Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவை எதிர்பார்த்தளவு வெற்றியைத் தரவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவை எதிர்பார்த்தளவு வெற்றியைத் தரவில்லை

[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 08:14 GMT ] [ நித்தியபாரதி ]

பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவையானது எதிர்பார்த்தளவு வெற்றியைத் தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

1044 பயணிகளை ஏற்றிச் செல்லும் கொள்திறனைக் கொண்ட 'ஸ்கொற்றியா பிறின்ஸ்' என்ற பயணிகள் கப்பல் கடந்த யூன் 13ம் திகதியிலிருந்து தனது சேவையை தொடங்கியது.

ஆனால், வாரத்தில் இரு தடவைகள் பயணத்தை மேற்கொள்ளும் இக்கப்பல் தனது பயணத்தின் போது ஒவ்வொரு தடவையும் 150 பிரயாணிகளைக் காவிச் செல்வதில் கூட மிகவும் சிரமப்படுகின்றது.

இக்கப்பல் சேவையானது தனது ஒட்டுமொத்த கொள்திறனில் 15 சதவீதத்தை மட்டுமே நிரப்புவதனால் இதனைத் தொடர்ந்தும் நடாத்துவதில் எந்தவொரு சாத்தியப்பாடுகளும் இல்லை என தூத்துக்குடித் துறைமுகத்தில் கடமையாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், இக்கப்பல் சேவையை இயக்குபவர் இது தொடர்பாக மிகவும் தன்னம்பிக்கையுடன் உள்ளார்.

'இக்கப்பல் சேவையில் பயணிப்பவர்களில் 60 வீதமானவர்கள் வர்த்தகர்களாவர். இவர்கள் பெரும்பாலும் புடைவைகள், மற்றும் ஏனைய வர்த்தகப் பொருட்களைத் தம்முடன் கொண்டு வருகிறார்கள். நாங்கள் மெது மெதுவாக எமது எதிர்பார்ப்பை அடைந்து வருகிறோம். தற்போது இக்கப்பல் சேவை தொடர்பான வர்த்தக வாய்ப்புநிலை பற்றிய கருத்தைத் தெரிவிப்பதென்பது மிகவும் கடினமானதாகும். ஏனெனில் நாம் தற்போது தான் இதனை ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பாகக் கூறுவதற்குக் காலம் உள்ளது' என இது தொடர்பாகப் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவிற்கு வந்ததையடுத்து, இந்தியாவிற்கான கப்பற் பயண சேவையை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டது.

இது தொடர்பான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்காக இந்திய மத்திய அரசுப் பிரதிநிதிகள், கப்பற்துறை அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று கொழும்பிற்குச் சென்றனர்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறானதொரு கப்பற் பயணிகள் சேவையானது மிகவும் தேவைப்பாடுடைய ஒன்றாகும் என ஐ.நா ஆய்வறிக்கை ஒன்றில் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் கட்டமாக இராமேஸ்வரம்-தலைமன்னார் கப்பற்சேவை ஒன்றை ஆரம்பிப்பதென இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110723104341

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.