Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் மக்களை ஏமாற்றும் களத்தில் த.தே.கூ. - டக்லஸ்...! தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை த.தே.கூ.வினரே இழுத்துச் சென்றனர்- டக்லஸ்..! மலத்தில் புரளும் பன்றியின் இரைச்சலா..? ஈழதேசம்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மக்களை ஏமாற்றும் களத்தில் த.தே.கூ. - டக்லஸ்...! தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை த.தே.கூ.வினரே இழுத்துச் சென்றனர்- டக்லஸ்..! மலத்தில் புரளும் பன்றியின் இரைச்சலா..? ஈழதேசம்...!

தமிழ் மக்கள் ஓரணியில் நின்று ஒற்றுமையின் பலத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று கூறியே, காலம் காலமாகப் பெற்று வந்த அரசியல் பலத்தை வைத்து, சுயலாப அரசியல் தலைமைகள் இதுவரை எதைச் சாதித்திருக்கின்றார்கள்..? என்ற கேள்வியோடு மற்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறார் டக்லஸ். தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பெற்றிருந்த த.தே.கூ.வினர் அழிவுகளுக்காக அன்றி ஆக்கத்தை நோக்கி பயன்படுத்தவில்லையே..? என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் மற்றும் இலங்கை அமைச்சருமான தேவானந்தா த.தே.கூ.வினரைப் பார்த்து பகிரங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற கேள்விகளை டக்லஸ் கேட்பது ஒன்றும் புதிதல்ல, கடந்த இரண்டு முறை நடைபெற்ற தேர்தல்களிலும் கேட்டிருக்கிறார். எல்லாம் வயித்துக் கடுப்புதான். என்னடா இது..! இந்த பஞ்சை பராரிகளான தமிழ் மக்கள் திரும்ப திரும்ப த.தே.கூ.வினருக்கே வாக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றனர். சென்ற முறை நடைபெற்ற தேர்தலில் தமிழர் பகுதிகளில் ஓட்டுக்களை பிரித்து விடலாம் என்று கருதி முனைப்புடன் வேலை செய்தார்கள் கருணா முதல் இருக்கும் அணைத்து மகிந்தாவின் தமிழ் கைக்கூலிகள்.

அந்த முறையும் தமிழர்கள் வாக்குகள் பிரியவில்லை. பார்த்தார் கோத்தபாயா இந்த சவுண்டிகளை ஏன் இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவிற்கு சொன்னார். ஆனால் கருணா பிள்ளையான், டக்லஸ் போன்றவர்கள் எல்லாம் மகிந்தாவின் காலைப் பிடித்து, கதறி அழுது, தங்கள் கண்ணீர் மூலம் மகிந்தாவின் கால்களை கழுவி விட்டனர். சரி போய் தொலைகிறார்கள் இந்த எச்சிக்கல நாய்கள் என்று விட்டுவிட்டார். இந்த முறை மாகான சபை தேர்தல், என்ன மாதிரியான சத்தியம் செய்துவிட்டு வந்து இருக்கிறார்களோ..? மகிந்தாவிடம் கோத்தபாயாவிடம் என்று தெரியவில்லை. ஒருவேளை இப்படி சொல்லி இருப்பார்கள். மிஸ்டர் ஹைநஸ் மகிந்தா அண்ட் கோத்தா, இந்த முறை பாருங்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து த.தே.கூ.வினரை படுதோல்வி அடைய வைக்கிறோமோ இல்லையா என்று.

தமிழ் மக்கள் ஒற்றுமை என்பது அவசியமானது, ஆனாலும் அதை தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை அபகரிப்பதற்கான வெற்றுக் கோசமாக பயன்படுத்துவதையே நான் வெறுக்கிறேன் என்றார். தேர்தல் காலம் தவிர்த்து வேறு எந்த காலங்களில் ஒற்றுமையை காண்பிக்க வேண்டும்...? டக்லஸ் சொல்வதைப் பார்த்தால் மகிந்தா ராஜபக்சே அரசு தொடங்கி சந்திரிகா அரசு வரை தமிழர்களின் அரசியல் உரிமையை த.தே.கூ.வினர் தான் தடுத்து வந்தனர் என்றல்லவா புரிகிறது.

