Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க. ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்..?

நாளைய தினம், நம் தலையெழுத்தை மாற்றப் போகும் நாள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளையர் கூட்டம் நமது சொத்துக்களைக் கொள்ளையடிக்க நம்மிடமே அனுமதி பெறும் நாள். இதுவரை பட்டது போதும். இனிமேலாவது விழித்துக் கொள்வோம்..

தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி வீட்டுக்குப் போயாக வேண்டும். அடித்துத் துரத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை..!

அதற்கான காரணங்களாக எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1. ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. செய்த துரோகம்

டெசோ மாநாடு நடத்தினோம். அகில இந்திய அளவில் ஈழத் தமிழர் பிரச்சினையை கொண்டு சென்றோம் என்ற தி.மு.க. கட்சியினரின் கூச்சலெல்லாம் கடந்த காலத்தோடு முடிவுற்றுப் போனது..

இறுதி யுத்தம் என்று ராஜபக்சேவால் அறிவிக்கப்பட்டு இந்திய கைக்கூலி அரசின் ஆயுத உதவியால் லட்சணக்கணக்கான தமிழ் மக்கள் ஒதுங்க இடம் கிடைக்காமல் ஒரு நாள் இரவு நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாமல் ஊர் விட்டு ஊராக ஓடிக் கொண்டிருக்கும்போது தமிழர்களுக்கெல்லாம் தலைவன் நானே என்று தன்னைத்தானே பீத்திக் கொண்ட இந்த உத்தமர், என்ன செய்தார்..?

ஆயுதம் கொடுப்பது இந்தியா. உலகச் சமுதாயம் இதில் தலையிடாமல் இலங்கையைக் காப்பது இந்தியா. ஐ.நா. சபைக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவிடாமல் தடுப்பது இந்தியா என்று அத்தனை படுகொலைகளுக்கும் முழு முதற்காரணமான அன்றைய மத்திய அரசுக்கு முட்டுக் கொடுத்து தனது கட்சி எம்.பி.க்களின் ஆதரவினால் ஆட்சி நடத்த உதவிய இந்தக் கருணாநிதி கயவனில்லையா..?

புலிகள் தொடர்பான கருத்து வேறுபாட்டை பற்றிப் பிரச்சாரம் செய்ய இதுவா நேரம்..? அங்கே முள்ளிவாய்க்காலில் குடிப்பதற்கு பால்கூட இல்லாமல் குழந்தைகள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தபோது இந்த அருந்தவத் தமிழ்த் தலைவரின் புத்திரர்களும், வாரிசுகளும் நீரா ராடியாவுடன் “எனக்குத்தான் மந்திரி பதவி.. இல்லை.. இல்லை.. எனக்குத்தான் மந்திரி பதவி..” என்று பதவி ஆசை உரையாடலில் திளைத்திருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள்தானா..?

தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு எத்தனை மந்திரி பதவி வேண்டும். எந்தெந்த இலாகாக்கள் வேண்டும் என்பதற்காக இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியில் போய் பிச்சையெடுக்கத் தெரிந்த இந்தத் தரித்திரத் தலைவருக்கு ஈழத் தமிழன் கொல்லப்படுகிறான் என்றவுடன் டெல்லியுடன் பேச முடியவில்லை.. அவர்களுக்கு நெருக்கடி கொடு்க்க முடியவில்லை. தான் கொடுத்திருக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் தனது சீமந்தபுத்திரனுக்கு அமைச்சர் பதவி தராமல் போனால் நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம். வெளியேறுவோம் என்று மட்டும் சொல்லத் தெரிகிறது.

