Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியை அடுத்து; யாழ். உயர் அதிகாரிகளை இலக்கு வைக்கிறது அரசு; சிலர் வீட்டுக்கு; பலருக்கு இடமாற்றங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியை அடுத்து; யாழ். உயர் அதிகாரிகளை இலக்கு வைக்கிறது அரசு; சிலர் வீட்டுக்கு; பலருக்கு இடமாற்றங்கள்

Thursday, July 28, 2011, 9:38

சிறீலங்கா

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கில் அரசு பெரும் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து வடக்கில் உள்ள அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளின் பதவிகளில் விரைவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. முதல் நடவடிக்கையாக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ஆளுநரால் பணிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாகப் பணியாற்றுபவர்கள் உட்பட மீள் நியமனம் பெற்றுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகளையும் கூட உடனடியாகப் பணி நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் அரசு வெற்றி பெறுவதற்குத் தமிழ் அதிகாரிகள் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதனாலேயே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள் என்ற தகவல் விஷக் காய்ச்சல் போன்று அதிகாரிகள் மத்தியில் நேற்றுத் திடீரெனப் பரவியிருந்தது.

என்னைக் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டார் என்று மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இளங்கோவன் வாய்மொழி மூலம் எனக்கு அறிவித்தார். அதனை அடுத்து இன்று (27/7) முதல் நான் பணிக்குச் செல்வதை நிறுத்தி விட்டேன்” என்று தெரிவித்தார் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன்.

யாழ். மாவட்டத்தில் உள்ள வேறு சில அதிகாரிகளும் இவ்வாறு கட்டாய விடுமுறையில் அனுப்பப்படவுள்ளனர் என்றும் பலருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட உள்ளன என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, வடமாகாண சபையில் மீள்நியமனம் பெற்றுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட உயர் அதிகாரிகளை உடனடியாகப் பணியில் இருந்து விலக்கு வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

“அவ்வாறான ஒரு ஆலோசனை இருக்கலாம். ஆனால் அது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எதிர்வரும் நாள்களில் அது பற்றிக் கலந் துரையாடப்பட உள்ளது” என்று உதயனுக்குத் தெரிவித்தார் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி. மீள்நியமனத்தில் இருப்பவர்கள் வீட் டுக்கு அனுப்பப்படும் போது அவர் உட்பட 65இற்கும் அதிகமான அதிகாரிகளுக்கு அந்த நிலை ஏற்படும் என்று மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன. வட மாகாண சபையில் கல்வி, சுகாதாரம், கால்நடை, நிர்வாகம், புனர்வாழ்வு, பொதுச்சேவை மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களில் மீள்நியமன அதிகாரிகளே உயர் பதவிகளை வகிக்கிறார்கள்.

மீள்நியமன அதிகாரிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் பதவியில் இருந்து விலகுவர் என்று நம்பகமாகத் தெரிகிறது. இதனையொட்டி கொழும்பில் ஆளுநரால் இவர்களுக்கு நேற்று விருந்துபசாரம் வழங்கப்பட்டதாகவும் தகவல் ஒன்று தெரிவித்தது. அதனை உறுதிப்படுத்த ஆளுநரிடம் முயன்ற போதும் முடியவில்லை. மாகாண சபைகளுக்குள் இடமாற்றம் பெறும் அதிகாரிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தமது பொறுப்புக்களை ஏற்பார்கள் என்றும் தெரிகிறது.

http://www.tamilthai.com/?p=22798

பொங்கலில் இதைப்பார்த்த மோடய தப்பு கணக்கு போட்டுவிட்டான்

http://www.dailymotion.com/video/xgmxgl_mahinda-rajapaksa-in-jaffna-2011_shortfilms

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.