Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபிவிருத்தியை விட அரசியல் தீர்வு ஏன் அவசியம்?

Featured Replies

சிங்கள அரசு சர்வதேசத்தினை ஏமாற்றுவது போல உள் நாட்டில் தமிழர்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு தேர்தல் முடிவுகள் சாட்சி. போர் முடிந்துவிட்டதாகவும் தமிழர்க்கு இனி தேவை அபிவிருத்தியே என அனைத்துலகத்தை ஏமாற்றி பெருவாரியான நிதிகளை பெற்று தென் பகுதியினை அபிவிருத்தி செய்கின்றது. மாறாக தமிழர் பிரதேசங்களில் பணம் உறிஞ்சும் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றது.

.

போரில் சிக்குண்டு, நிர்க்கதியான மக்களுக்கு எதனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மஹிந்தா சிந்தனை மக்களால் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுவருகின்றது.

.

அபிவிருத்தி என்ற பெயரில் என்ன நடக்கும், எப்படி தமது உரிமைகள் பறிக்கப்படும், எவ்வாறு தமது நிலங்கள் கபளீகரம் செய்யப்படும் என்பதனை கடந்த 60 வருடங்களாக மக்கள் கண்டு பழக்கபட்டவர்கள். ஆனால் வெளி நாட்டு இராஜ தந்திரிகளுக்கு அவை புரியாதனவாக இருக்கலாம்.

.

போர் முடிந்து இரு வருடங்கள் ஆகியும் மக்கள் இன்னமும் முழுதாக தமது இடங்களுக்கு செல்லவில்லை. 180, 000 மக்கள் வடபகுதியில் குடியேற்றப்படவேண்டியவர்களாக இன்னமும் உள்ளனர். இவர்கள் உள் நாட்டிலும் இந்தியாவிலும் வாழ்கின்றார்கள். இந்த மீழ் குடியேற்றத்திற்கு தடையாக இருப்பது என்ன?

.

அரசாங்கம் கூறுவது போல கண்ணிவெடிப்பிரச்சினை அல்ல மாறாக

1. வடபகுதியில் 150 நிரந்தர சிங்கள படைமுகாம்கள் இருக்கின்றன. இந்த படைமுகாம்கள் பொதுமக்களின் காணிகளில் காணப்படுகின்றன.

2. அதுமட்டுமன்றி குடா நாட்டில் 15 உயர் பாதுகாப்பு வலையங்கள் இன்னமும் அமைந்துள்ளன.

3.பொதுக்காணிகள் மற்றும் பொதுசன பயன்பாட்டு நிலங்கள் சிங்களபப்டையினராலும் , சிங்கள வியாபாரிகளாலும் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கூறப்பட்டவை காரணமாக மக்கள் குடியேற முடியாது உள்ளது. அத்துடன் அரசியல் தீர்வு இல்லாமல். படைகளை விலக்கி கொள்ளாமல் அங்கு ஓர் சுமுகமான நிலை ஏ|ற்படும் என மக்கள் இப்போதும் நம்ப மறுக்கின்றனர்.

.

ஆனால் சிங்களம் இவை அனைத்தையும் வெளிக்காட்டாமல் மீழ் கட்டுமானம் என்றும் அபைவிருத்தி என்|றும் கொடிகாட்டுகின்றது. எல்லாமே சகஜமாக இருக்கின்றது என போலியான பிரச்சாரங்களை செய்து கொண்டு இருக்கின்றது.

.

இந்த வாரத்தில், சகஜ நிலை ஏற்பட்டுவிட்டது என்ற அரசின் பின்னணியில் வெளிவந்த அடுத்த செய்தி ( இடி) குடா நாட்டில் நாடாளுமன்ற இருக்கைகளை குறைப்பது என்ற செய்தி.

.

இந்த நடவடிக்கை ஒரு நியாயமற்ற நடவடிக்கை என மஹிந்த ஆதரவு கட்சிகளைத்தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தமை வேறு விடயம் ஏனென்றால் முழுமையான அரசியல் தீவு ஏற்பட்டு சுமுக நிலை ஏற்பட்டு, அனைத்துமக்களும் குடியேறிய பின்னரே மக்கள் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதே தமிழர்களின் கருத்து.

.

நாடாளுமன்ற இருக்கைகள் குறைப்பு தனித்து தேர்தல் பிரதினித்துவம் மட்டும் பாதிக்கப்படமாட்டாது. மாறாக அதன் பின்னால் பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.

.

எடுத்துக்காட்டாக அபிவிருத்திக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீடு, மூலதன ஒதுக்கீடு, உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் வெட்டுவிழும்.

.

ஆகவே நாட்டில் அமைதி ஏற்பட்டுவிட்டது இப்போ அபிவிருத்தியே முக்கியம் என்று சிங்களம் பிரச்சாரம் செய்வதற்கும் அதன் பின்னர் அவசர அவசரமாக மக்கள் பதிவு எடுத்தமைக்கும் என்ன காரணம் என்பதனை அனைத்துலகம் இப்போ புரிந்து கொள்ளவேண்டும்.

.

ஆனால் தமிழ் மக்கள் இதனை நன்கு புரிந்தே வைத்திருக்கின்றனர். அதனால்தான் அபிவிருத்தி என்ற மாயைக்குள் மூழ்காமல், அரசியல் தீர்விற்காக வாக்களித்துள்ளார்கள். பொதுமக்களின் இந்த ஜன நாயக தீர்ப்பை, விருப்பை அனைத்துலகம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியா பொதுமக்களின் முடிவிற்கு மதிப்பளித்து தீர்வு ஒன்றை நோக்கிய அழுத்தத்தினை மேற்கொள்ளவேண்டும்.

Eelanatham

ஆனால் தமிழ் மக்கள் இதனை நன்கு புரிந்தே வைத்திருக்கின்றனர். அதனால்தான் அபிவிருத்தி என்ற மாயைக்குள் மூழ்காமல், அரசியல் தீர்விற்காக வாக்களித்துள்ளார்கள். பொதுமக்களின் இந்த ஜன நாயக தீர்ப்பை, விருப்பை அனைத்துலகம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியா பொதுமக்களின் முடிவிற்கு மதிப்பளித்து தீர்வு ஒன்றை நோக்கிய அழுத்தத்தினை மேற்கொள்ளவேண்டும்.

'சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம்' என்பது போல அரசியல் தீர்வு இருந்தால் தான் உண்மையான அபிவிருத்தி செய்யலாம். தற்போது நடப்பது சுரண்டலும், இனவழிப்பும் - அபிவிருத்தி என்ற நற்பெயரில் அதை கவசமாக பாவித்து.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.