ஆக.. இவருக்கு தன் குடும்பம், சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் மட்டுமே முக்கியம். அவர்களுக்காகத்தான் ஆட்சி, அதிகாரத்தைப் பெற விரும்புகிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..! போதுமே.. இவரை வைத்துக் கொண்டு இனிமேல் நம்மால் கக்கூஸ்கூட கழுவ முடியாது. வீட்டுக்கே அனுப்பி ரெஸ்ட் எடுக்க வைப்போம்..! இந்த ஒரு காரணத்துக்காவே இந்த ஆட்சி தொலைய வேண்டியதுதான்..!

2. ரவுடித்தனம் செய்த அமைச்சர்கள்..!

சமூகத்தில் ரவுடித்தனம் செய்பவர்களைத் தடுக்க வேண்டிய அரசு நிர்வாகமே ரவுடித்தனம் செய்தால் என்னவென்று சொல்வது..?

தான் கொள்ளையடிக்க நினைத்த சொத்தை தராத ஒரே காரணத்துக்காக அந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளரை பொய் வழக்கில் சிக்க வைத்து, ஜெயிலுக்கு அனுப்பி வைத்து... இரவோடு இரவாக புல்டோசரை வைத்து அந்த இடத்தையே தரைமட்டமாக்கிய ஒரு மாபெரும் ரவுடியே இந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தால் அது எவ்வளவு பெரிய கொடுமை..!

அது மட்டுமா..? தன்னை எதிர்த்து பத்திரிகைகளிடம் பேட்டி கொடுத்ததற்காகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காகவும் அந்த நிலத்தின் உரிமையாளரின் மகனை நட்ட நடு இரவில் தனது வீட்டுக்கு எதிரே பகிரங்கமாக கட்டி வைத்து சவுக்கால் அடித்திருக்கும் கொடுமையைச் செய்திருப்பதும் அதே அமைச்சர்தான்..!

என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..? ராஜாவின் அமைச்சர் பதவியைப் பறித்தார்கள். கண் துடைப்புக்காக சிறையில் அடைத்தார்கள். மிக, மிக விரைவாக இந்த வழக்கை நடத்தி முடித்தார்கள். சாட்சி சொல்ல ஒருவர்கூட இல்லாத நிலையில் அந்த வழக்கு தள்ளுபடியானது. அந்தத் தாக்கப்பட்ட தமிழரின் உடலில் இன்னமும் இருக்கும் வரி, வரியான கோடுகள்தான் இந்த உத்தமச்சோழனின் பரம்பரையின் லட்சணத்தை படம் பிடித்துக் காட்டுகிறது..

இதைக் கேள்விப்படும்போது நம் மனசு கொதிக்கிறது..! யாரோ ஒரு பதிவர் வார்த்தைகளால் திட்டிவிட்டாரே என்றபோதே ஆள், அம்பு, படையணி திரட்டி ஒரு வாரத்திற்கு அவர் மீது சொல்லம்பு தொடுக்கும் வலையுகப் பதிவர்கள் கொஞ்சம் இதைப் பற்றி ஒரு நிமிடமாவது யோசித்துப் பாருங்கள்..!

இதுபோல் நம்மில் யாருக்காவது.. நமது உடன்பிறந்தாருக்கு நேர்ந்திருந்தால் நமக்கு எந்த அளவுக்கு ரத்தம் கொதித்திருக்கும்.? ஆனாலும் இந்த ஆட்சியை ஆதரிக்க நம்மில் சிலருக்கு எப்படி மனம் வருகிறது என்றே தெரியவில்லை..! இதோடு விட்டார்களா இந்தக் கயவர்கள்..?

இதே ரவுடி அமைச்சருக்கு மீண்டும் தேர்தலில் நிற்க சீட் கொடுத்து நிற்க வைத்து “இவரையும் ஜெயிக்க வையுங்கள்” வெட்கமில்லாமல் நம்மிடமே வந்து கேட்கிறார்கள். இப்படி கேட்கும் அளவுக்கு இந்த ஆட்சியாளர்களுக்கு தைரியம் இருக்கிறது என்றால் மக்களாகிய நம்மை எந்த அளவுக்கு இவர்கள் எடை போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது..!

