Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிக்கையை நிராகரிப்பது என்பது பல ஆயிரம் பெண்களினதும், குழந்தைகளினதும் கண்ணீரை நிராகரிப்பதற்கு நிகரானது!

Featured Replies

இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையை நிராகரிப்பது என்பது பல ஆயிரம் பெண்களினதும், குழந்தைகளினதும் கண்ணீரை நிராகரிப்பதற்கு நிகரானது என கொழும்பைத் தளமாகக் கொண்ட ஜப்பான் நாட்டின் அனுசரனையுடன் இயங்கும் ஐ.எம்.ஏ.டி,ஆர் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமான ராவய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டும் தெரிவிக்கவில்லை. பல மனிதநேய அமைப்புக்களும் முன்வைத்துள்ளன.

அங்கு மனிதநேயப்பணிகள் தடுக்கப்பட்டுள்ளன, வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன, பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது எறிகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மரபுவழியிலான போரின்போது ஜெனீவா சட்டவிதிகள் பின்பற்றப்படவேண்டும். ஆனால் இலங்கையில் அது பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பிலான விசாரணைகள் அவசியமானது. இது நாட்டின் இறைமையை பாதிக்கும் விசாரணை அல்ல.

இனஅழிப்பு மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக இந்த சட்டம் இரண்டாம் உலகப்போரின் பின்னர் கொண்டுவரப்பட்டது. ஐ.நாவினால் எடுக்கப்படும் பல முடிவுகள், அமெரிக்காவின் நலன் சார்ந்ததாகவே இருப்பது வழக்கம்.

ஆனால் தற்போது ஐ.நாவை தூற்றும் மஹிந்த ராஜபக்ஸவும், வாசுதேவ நாணயக்காரவும் 1989 ஆம் ஆண்டு காணாமல்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை கொண்டு ஐ.நாவின் படி ஏறியவர்கள் தான். நாம் வரலாற்றை மறந்துவிடவில்லை.

தென்னிலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அன்றைய அரசு விசாரணை நடத்தவில்லை என்பதற்காக. ஆனால் தற்போது தமிழ் பெற்றோர் தமது பிள்ளைகள் காணாமல்போனது தொடர்பில் வேறு ஒரு நாட்டிடம் முறையிடுவதை அல்லது ஆதாரங்களை சமர்ப்பிப்பதை அவர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்? என்று நிமல்கா பெர்ணான்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

போரின் போது மனிதாபிமான அமைப்புக்களை வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே தான் வன்னியில் நடைபெற்ற போர் என்பது “சாட்சிகள் அற்ற போர்” என அழைக்கப்படுகின்றது.

வன்னியில் 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகவே அரசு தெரிவித்திருந்தது. ஆனால் போரின் பின்னர் 3 இலட்சம் மக்கள் வெளிவந்துள்ளனர். எனவே அரசு ஏன் உண்மையான தகவல்களை மறைத்தது என்பது தொடர்பிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் பலர் தமது கணவர்களையும், பிள்ளைகளையும் இராணுவத்தின் காவலரன்களிலேயே பறிகொடுத்துள்ளனர். தற்போது அவர்கள் எங்கே என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் அரசிடம் பதில் இல்லை. சரணடைந்தவர்கள் எவ்வாறு மரணமடைந்தனர் என்பது தொடர்பிலும் அரசிடம் ஆதாரங்கள் இல்லை.

விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களில் பலர் தற்போது அரசுடன் இணைந்து இயங்கிவருகின்றனர். சிலர் அரசில் முக்கிய பதவிகளிலும் உள்ளனர். எனவே குற்றம் செய்தவர்கள் அரசின் பக்கம் தாவினால் சாதாரண மக்கள் ஆகிவிட முடியுமா? மகிந்தா சிந்தனை என்பது இதுதானா?

