Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யத் துணிந்துள்ள தமிழினம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருவார்.... வருவார் என்று கூறிக் கூறியே: தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யத் துணிந்துள்ள தமிழினம்

முள்ளிவாய்க்கால்: இன்றோடு முடியும் இரண்டாண்டுகள்:

தமிழரின் இந்த இரண்டு வருட இருண்ட வாழ்வின் முடிவு எப்போது என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் இருண்டயுகம் நோக்கிய பயணத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒளியைத் தேடும் பயணத்தை நோக்கவும் இல்லை, தொடரவும் இல்லை. இந்தப் போரின் கதாநாயகனாக இருந்தவர் பிரபாகரன். ஆயிரமாயிரம் போராளிகளினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் மரணங்களுக்கு ஒரு அர்த்தத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தியவர் பிரபாகரன் தான். ஆனால் அவருக்காக ஒரு நினைவு நாளை நடத்த முடியாதளவுக்கு ஈழத்தமிழினம் பிளவுபட்டு நின்றது. இதைவிட சோகமும், சோதனையும் வேறெந்தத் தலைவனுக்கும் வந்ததில்லை. அவர் வருவார்.... வருவார் என்று கூறிக் கூறியே அவரது நினைவை மறக்கச் செய்து விட்டவர்கள் நாம். வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடிக்க வேண்டிய ஒருவரின் நினைவுகளை அழிக்கின்ற காரியத்தைத் தமிழினம் செய்து கொண்டிருக்கிறது. இந்தச் சகதிக்குள் இருந்து மீண்டெழும் வரை தமிழருக்கு விடிவை நோக்கிய பயணம் ஒரு போதும் தொடங்கப் போவதில்லை. இந்த ஒரு விடயத்தில் கூட சரியான முடிவை எடுக்க முடியாத தமிழினத்தால், எப்படி எதிர்கால வாழ்வு பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்? இதனால் தான் இத்தனை அவலம் தமிழருக்கு மீணடும், மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. நன்றி மறப்பது நன்றன்று. ஆனால் நன்றி மறந்த இனமாக மாறிப் போன தமிழர்கள் எப்படி தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யும் அளவுக்கு தமிழினம் சிங்களதேசத்தின் புலனாய்வுச் சதிகளுக்குள் சிக்கிப் போயுள்ளது. இந்தநிலையில் எப்படி தமிழருக்கென நீதியான வாழ்வை நாம் எதிர்பார்க்க முடியும்?

இனி,

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

தமிழினம் நவீன கால வரலாற்றில் மிகப்பெரிய அழிவுகளையும், சோகங்களையும் சந்தித்த நாள் இது.

உலகம் முழுவதும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க சிங்களதேசம் தமிழரின் இருப்பையும், உறுதியையும் அழித்துக் கொண்டிருந்த நாள்.

முள்ளிவாய்க்கால் என்ற சிறிய துண்டு நிலத்துக்குள் கொண்டு போய் முடக்கி விட்டு இலட்சக்கணக்கான மக்களை நோக்கி சிங்களப் பேய்கள் நடத்திய ஊழிக்கூத்து அது.

முப்பதாண்டு வரலாற்றைக் கொண்ட தமிழரின் ஆயுதப் போராட்ட வலிமைக்கு முடிவு கட்டப்பட்ட நாளும் அதுவே.

அன்றோடு போனது- தமிழரின் வாழ்வு, செழிப்பான எதிர்காலம், பாதுகாப்பு என்று எல்லாமே.

மூன்று தசாப்தங்களாக தமிழரின் கவசமாக இருந்து வந்த ஆயுதபலம் நிர்மூலமாக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது கேட்பாரின்றி கிடக்கும் நிலையில் தமிழினம் இருக்கிறது.

இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தேறி விட்ட எத்தனையோ நிகழ்வுகள்- தமிழருக்கு இனிமேல் இலங்கைத் தீவில் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்வுக்கு இடமேயில்லை என்று சான்று பகர்கின்றன.

