Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாவட்டத்தில் 40 சதவீதத்திற்கும் மேலதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் 40 சதவீதத்திற்கும் மேலதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது :

23 ஜூலை 2011

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

யாழ் மாவட்டத்திற்கான தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 40 சதவீதத்திற்கும் மேலதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக யாழ் செயலகத்தினால் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமளவில் அசம்;பாவிதங்கள்கள் இடம்பெறாவிட்டாலும் சிறு சிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காரைநகர்ப்பகுதியில் உள்ள ஒரு வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்களிக்க முற்பட்ட ஒரு குழுவினரை காவற்துறையினர் நுழைய விடாதபடி தடுத்துள்ளனர். காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலத்தில் வாக்களிப்பு மையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை அத்துமீறி வாக்களிக்க முற்பட்ட பொதுமகன் ஒருவரை ஐக்கிய தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பாதணியால் தாக்க முற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சியப் பகுதியில் காலை வேளையில் வாக்களிப்பு மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்றதாகவும் எனினும் மதியத்தின் பின்னர் ஓரளவு வேகமாக வாக்களிப்புகள் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கரவலாக எதிர்பாhத்ததிலும் பார்க்க இம்முறை வாக்களிப்பு வீதம் ஓரளவு அதிகரித்துக் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சம் காரணமாக வாக்காளர்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து வாக்களிக்க அச்சமடைந்து காணப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

தீவகப் பகுதியில் வாக்களிப்பு மையங்களுக்கு இருகே மதுபானப் பேத்தல்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் வாகனங்களில் வைத்திருந்து மதுபானப் போத்தல் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் உள்ளே சென்ற அரச சார்பான வேட்பாளர்கள் மாதிரி வாக்களிப்பு படிவங்களையும் கையளித்து தமக்கு எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக விளக்கமளித்ததாகவும்; வெற்றிலைச் சின்னம் பொறித்த சிறு துண்டுப்பிரசுரங்களை விந்யோகித்ததாகவும் இது தொடர்பில் காவற்துறையினர் கண்டு கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணுக்காயில் அமைதியான வாக்கெடுப்பு :

மதியம் ஒரு மணி நிலவரப்படி மல்லாவி 46.5வீதம், யோகபுரம் 47.5வீதம், புத்துவெட்டுவான் 54.32வீதம், உயிரங்குளம் 52.35வீதம், துணுக்காய் 46.34வீதம், அம்பலப்பெருமாள் குளம் 51.86வீதமும் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றதாகவும் இதுவரை எவ்வித அசம்பாவிதமும் இன்றி வாக்கெடுப்பு அமைதியாக நடைபெறுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64539/language/ta-IN/article.aspx

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.