Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபத்தான சூழலானாலும் புனைபெயரிலாவது உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்- சிறிதரன் எம்.பி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான சூழலானாலும் புனைபெயரிலாவது உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்- சிறிதரன் எம்.பி!

Published on May 24, 2011-10:24 am · No Comments

எமது இனம் எதிர்கொண்ட எல்லாவற்றையும் பதிவாக்குவதன் ஊடாக அறுந்து போகாத வரலாற்றின் தொடர்ச்சியை எமது எதிர்கால சமுகத்திற்கு வழங்கவேண்டும். படைப்புக்களை உருவாக்குவதற்கும் உண்மைகளை உரைப்பதற்கும் ஆபத்தான சூழல் இங்கு நிலவுகின்றபோதும் படைப்பாளிகள் தமது படைப்பியல் சாதுரியத்தால் புனைபெயர்களிலாவது உண்மைகளை படைத்து புலம்பெயர் தேசங்களிலாவது அவற்றை பாதுகாப்பது எமது காலப்பண என தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியைசேர்ந்தவரும் தூயதமிழ் பற்றாளருமான நாவை. மகேந்திரராஜர (குமரிவேந்தன்) எழுதிய ‘பெய்யெனப்பெய்யும்மழை’ மற்றும் ‘ஒருங்கிருத்தல்’(யோகாசனம்) ஆகிய நூல்கள் வவுனியா சுத்தானந்தா கலாச்சார மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

கொழும்பு றோயல் கல்லூரி தமிழ்ப்பிரிவின் முதல்வர் மாட்டின் கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நெடுந்தீவு மகேஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். வெளியீட்டு உரைகளை பேராசிரியர் சிவலிங்கராசா தமிழருவி சிவகுமாரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

நயப்புரைகளை இதழியல் கல்லூரி விரிவுரையாளர் தேவகௌரி சுரேந்திரன் கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் முனைவர் திருநாவுக்கரசு ஆகியோர் நிகழ்த்தினர். சிறப்புரையை கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் த.குருகுலராஜா நிகழ்த்தினார்.

நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டதை தொடர்ந்து நூலாசிரியருக்கும் அவரது வாழ்க்கை துணைவிக்கும் பொன்னாடை போர்த்தி மாட்டின் கணபதிப்பிள்ளை தம்பதியினர் மதிப்பளித்தனர். ஏராளமான படைப்பாளர்களும் ஆர்வலர்களும் மண்டபத்தை நிறைத்திருக்க நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்துரை நிகழ்த்தினார்.

உயிர்ப்பும் உண்மையும் கொண்ட யதார்த்தமான படைப்புக்களை அச்சேற்றுவதே எமது காலப்பணியாகும் என அவர் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.

நெடுந்தீவு மண் தமிழ் மொழியுடனும் பண்பாட்டுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கின்றது. தனிநாயக மரபு என்பது அதன் பெருமைக்கு காரணமாக இருக்கின்றது. அதன் பின்னணியில் பல நல்ல படைப்புகளும் படைப்பாளிகளும் வெளிவருவதற்கு அந்த மண் காரணமாக இருந்திருக்கின்றது. நூலாசிரியர் குமரி வேந்தன் எனப்படுகின்ற மகேந்திரராஜா அவர்களும் அந்த மண்ணுடன் தொடர்புள்ளவர். இவர் வாழ்கின்ற எமது கிளிநொச்சி பிரதேசத்தின் வாழ்வு நிலையையும் வாழ்நிலையில் உணரப்படுகின்ற முறண்களையும் முழுமையாக அனுபவித்து இந்த நூல்களை படைத்திருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

உண்மையில் கடந்த காலங்களில் உள்ளதை உள்ளபடி சொல்கின்ற பல நல்ல படைப்புக்கள் எமது மண்ணில் இருந்து வந்திருக்கின்றன. இருப்பினும் இன்றய சூழலில் எமது இனத்தின் சார்பில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதும், காலத்தால் அழிந்து போக முடியாததுமான இலக்கியங்களை படைப்பதும் பாதுகாப்பதும் அவசியமாகின்றது. இத்தகைய முயற்சிகளில் துறைசார்ந்தவர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென சிறிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

எமது இனம் எதிர்கொண்ட எல்லாவற்றையும் பதிவாக்குவதன் ஊடாக அறுந்து போகாத வரலாற்றின் தொடர்ச்சியை எமது எதிர்கால சமுகத்திற்கு வழங்கவேண்டும். படைப்புக்களை உருவாக்குவதற்கும் உண்மைகளை உரைப்பதற்கும் ஆபத்தான சூழல் இங்கு நிலவுகின்ற போதும் படைப்பாளிகள் தமது படைப்பியல் சாதுரியத்தால் புனைபெயர்களிலாவது உண்மைகளை படைத்து புலம்பெயர் தேசங்களிலாவது அவற்றை பாதுகாப்பது எமது காலப்பணியென குறிப்பிட்ட அவர், குமரிவேந்தன் தமிழர்வாழ்வியலை அதன் பண்பாடு சிதையாத வகையில் புதியனவற்றை சிந்தித்து படைத்துள்ள இம்முயற்சி பாராட்டுக்குரியது, இத்தகைய முயற்சிகள் எதிர்காலத்தில் விரிவடைந்து எமது இனத்தின் இருப்பை நிலை நிறுத்துவனவாக பரிணமிக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன் என சிறிதரன் தெரிவித்தார்.

source:thinakkathir.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.