Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விவகாரத்தில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாடு

திங்கட்கிழமை, 23 மே 2011 10:17

இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் விடயங்களைக் கையாள்வதில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீக்கன்ட் லீடர் இணையத்தளத்தில் போல் நியூமன் என்பவர் இந்த விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது;

இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதில் முதலாவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தயக்கம் காட்டியிருந்தார். அதன் பின்னர் 2011 மார்ச் 31 ல் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஏப்ரல் 18 வரை பான் கீ மூன் அதனை பகிரங்கப்படுத்தவில்லை. இந்த நடவடிக்கையின் பின்னால் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜே நம்பியார் இருந்ததாக அனுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தேர்தல்களின் பின்னர் அறிக்கையை வெளியிடுவதற்கான முன்னகர்வின் பின்னணியில் விஜே நம்பியார் இருந்ததாக அனுமானிக்கப்படுகிறது. ஏப்ரல் 13 ல் தமிழகத் தேர்தல் இடம்பெற்றது. காங்கிரஸையும் தி.மு.க.வையும் அசௌகரியமான நிலையிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த விடயம் இடம்பெற்றதாக ஊகிக்கப்படுகிறது.

2010 ஜூனில் இந்த நிபுணர் குழுவை பான் கீ மூன் அமைத்திருந்தார். போர்க்குற்றங்கள் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றம் சமாதானத்திற்கு எதிரான குற்றம் தொடர்பாக 2010 ஜனவரியில் டப்ளினில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை மீது குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் 2010 மார்ச்சில் அந்த அறிக்கையை சர்வதேச நெருக்கடிக் குழு வெளியிட்டிருந்தது. அந்நிலையிலேயே 2010 ஜூனில் நிபுணர் குழுவை பான் கீ மூன் நியமித்திருந்தார்.

ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு செல்வதற்கு இலங்கை அனுமதியளிக்க மறுத்தபோது பான் கீ மூனும் சர்வதேச சமூகமும் மௌனம் காத்தனர். ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் பான் கீ மூன் அமைதியாகவே இருந்தார். ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் நிவாரண விநியோக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளானதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை கூறுகின்றது. ஆனால், இந்த விடயம் குறித்து இலங்கையை எச்சரிப்பதற்கு ஐ.நா. எதனையும் செய்திருக்கவில்லை.

போர் வலயங்களில் தொடர்ந்தும் சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ஐ.நா. முகவர் அமைப்புகளும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்ற வலியுறுத்தல் தொடர்பாக எந்தவொரு அழுத்தத்தையும் இலங்கைக்கு விடுத்திருக்கவில்லை. அவ்வாறு செயற்பட்டிருந்தால் மனித பேரவலத்தை தவிர்த்திருக்க முடியும். வன்னியில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இன்றும் கூட ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

2008 செம்டெம்பரில் மோதல் வலயத்திற்குள் 4,20000 பொதுமக்கள் இருந்ததாக ஐ.நா. உலக உணவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு இலட்சம் பேர் மட்டுமே இருந்ததாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன் விளைவாக ஐ.நா. உலக உணவுத் திட்டமானது பொதுமக்களுக்கான உணவில் 1/4 பங்கையே வழங்கக்கூடியதாக இருந்தது. மே 13 ல் மோதல் வலயத்திற்குள் ஒரு இலட்சம் பொதுமக்கள் இருந்ததாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசாங்கம் பத்தாயிரமே இருந்ததாக கூறியது. யுத்த வெற்றியின் பின்னர் 282000 பொதுமக்கள் மெனிக் பாம் முகாம்களுக்குள் சென்றனர். மீதிப்பேருக்கு என்ன நடந்தது என்பதற்கு ஐ.நா. பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளது.

ஐ.நா. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு தன்னால் கட்டாயப்படுத்த முடியாதென பான் கீ மூன் உறுதியாகக் கூறுகின்றார். ஐ.நா. வின் முறைமையில் ஏற்பட்ட தோல்விகளை வெளிப்படுத்துவது நிபுணர் குழுவின் பிரதான நோக்கம் அல்ல. ஆனால், தமிழர்களுக்கு எதிரான தவறான நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யப்படவேண்டுமென்பதே நிபுணர் குழுவின் பரிந்துரையாகும்.

யுத்தம் முடிவடைந்து விட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகால ஒழுங்கு விதிகள் இப்போதும் அமுலில் உள்ளன. இலங்கைத் தமிழர் விவகாரமானது தமிழர்களுக்கான பிரச்சினையாக மட்டும் அமைந்துள்ளதா அல்லது மனிதத்துவத்திற்கான பிரச்சினையாக இது இல்லையா? தனது மனச்சாட்சியை தேடுவதற்கு பான் கீ மூன் அதிகளவுக்கு செயற்பட வேண்டியுள்ளது.

source:uyarvu.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.