திரும்பிய திசையெங்கும் சிங்களப்பேய்கள் தான் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன.

இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது.

சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன.

பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான்.

முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் கொடுத்து வந்தது. இன்று அந்தப் பாதுகாப்பு இல்லாது போய்விட்ட நிலையில்- யாரும், எப்போதும், எப்படியும் குற்றங்கள் செய்யலாம் என்று துணிந்து விட்டனர். இலகுவாகத் தப்பிக்கலாம் என்பதால் எந்தக் கூச்சமும் இல்லாமல் குற்றங்களில் இறங்குகின்றனர். இந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் புலிகளின் அருமையை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள்.

அதேபோல புலிகள் இல்லாத சூழலில் தான் அவர்களின் அருமை புரியத் தொடங்கியுள்ளது.

ஆனால் தமிழரின் துரதிஸ்டம் என்னவென்றால், இனிமேல் இதேபோன்றதோர் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியாது என்பது தான்.

உலக ஒழுங்குமுறை அதற்கு இடமளிக்காது. தமிழரின் தலைவிதியும் அதற்கு இடம்கொடுக்காது.

முள்ளிவாய்க்காலிலேயே தமிழரின் செழிப்பான வாழ்வும், எதிர்காலமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது.

அதற்கு சிங்களப்படைகள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் தான் பொறுப்புக் கூற வேண்டும்.

போரை நிறுத்த ஐ.நாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை.

உலகத்தின் கண்முன்னே தான் தமிழருக்கு இந்தக் கொடுமைகள் எல்லாம் இழைக்கப்பட்டன.

முள்ளிவாய்க்காலில் பீரங்கிகள் மூலம் தமிழரைக் கொன்றொழித்துக் கொண்டிருந்த போது- அமெரிக்காவில் இருந்தபடியே அதை செய்மதிப் படங்களின் ஊடாகப் பார்த்திருக்கிறார்கள்.

உள்ளிருந்தே தகவல்களைப் பெற்றிருக்கிறது இந்தியா.

ஆனாலும் யாருக்கும் அங்கே தமிழர் மீது இரக்கமே வரவில்லை.

அங்கிருந்த மூன்றரை இலட்சம் மக்களின் அவலத்தை விட அவர்களுக்கெல்லாம் பெரிதாக இருந்தது- புலிகளின் அழிவு தான்.

அதை எல்லோருமாகச் சேர்ந்தே செய்து முடித்திருக்கிறார்கள்.

இப்போது அவர்களுக்கெல்லாம் நிம்மதி வந்துவிட்டது.

ஆனால் தமிழரின் நிம்மதி பறிபோய் விட்டது.

தமிழர்கள் போரின் போது இழந்தவற்றையும் சரி, அதன் பின்னர் அவர்கள் இழந்து போயுள்ள நிம்மதியையும் சரி, எந்த உலக சக்தியாலும் கொடுத்து விட முடியாது.

இவர்களிடத்தே இருந்து வந்த ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் இனிமேல் ஏற்படுத்தி விட முடியாது.

எல்லாம் சீர்குலைந்து வேரறுக்கப்பட்டு விட்டது.

இது தான் தமிழருக்கு முள்ளிவாய்க்கால் கொடுத்த பரிசு.

இந்தப் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகின்றன.

இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழருக்கு என்ன நீதி கிடைத்தது?

சிங்கள அரசு தமிழரை வாழ்விக்கப் போவதாக கூறியே போரை நடத்தியது.

ஆனாலும் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகின்ற போதும் அகதி முகாம்கள் மூடப்படவில்லை.

கிராமங்கள் மீள்குடியமர்வுக்கு விடுவிக்கப்படவில்லை.

சுதந்திரமாக தமது நிலத்தில் குடியேறவோ, நடமாடவோ முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடு, எல்லாவற்றுக்கும் படையினரிடம் போயே கெஞ்ச வேண்டிய நிலை.

