Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாம் ஈழ யுத்தத்தில் கோதபாய 62கோடி ரூபா மோசடி – லங்காநியூஸ்வெப் ஆங்கில ஊடகம் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on May 27, 2011-7:20 am · No Comments

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச செய்துள்ளதாக தற்போது தெரியவந்திருக்கும் 62 கோடி ரூபா மோசடி மூன்றாம் ஈழ யுத்தத்தில் நடந்த பாரியளவிலான நிதி மோசடி என மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி லங்காநியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது. இது இலங்கை இராணுவ வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மோசடி என வர்ணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் மோசடியானது 80 மில்லிமீற்றர் எறிகணைத் தொகையை ஏற்றிய கப்பல் ஒன்றுக்கு 100 கோடி ரூபா செலுத்தி சிம்பாப்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட போது விடுதலைப் புலிகள் அந்தக் கப்பலைக் கடத்துவதற்கான சூழ்ச்சியை உள்ளிருந்து செய்த மோசடியே மிகப் பெரிய மோசடியாகும்.

இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பு கூறவேண்டியவர் என்பது தெரியவந்தது. இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தலுவத்தவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தேசிய மாணிக்கக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமித்தார்.

இதனைத் தவிர இரண்டாவது பாரிய மோசடியானது பிரித்தானியாவிடமிருந்து சீ 130 ரகத்தைச் சேர்ந்த மூன்று விமானங்களைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியுடன் நிதியைப் பெற்று அந்தப் பணத்தில் இரண்டு விமானங்களை மாத்திரம் கொள்வனவு செய்த மோசடியாகும்.

இதன்போது 90 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டதாக கணிக்கிடப்பட்டிருந்தது. இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ல் ஜயலத் வீரக்கொடியை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக தற்போதைய ஜனாதிபதி நியமித்தார் .

அதேவேளை, இலங்கை கடற்படையின் டோரா தாக்குதல் படகிற்காக 30 மில்லிமீற்றர் ஆயுதக் கட்டமைப்பொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் 76 கோடி மோசடி செய்யப்பட்டது இதுகுறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் தயா சந்தகிரியை குற்றவாளியெனப் பெயரிட்டது. எனினும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சந்தகிரியை இலங்கை பொசுபேட் நிறுவனத்தின் தலைவராக மகிந்த ராசபக்ச நியமித்தார்.

இந்த நிலையில், வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேக்கா வழங்கிவரும் சாட்சியங்களின் போது கோதாபய ராஜபக்சேவின் மேலும் பல மோசடிகள் குறித்த தகவல்கள் வெளிவரவிருப்பதாகவும், இந்தத் தகவல்கள் வெளிவந்தால் முப்படைத் தளபதிகளையும் மீறிச் சென்று போர் மூலம் பெருந்தொகை பணத்தை சம்பாதித்தவர் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே வரலாற்றில் இடம்பெறக் கூடும் என லங்காநியூஸ் வெப் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

source:thinakkathir.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.