இவர்களால் நரம்புகள் முறுக்கேற்றப்பட்டு உசுப்பிவிடப்பட்ட இளைஞர் யுவதிகளும் அப்பாவி மக்களும் நடுத்தெருவில் நின்றபோது, இவர்கள் மட்டும் தமிழ் நாட்டிற்கு ஓடிச் சென்று தனி வீடுகள் பெற்று தமது குடும்பங்களோடு ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர் என்கிறார் டக்லஸ். விடுதலையும் சுதந்திரமும் மட்டுமே நரம்புகளையும் தோள்களையும் முறுக்கேற்றும் என்பது உலக வரலாறுதானே. அடிமைகளுக்கு இவை கிடையாது. அடிமைகளுக்கு கூன்முதுகும் கூழை குப்பிடும் தான் ஒரே சொத்து. த.தே.கூ.வினர் தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்றால் அங்கேயே யுத்தத்தை காரணம் காட்டி த.தே.கூ.வினர் அனைவரையும் போட்டுத் தள்ளியிருக்க மாட்டீர்கள்..?

2004 ல் தாம் பெற்றிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பலத்தை வைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது மக்களை அழிவுகளில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். எமது அரசியலுரிமை பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அல்லது இவர்கள் கூறுவது போல், அந்த பலத்தை வைத்து சர்வதேச சமூகத்தின் ஊடாக அன்றே எமது மக்களின் தலைவிதியை மாற்றியமைத்திருக்கலாம் என்கிறார்.

வரிக்கு வரி பதில் சொல்லும் அவசியமில்லைதான் டக்ளசுக்கு என்றாலும், யாரும் பதில் சொல்லவில்லை என்று கூறிவிடக் கூடாது என்பதற்காக அவரின் ஸ்டைலிலேயே இந்த பதில். எமது மக்களின் அழிவுகளில் இருந்து என்று முள்ளி வாய்க்காலின் சம்பவத்தை சொல்லுகிறாரா..? போகட்டும் நடந்தவைகள் எல்லாம், தற்பொழுது தான் விடுதலைப் புலிகள் இல்லையே, முள்வேலி முகாம் மற்றும் ரகசிய முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கலாமே, மகிந்தாவிடம் சொல்லி, அதற்கு கூட நேரமில்லாமல் யாருடைய கேசத்தை பிடுங்கிக் கொண்டிருந்தீர்கள்..?

சர்வதேச சமூகத்தின் ஊடாக எமது மக்களின் தலைவிதியை மாற்றி அமைத்திருக்கலாம் என்கிறார் எப்பொழுது 2004 ல், பிறகு எதற்கு எரிக் சொல்ஹைம் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் வந்து தேசியத் தலைவரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள், ஏதுவும் வேலை வெட்டி இல்லாமலா..? சர்வதேச சமூகம் ரெடியாக கையில் வைத்துக் கொண்டு இருந்தார்களா தமிழ் ஈழத்தை..? எப்படி இப்படிப்பட்ட பதர்களையெல்லாம் இன்னும் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ராஜ்பக்செக்கள்...?

தாம் பெற்ற பாராளுமன்ற பலத்தை தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரையிட்டுச்சென்று அழிவுகளையும் அவலங்களையும் மட்டுமே, அவர்கள் மீது சுமத்துவதற்கு பிரதான காரணியாக, த.தே.கூ.வினரே இருந்தனர் என்கிறார். த.தே.கூ. அமைப்பினர் யுத்த நிறுத்தம் வேண்டித்தானே உலகம் முழுதும் சுற்றினார்கள், இந்தியாவிற்கு நூறு தடவை வந்தார்களே, அனைவரையும் பார்த்து நடக்க இருக்கும் மனித அவலங்களை தடுத்து நிறுத்துங்கள் என்று கதறினார்களே,