இது தான் இந்தப் போர் தமிழருக்கு விட்டுச் சென்றுள்ள மிச்சம் மீதியான வாழ்க்கை.

இதுபோதாதென்று நாளுக்கு நாள் நடக்கின்ற கொலைகளும், மர்மமான மரணங்களும் மக்களை அச்சத்தில் உறைய வைக்கின்றன.

இந்த அச்சமான வாழ்வைத் தான் தமிழருக்குப் பரிசளித்துள்ளது உலகம்.

தமிழரின் இந்த இரண்டு வருட இருண்ட வாழ்வின் முடிவு எப்போது என்று யாராலும் சொல்ல முடியாது.

ஏனென்றால் நாம் இருண்டயுகம் நோக்கிய பயணத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒளியைத் தேடும் பயணத்தை நோக்கவும் இல்லை, தொடரவும் இல்லை. இந்தப் போரின் கதாநாயகனாக இருந்தவர் பிரபாகரன். ஆயிரமாயிரம் போராளிகளினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் மரணங்களுக்கு ஒரு அர்த்தத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தியவர் பிரபாகரன் தான். ஆனால் அவருக்காக ஒரு நினைவு நாளை நடத்த முடியாதளவுக்கு ஈழத்தமிழினம் பிளவுபட்டு நின்றது. இதைவிட சோகமும், சோதனையும் வேறெந்தத் தலைவனுக்கும் வந்ததில்லை. அவர் வருவார்.... வருவார் என்று கூறிக் கூறியே அவரது நினைவை மறக்கச் செய்து விட்டவர்கள் நாம். வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடிக்க வேண்டிய ஒருவரின் நினைவுகளை அழிக்கின்ற காரியத்தைத் தமிழினம் செய்து கொண்டிருக்கிறது. இந்தச் சகதிக்குள் இருந்து மீண்டெழும் வரை தமிழருக்கு விடிவை நோக்கிய பயணம் ஒரு போதும் தொடங்கப் போவதில்லை. இந்த ஒரு விடயத்தில் கூட சரியான முடிவை எடுக்க முடியாத தமிழினத்தால், எப்படி எதிர்கால வாழ்வு பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்?

இதனால் தான் இத்தனை அவலம் தமிழருக்கு மீணடும், மீண்டும் வந்து கொண்டிருக்கிறது.

நன்றி மறப்பது நன்றன்று.

ஆனால் நன்றி மறந்த இனமாக மாறிப் போன தமிழர்கள் எப்படி தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?

தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யும் அளவுக்கு தமிழினம் சிங்களதேசத்தின் புலனாய்வுச் சதிகளுக்குள் சிக்கிப் போயுள்ளது.

இந்தநிலையில் எப்படி தமிழருக்கென நீதியான வாழ்வை நாம் எதிர்பார்க்க முடியும்?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

முள்ளிவாய்க்காலில் தமிழரைச் சீரழித்து, சின்னா பின்னமாக்கியவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்காமல் விடப் போவதில்லை.

இப்போதே பலரும் அதற்கான தண்டனையையும்- வலியையும் சுமக்கத் தொடங்கி விட்டனர்.

இது இன்னமும் நீளப் போகிறது.

தமிழருக்கு எதிராக தொடரப்பட்ட போரும், அதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கும் காரணமாக இருந்தவர்களை நீதி ஒரு போதும் தண்டிக்காமல் விடாது.

அந்த நம்பிக்கை ஒன்று தான் தமிழரை அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கிறது.

ஆனாலும் அது வெளிச்சத்தை நோக்கிய பயணமாக அமையுமா அல்லது இருளைத் தேடிய பயணமாக அமையுமா என்பதை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

கட்டுரையாளர் தொல்காப்பியன் இன்போதமிழ் குழுமம்

info@infotamil.ch

2009 இல்

வீரச் சாவடைந்த, படுகொலை செய்யப்பட்ட எம்மினத்தவர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.