இவருக்குப் போட்டியாக சேலம் மாவட்டத்து குறுநில மன்னரான வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், ஒருவரின் குடும்பச் சொத்தை அபகரிக்க வேண்டி அந்தக் குடும்பம் மொத்தத்தையும் ஆள் வைத்து கொலை செய்திருக்கிறார். அந்தக் குற்றத்தை இவர்தான் செய்திருக்கிறார் இன்று இன்றைய ஆட்சியின் காவல்துறையே கைது செய்கிறது. அந்தக் கைது செய்யப்பட்டவனையே அமைச்சராக இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம் சிறைக்குச் சென்று பார்க்கிறார்..! போதுமே.. இந்த வழக்கு என்னாகும் என்று இப்போதே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..!

இவர்கள் நம் மீது காட்டும் இந்த மரியாதைக்கு நாம் பதில் மரியாதையை செய்ய வேண்டாமா..? தயவு செய்து இவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்..!

3. ஸ்பெக்ட்ரம் மகா ஊழல்

இனிமேல் இதுபோன்ற ஊழலை உலகத்திலேயே யாருமே செய்ய முடியாது என்று உலக அரசியல்வியாதிகளே சொல்கின்ற அளவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்திருக்கும் இவர்களை எந்த விளக்கமாற்றை வைத்து அடிப்பது..!

அந்த ஊழல் பணம் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பும், இவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நம்மிடம் ஓட்டுக் கேட்க வருகிறார்கள்..?

நாம் எப்படி இவர்களை அனுமதிப்பது..? நம் அனுமதி பெற்றே இந்தக் கொள்ளையை இவர்கள் செய்திருக்கிறார்கள் என்னும்போது அடுத்த முறை தேர்வு செய்யும்போது நாம் கவனமாக இருக்க வேண்டாமா? ஆகவே தோழர்களே.. தயவு செய்து இந்தக் கூட்டணியை ஒதுக்கித் தள்ளுங்கள்..!

4. ஆட்சி நிர்வாகம் செய்த லட்சணம்..!

நடக்கவே முடியாத முதலமைச்சரை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தினால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு உதாரணத்தையும் கருணாநிதிதான் செய்து காட்டியிருக்கிறார்.

அவருடைய கட்சி உறுப்பினரான ஒரு நகர மன்றத் தலைவர் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டிருக்கிறார். மாநிலத்தின் முதல்வரான இவருக்கு அந்தத் தகவல் மாலைவரை சொல்லப்படவில்லை. மாலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட பின்பு ஆச்சரியத்துடன் “அப்படியா..?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்கிறார்.. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தினால் வெளங்குமா..?

முதல் அமைச்சரின் குடும்பச் சண்டை பகிரங்கமாக வெடித்தது. இதனால் அப்பாவிகள் 3 பேரின் உயிர்கள் பிரிந்தன. அந்தக் கொலைகாரர்களை அப்பட்டமாக வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தும், அந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியடையச் செய்யும் அளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து முடித்து தனது மகனை காப்பாற்றிக் கொண்ட இந்த ராஜராஜசோழனை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா..? அந்த வழக்கில் இறந்து போன அப்பாவிகளுக்கு என்னதான் பதில்..?

முத்துக்குமார் என்னும் வீர இளைஞன் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான். அந்த இளைஞனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் தான் பெற்றெடுத்த ரவுடி மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அறிக்கை வெளியிட்ட இந்த மகா உத்தமத் தலைவனை தமிழகம் பெற்றெடுத்ததற்கு நாம் நிச்சயமாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..!

பிரபாகரன் என்னும் ஒரு தமிழரின் தாயார்.. 80 வயது மூதாட்டி. பெயர் பார்வதியம்மாள். சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார். படுத்தப் படு்க்கையாகக் கிடக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுமாம்..! அதனால் அவரை அப்படியே திருப்பியனுப்பிவிட்டார் இந்த மனுநீதிச் சோழன்.