நல்லிணக்க ஆணைக்குழு என்பது இலங்கையில் முன்னர் அமைக்கப்பட்ட 2 அல்லது 3 குழுக்களைப் போன்றதே. முன்னர் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் கூட வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை. மகிந்தாவால் நன்கு திட்டமிட்டு தெரிவுசெய்யப்பட்ட நபர்களே நல்லிணக்க ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அந்த குழு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. மாறாக போர்நிறுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தான் அது ஆய்வுகளை மேற்கொள்கின்றது.

முன்னைய அரசுகளில் குற்றம் காண்பதே அதன் நோக்கம். இந்த குழுவின் முன் சாட்சியமளிக்க முன்வந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்களில் பலருக்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை.

புலம்பெயர் தமிழ் சமூகம் ஐ.நா நிபுணர் குழுவை தவறாக வழிநடத்தியுள்ளதாக அரசு தெரிவிக்கின்றது. ஆனால் ஐ.நா போன்ற அமைப்புக்களை நாம் தவறாக வழிநடத்த முடியாது என்பதை நாம் மறக்கக்கூடாது.

ஐ.நா அறிக்கையின் மூலம் இலங்கை அரசு அனைத்துலக நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் அரசு மக்களை தவறாக வழிநடத்திவருகின்றது.

அது ஒரு தவறான பிரச்சாரம். அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பல நூறு மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதே அறிக்கையின் நோக்கம். போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே விரும்புகின்றனர்.

அறிக்கையை நிராகரிப்பது என்பது பல ஆயிரம் பெண்களினதும், குழந்தைகளினதும் கண்ணீரை நிராகரிப்பதற்கு நிகரானது.

அரசு ஐ.நாவுக் எதிராக செயற்படுகின்றதோ இல்லையோ, ஐ.நாவின் செயற்பாடுகளை நிறுத்த அவர்களால் முடியாது. அறிக்கையை நிராகரிப்பதற்கு நாம் எவ்வளவு பொய்களை அனைத்துலக சமூகத்தின் முன் கூறப்போகிறோம். எனவே அறிக்கையை இறைமை, மற்றும் இனத்துவேசத்துடன் பார்க்கக்கூடாது.

கோத்தபாயா வெளிப்படையாகவே ரஸ்யா, சீனாவிடம் உதவிகளை கோருகின்றார். அது சிறீலங்காவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும். இந்தியா, சீனா மற்றும் ரஸ்யா ஆகியன நாடுகளும் நெருக்கடிக்குள் உள்ள நாடுகளே.

இந்தியாவிடம் உதவிகளை கேட்பதாக கோத்தபாயா தெரிவிக்கவில்லை. மேலும் இந்த அறிக்கையை அரச தலைவரே விடுக்க முடியும். ஆனால் ஒரு செயலாளர் எவ்வாறு இவ்வாறு ஒரு அறிக்கையை விடுக்க முடியும்?

அரச தலைவர் அறிக்கையை விடுவதாக இருந்தாலும், அமைச்சரவையில் விவாதித்த பின்னரே இவ்வாறான ஒரு அறிக்கையை விடுக்கமுடியும். அரசின் இந்த நடவடிக்கை அனைத்துலக சமூகத்திடம் எதிர்மறைவான விளைவுகளையே ஏற்படுத்தும்.

இலங்கை அரசே ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும். எல்லா வன்முறைகளையும் விசாரணைசெய்ய வேண்டும். விசாரணைக்குழுவில் தமிழ் மக்களும் இடம்பெறவேண்டும்.

ஐ.நா அல்லது வேறு அமைப்புக்களும் அதில் பங்கு வகிக்கலாம். அதுவே சுயாதீன, காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ளும் முறை. பாதிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்படவேண்டும்.

இதனை விடுத்து இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதாக பிரச்சாரப்படுத்துவது மிகவும் கேவலமானது. ஒருவர் கொல்லப்பட்டால் அல்லது காணாமல்போனால் அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோருவது எவ்வாறு தவறாகும்? என அவர் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்

tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.