உண்மை இவ்வாறு இருக்க, த.தே.கூ அமைப்பினர் எங்கே முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் நிறுத்தினார்கள்..மக்களை.? சரி நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் மகிந்தா அரசில்..? வேடிக்கை பார்த்து, கைகொட்டி சிரித்து, தினசரி விருந்து உண்டு, மகிந்தாவின் பிட்டத்தை சொறிந்து விடவில்லை...? அப்பொழுதெல்லாம் தோன்றாத எம் மக்கள் சிந்தனை, தற்பொழுது வாக்கு பிச்சை எடுக்கும் பொழுது தோன்றுகிறதா..? இந்த முறை தமிழ் மக்களின் வாக்குகளை இந்த பன்றிக் கூட்டம் பெறவில்லை என்றால், நமல் ராஜபக்சே முதற்கொண்டு காலனியை கழட்டி அடிக்க மாட்டாரா டக்லஸ் முகத்தில். எனவே, திடீர் கரிசனம் வருகிறது இந்த டக்லஸ்- க்கு, தேர்தல் முடிந்தவுடன் பெண்டு பிள்ளைகள், கூத்தியால்கள் மது மங்கை என்று களியாட்டம் போடப் போய் விடுவார்கள்.

எனவே, இதுவரை கால வரலாற்றில் த.தே.கூ வினருக்கும், அவர்கள் சார்ந்த கட்சிகளும், தமிழ் மக்கள் தமது வாக்குப்பலத்தை வழங்கியதால் ஏமாந்து போனவர்களாக மட்டுமின்றி, தாம் அழிந்து போன வரலாறுகளையே கண்டிருக்கின்றார்கள். இதை தமிழ் மக்கள் உணரத் தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் அபகரிக்கும் கபட நோக்கத்தில் ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு காட்டுங்கள் என்று, த.தே.கூ.வினர் தமிழ் மக்களை இன்னொரு தடவை ஏமாற்ற எத்தனித்து வருகின்றனர் என்கிறார் டக்லஸ்.

த.தே.கூ.வினருடன் ஏன் மகிந்தா அரசு எட்டாவது தடவை பேச்சு வார்த்தை நடத்துகிறது..? இலங்கையின் எதிர்க்கட்சியினர் ஏன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர் மகிந்தாவுக்கு. த.தே.கூ.வினருடன் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் என்று. டக்லஸ் என்ன செய்திருக்க வேண்டும் நியாயமாக, மகிந்தாவின் இருக்கைக்குச் சென்று யாரைக் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்..? த.தே.கூ.வினர் அவர்கள் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசி வருகிறேன், இப்பொழுது போய் இவர்களுடன் பேசினால் என்ன அர்த்தம்..? என்று கேட்பது தானே நியாயம்..!

தவறான அரசியல் தலைமைகளுக்கு வாக்களித்து அன்றாட அவலங்களுக்கான தீர்வும் இன்றி, அபிவிருத்தியும் இன்றி, அரசியல் தீர்வும் இன்றி ஏமாற்றப்பட்டவர்களாக அல்லாமல் அக்க பூர்வமான இணக்க அரசியல் வழிமுறையின் பக்கம் அணிதிரள்வதே சிறந்த வழிமுறையாகும் என்று இப்போது சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள் தமிழ் மக்கள் என்று கூறுகிறார் டக்லஸ்.

அதென்ன டக்லஸ்..! ஆக்கப்பூர்வமான இணக்க அரசியல்...? இப்படி ஒரு அரசியல் வார்த்தைகளை யாரும் கண்டதுண்டா..?

கேட்டதுண்டா..? இதைதான் சொல்லுவது, மொள்ளமாறிகள் வகுப்பு எடுக்கக்கூடாது ஒழுக்கத்தைப் பற்றி என்று, ஜேப்படிக்காரன் பாடம் நடத்தக் கூடாது களவாமை பற்றி, ஆனாலும் இவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கறார்கள், மக்களுக்கு த.தே.கூ.வினரால் எந்த பயனும் இல்லை என்று. எனவே வாக்களிக்காதீர்கள் என்கிறார் டக்லஸ். மகிந்தாவுக்கு வாக்கு அளியுங்கள், " ஆக்கப்பூர்வ இணக்க அரசியலுக்கு " வாருங்கள் என்கிறார்கள் மகிந்தாவின் அழுகிய தொங்கு தசைகள்.

சங்கிலிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.