இதாவது பரவாயில்லை. இதற்காக அவர் சொன்ன விளக்கங்கள்தான் மகா கொடுமை. முதலில் "எனக்குத் தெரியாது.." என்றார். பின்பு "அந்த அம்மையாரை திருப்பி அனுப்பிய பின்புதான் என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.." என்றார். மீண்டும் வேறொரு அறிக்கையில் "அந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால்தான் காவல்துறையினர் அனுப்பப்பட்டார்கள். ஆனால் இதுவும் எனக்குத் தெரியாது. நான் தூங்கிவிட்டேன்.." என்று அண்டப்புளுகு புளுகினார்.

இவர் எதுக்காக முதல் அமைச்சர் பதவியில் உட்கார்ந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்..!? வீட்டில் ஓய்வெடுத்து தூங்கலாமே..? யார் வேண்டாம் என்று மறுத்தது..?

தன் கண்ணெதிரே தமிழகத்து வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் நான் பேசினேன் என்று தைரியமாக இவருடைய வாய் சொல்கிறது என்றால் எவ்வளவு தைரியம் இவருக்கு..? அதைப் பார்த்தவர்களும், செய்தியைக் கேட்பவர்களும் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றுதானே இவர் நினைத்திருக்கிறார்..!? இந்த மனிதரை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டாமா..!?

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை கை கட்டி வேடிக்கை பார்த்தது இவருடைய காவல்துறைதான். ஆள் மாற்றி ஆள் கை காட்டி இப்போது கோர்ட்டின் நடவடிக்கையில்தான் உண்மைகளே வெளி வருகிறது. இவருடைய ஆட்சியின் லட்சணம் இதிலிருந்தும் தெரிகிறது..! கேட்டால் இந்தியாவிலேயே இவர்தான் ஆட்சி நடத்துவதில் சிறந்தவராம்..! தூக்குப் போட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறது..!

உயர்நீதிமன்றத்தி்ல் வழக்கறிஞர்கள், காவல்துறையினருக்கு இடையில் மோதல்.. மீண்டும் ஒரு அமளி.. நிலைமையைக் கட்டுக்குள் அடக்க வேண்டிய வழி வகைகளை ஆராய வேண்டிய இவரோ சாவகாசமாக வீட்டில் அமர்ந்து லைவ் ரிலே பார்த்துக் கொண்டிருக்கிறார்..!

இவருடைய வீட்டில் ஒரே ஒரு நாள் காவல்துறை புகுந்ததற்காக எத்தனை, எத்தனை ஒப்பாரிகளையும், கூச்சல்களையும் கிளப்பினார் இவர்..? அப்போது மற்றவர்களை இவர் என்னவென்று நினைக்கிறார்..? இவர் முதல்வராக இருக்க வேண்டுமென்று இங்கே யார் அழுதது..?

இங்கே நான் கேள்விப்பட்ட, படித்த இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் தோழர்களே..!

உலகத்தின் 214-வது பணக்காரர் சிவ்நாடார். மொத்தச் சொத்துக்கள் 4 பில்லியன்.. HCL நிறுவனத்தின் தலைவர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. தினத்தந்தியின் நிறுவனர் அமரர் ஆதித்தனாரின் உடன் பிறந்த அக்காளி்ன் மகன். நடிகர் சரத்குமாரின் சொந்த அத்தை மகன். பிரபல தமிழ்ப் பெண் எழுத்தாளர் ரமணி சந்திரனின் உடன்பிறந்த தம்பி..!

இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இவர் மூலமாக சிவ்நாடாருக்கு ஒரு மகன் உண்டு. ஏதோ ஒரு காரணத்தினால் இந்த மனைவியை விலக்கிவிட பெரும் முயற்சி செய்தார் சிவ்நாடார். முடியவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டார் அவரது மனைவி.

