும் என்றும் சோனியா காந்தி உறுதியளித்தார்.

தமிழர்கள் அழிந்து ஒழியும் வரை இந்த வட இந்தியக் கூட்டம், ஏதாவது சொல்லிக் காலத்தைக் கடத்திக்கொண்டே இருக்கும்.

தமிழ் நாட்டு உறவுகள் தாங்களாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய வேளை இது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினை; கலைஞர் கவலை; சோனியா அக்கறை! - சென்னையில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-06 07:56:37| யாழ்ப்பாணம்]

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும் முதல்வர் கருணாநிதி தனது கவலையை தெரிவித்தார். பதிலுக்கு சோனியா காந்தி, அண்டை நாடுகள் பிரச்சினைகளிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினை யில்தான் மத்திய அரசு அதிக அக்கறை காட்டிவருவதாகவும் இடம்பெயர்ந்த தமிழர் மீள்குடியேற்றத்துக்காக அதிகளவில் நிதியுதவி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

சென்னை தீவுத்திடலில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இருவரும் இவ்வாறு தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீன வர்கள் சிலர் கொல்லப்பட்டது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அப்பாவி மீனவர்கள் உயிர் பறிபோய் விட்டது. இதற்கு மேல் தமிழக மீனவர்கள் சுடப் படமாட்டார்கள் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு சென்னைத்தீவுத்திட லில் நேற்றுமாலை நடைபெற்ற தி.மு.க. தலைமையிலான ஜனநா யக முற்போக்கு கூட்டணி வேட்பா ளர்கள் அறிமுகக் கூட்டத்தில் சோனியா காந்தி உரை நிகழ்த்தியுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலை வர் சோனியா காந்தி, தி.மு.க. தலை வர் கலைஞர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

சோனியா பேசுவதற்கு முன்னர் பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி, மீன வர்களின் உரிமைக்கும், வாழ்விற் கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச் சினையாக கச்சதீவு உள்ளது என் றும் கச்சதீவில் தமிழக மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது குறித்து சோனியா எதுவும் கூறவில்லை. சோனியாகாந்தி தனது உரையில் மேலும் கூறியதாவது,

இலங்கைத் தமிழர்களின் உரி மைப்பிரச்சினை மிக முக்கியமானது இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக நாங்கள் கொடுத்த உறுதிமொழிகளை எல்லாம் ஒன்றொன்றாக செய்து கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இந்தியா சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வரு கிறது. அவைமேலும் தொடரும் என்று உறுதி கூறுகிறேன். அவர்களுக்கு சம உரிமை கிடைத்திட, சட்டத்திருத்தங்களை செய்யுமாறு இலங்கை அரசை வலி யுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கைத் தமிழர்களின் நிலை யில் கடந்த ஓராண்டு காலத்தில் குறிப் பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது எனவும், அவர்களின் மறுவாழ் விற் காக ஏராளமான நிதியுத வியை மத்திய அரசு செய்துள்ளது எனவும் அவர்கள் வாழ்வு மேம்பட மேலும் உதவிகள் செய் யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பொழுது புனர்வாழ்விற்காக ஏராளமான பணத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதுபோலவே 50ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டு வது மட்டுமன்றி இலங்கையின் அரசியல் அமைப்பு விதிகளை மாற்றி தமிழர்கள் எல்லா உரிமைகளையும் பெற்று தம்மானத்தோடும் பெருமை யோடும் பெருமிதத்தோடும் வாழ்வ தற்குரிய மாற்றத்தை செய்யவேண் டும் என்பதை நாங்கள் வலியுறுத் திக் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

valampurii.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.