மனைவியுடன் சமரசமாக போக முயற்சி செய்தார். முடியாமல் போக இப்போதைய ஆட்சியாளர்களை அணுகினார். கொடுக்க வேண்டியதை கொடுத்திருக்கிறார். உத்தரவுகள் பறந்தன. அந்த 2-வது மனைவி மீது அதிரடியாக ஒரு வழக்கு பாய்ந்தது. என்ன வழக்கு தெரியுமா..? பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக..! இது எப்படியிருக்கு..? 4 பில்லியன் சொத்துள்ள ஒருவரின் மனைவி கத்தியைக் காட்டி வழிப்பறி செய்தாராம்.. அப்படியே அவரைக் கொத்தாகத் தூக்கிச் சென்று சிறையில் அடைத்தார்கள். இது போன்ற கொடுமைகளை பிரிட்டிஷ்காரர்கள்கூட செய்திருக்க மாட்டார்கள்..!

அந்த மனைவி வெளியில் வர வேண்டுமெனில் பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்ல வேண்டும் என்றார்கள். அந்தப் பெண்ணும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள.. பணம் கை மாறியது.. வழக்கும் கைவிடப்பட்டது. திருமண ஒப்பந்தம் முறிந்து போன சந்தோஷத்தில் சிவ்நாடார் விமானமேறினார். அவரது முன்னாள் மனைவிக்குக் கொடுக்கப்பட்டதில் பாதியை ஆட்சியில் இருந்தவர்களும், ஏற்பாடு செய்த உளவுத்துறையின் மூத்த அதிகாரியொருவரும் பங்கு போட்டுக் கொள்ள.. கணவர் கொடுத்தப் பணத்தில் பாதிதான் மனைவிக்கு நஷ்ட ஈடாகக் கிடைத்தது.

எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவரை, பத்திரிகையாளர்களுடன் பேச விடாமல் செய்ததில் அந்த மூத்த உளவுத்துறை அதிகாரிக்கு பெரும் பங்குண்டு. இந்த ஆட்சி போன பின்பு இந்த விவகாரம் வெளிவரும் என்று நினைக்கிறேன்..!

ஆட்சி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த மாட்டேன் என்றெல்லாம் பொய் சொல்லி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட இந்த முதலமைச்சரும், அமைச்சரவை சகாக்களும் இது போன்ற எத்தனை, எத்தனை குற்றங்களைச் செய்கிறார்கள்.. செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு நன்கு தெரியும்..! இவர்களை ச்சும்மா விட்டு வைக்கலாமா..? வாய்ப்பு நாளை மறுநாள் வந்திருக்கிறது.. விட்டுவிடாதீர்கள் தோழர்களே..!

இது மட்டுமல்ல.. விலைவாசி உயர்வு, மின் வெட்டு என்ற இரண்டு பூதங்களையும் வளர்த்துவிட்டதில் இவர்களுக்கும் பங்குண்டு..!

யார் ஆட்சி செய்தாலும் விலைவாசி உயரத்தான் செய்யும் என்பார்கள் சிலர்..! ஆனால் பெட்ரோல், டீசலின் விலையை தன்னிச்சையாக அந்த நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றியது இந்தத் தர்மதுரையின் கட்சியின் முழு ஆதரவைப் பெற்றிருக்கும் மத்திய ஆட்சிதான்.

ஒரே மாதத்தில் 2 முறைகள் ஏற்றப்பட்டு நிமிடத்துக்கு நிமிடம் காய்கறிகளின் விலையை உச்சத்தைத் தொட காரணகர்த்தாகவாக இருந்து தொலைந்திருக்கும் இந்தக் கயவர்களைத் தண்டிக்க வேண்டாமா..?

இந்த ஐந்தாண்டு காலத்தில் அத்தனை அமைச்சர்களும் சொல்லி வைத்தாற்போல் தங்களது சொத்துக்களை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் அதேபோல் மாநிலத்தின் அத்தியாவசியத் தேவையான மின் சப்ளையை பல மடங்கு உயர்த்தாமல்.. அதற்கான வழிமுறைகளைக் கண்டறியக்கூட மனமில்லாமல் இருந்திருக்கும் இந்த திறமையில்லாதவர்கள் எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும்..?

தங்களுடைய சொத்து மதிப்புகளை மட்டும் உயர்த்தத் தெரிந்த இவர்களுக்கு மாநிலத்திற்கு மிகத் தேவையான மின் உற்பத்தியை பெருக்கத் தெரிய வேண்டாமா..? எல்லாவற்றிலும் கமிஷன் அடித்தே பழகித் தொலைத்திருக்கும் இவர்களால் கமிஷனைத் தாண்டி எதையும் செய்ய முடியாமையே இதற்குக் காரணம் என்று கோட்டை வட்டாரத்தில் தெளிவாகவே பேசுகிறார்கள். இந்தத் திருடர்கள் நமக்குத் தேவைதானா..?

கடைசியாக மீனவர்கள் பிரச்சினை..! மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கிறார்கள். அப்படிச் செல்ல வேண்டாம் என்று கூப்பாடு போடும் மத்திய அரசும், தமிழக அரசும், எல்லை தாண்டிப் போய்விடும் நம் தமிழகத்து அப்பாவி மீனவர்களை பங்களாதேஷும், பரமவைரி பாகிஸ்தானும் துப்பாக்கியால் சுடாமல் பத்திரமாகத் திருப்பியனுப்புவதை அறிவார்களா..?

சுண்டைக்காய் பயலாட்டம், ஒண்ணுக்கடித்தாலே வரைந்துவிடும் அளவுக்கு சின்ன நாடாக இருக்கும் இந்த இலங்கைக்கு எத்தனை தைரியம் இருந்தால் இத்தனை தமிழர்களை கொன்று குவித்திருப்பார்கள்..? ஒன்றா இரண்டா..? இதுவரையில் 550-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கேட்பார் உண்டா..?

இந்தியாவில் இருந்து அத்தனையையும் இறக்குமதி செய்து கொண்டு, நாம் போடும் பிச்சைக் காசில் உட்கார்ந்து சாப்பிடும் அந்த நாட்டு கொழுப்பெடுத்த ராணுவத்திற்கு தமிழன் என்றாலே இளக்காரமாகப் போகிறதே..? இதற்கென்ன காரணம்..? கேள்வியே கேட்காத, கேட்க விரும்பாத, மத்திய அரசும், தமிழக அரசும்தானே..!

மத்திய அரசுதான் இதற்கு பொறுப்பு என்றால், அந்த அரசுக்கு நீங்கள் ஏன் ஆதரவு கொடுக்கிறீர்கள்..? உங்களது கட்சிக்காரர்கள் ஏன் வெட்கமில்லாமல் மந்திரி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்..?

இதே தமிழன் ஓட்டுப் போட்டு உன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியதால்தானே உங்களது மனைவி, துணைவியுடன் மக்கள் பணத்திலேயே விமானத்தில் ஊர், ஊராகச் சுற்றுகிறீர்கள்..? உங்க அப்பன் வீட்டுக் காசுலயா போறீங்க..? துரோகிகளா..!

அன்பு பதிவர்களே..! வாசகர்களே..! பொதுமக்களே..! இவர்கள் இருந்தென்ன? போயென்ன..? நாட்டு மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத இந்தக் கோழைகளை ஆட்சிக் கட்டிலில் ஒரு நிமிடம்கூட இனியும் உட்கார வைக்கக் கூடாது..! வீட்டுக்கு அனுப்பி வைப்போம். வாருங்கள்..!

சரி.. தி.மு.க. வேண்டாம். அப்படியானால் இந்தக் கூட்டணி..? கூட்டணி வேறு இவர்கள் வேறா..? இந்தக் கூட்டணியே வேண்டாம். இவர்களுடன் கூட்டணி வைத்த பாவத்திற்காக அவர்களுக்கான தண்டனையை அவர்களும் அனுபவிக்கத்தான் வேண்டும்.

அதிலும் இந்தக் கூட்டணியின் பிரதான அங்கமாக இருக்கும் காங்கிரஸை ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவிடாமல் செய்தால்தான், முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த நமது தமிழர்களின் ஆன்மா சாந்தியாகும்..!

இந்தப் பக்கமும் பேசுவோம்.. அந்தப் பக்கமும் பேசுவோம் என்ற நினைப்பில், “ஏய் இந்திய அரசே..” என்று ஏதோ அமெரிக்க ஒபாமாதான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துகிறார்போல் கூச்சலிடும் திருமாளவன், அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இத்தாலியம்மாவுடன் ஒரே மேடையில் காட்சி தந்து அந்தம்மாவுக்கும் சல்யூட் அடித்து தன்னை கொடுந்தமிழனாகக் காட்சி தருகிறார். இவரையும் சேர்வார் சேர்க்கை சரியில்லை என்கிற காரணத்திற்காகத் தண்டிக்கத்தான் வேண்டும்.

இந்தக் கூட்டணி வேண்டாம் என்றால் வேறு எவருக்கு..?

எதிரில் நிற்பது ஜெயலலிதாவின் அதிமுக கூட்டணி. இவர்கள் இல்லாமல் இந்திய ஜனநாயகக் கட்சி, மற்றும் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் சுயேச்சைகள் என்று பல பிரிவினரும் நிற்கிறார்கள்..!

என்னுடைய முதல் சாய்ஸ்.. இரண்டு கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றாக வேண்டும். ஏழை, எளிய மக்களுக்காக இன்றளவும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கூட்டணி தர்மத்தைக்கூட பொருட்படு்த்தாமல் பேசக் கூடிய தலைவர்கள் கம்யூனிஸ இயக்கத் தலைவர்கள்தான்.

ஆகவே இந்த கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களை நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்குப் போடுகின்ற ஓட்டு நிச்சயம் வீண் போகாது..!

மீதம் இருக்கின்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியைத் தவிர மற்றவர்களில் உங்களது தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள்..? யார் வந்தால் உங்களால் அவர்களை எளிதாக அணுகமுடியும்..? யார் சம்பாதிக்க நினைக்காமல் இருக்கிறார்கள்.? என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்..! அதுவே போதும்..!

இறுதியில் குழப்பங்கள் வரலாம். வரட்டும்.. தி.மு.க. கூட்டணியை முதலிலேயே முற்றாக வெளியேற்றிவிட்டதால் அடுத்து இருப்பவர்களில் ஒருமித்தக் கருத்து கொண்டவர்கள் தங்களுக்குத் தாங்களே விலங்கு போட்டுக் கொண்டு குறைந்தபட்சம் ஒரு நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டுமே என்கிற பய உணர்வோடு ஆட்சி நடத்த முன் வருவார்கள் என்று நம்புகிறேன்..!

என் இனிய தோழர்களே..! இந்த முறையும் தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள்..!

தி.மு.க. கூட்டணியை முற்றாகப் புறக்கணித்து இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுத்து ஒளி பாய்ச்சுங்கள்..!

பொறுமையாகப் படித்தமைக்கு எனது அன்பான நன்றிகள்..!

குறிப்பு : கொஞ்சம் கஷ்டத்தோடு கஷ்டமாக இந்தப் பதிவுக்கு ப்ளஸ் ஓட்டளித்தீர்களேயானால், இன்னும் பல நூறு பேர்கள் இந்தப் பதிவைப் படிக்க வாய்ப்பு கிடைக்கும்..!

நன்றி..!

http://truetamilans.blogspot.com/2011/04/blog-post_12.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.