Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலமைப்பரிசிலுக்கு தோற்றும் படுவான்கரை 100 மாணவர்களுக்கான உதவிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மண்முனை , போரதீவு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 100புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டுக்கான மாதிரி வினாத்தாள்கள் பால்மா போன்றவை 31.07.2011 அன்று வழங்கப்பட்டுள்ளது.

இம்மாணவர்கள் முன்மாதிரி பரீட்சையில் 100புள்ளிகளுக்கு குறைவாக புள்ளிகள் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்தி பரீட்சையில் தேற்ற வைக்கும் முயற்சியில் ஊதியமற்று கற்பிக்கும் ஆசிரியர்களின் வேண்டுகைக்கு இணங்க நேசக்கரம் 60000ரூபா(அறுபதாயிரம் ரூபா) பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது.

மேலதிகமாக பல மாணவர்கள் உதவிகளை எதிர்பார்க்கின்றனர் எம்மால் முழுமையான உதவிகளை வழங்க முடியாத நிலமையில் இச்சிறு உதவியைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். உதவிகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மேலும் சாதாரணதரம் உயர்தரம் கற்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை உயர்த்த முடியும்.

இப்பிரதேசம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் வசதிகள் குறைந்த நிலமையே காணப்படுகிறது. புலம்பெயர் உறவுகளாகிய உங்கள் உதவிகள் இம்மாணவர்களின் கல்வியை உயர்த்துவதால் இழந்துபோன எதிர்காலத்தை மீளவும் புதுப்பித்துக் கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்குமென நம்புகிறோம்.

படங்கள் :-

12.jpg

32.jpg

உதவிகள் வழங்கப்பட்ட மாணவர்களின் கற்றல் உதவியை வழங்கும் ஆசிரியையொருவரின் கருத்தினை கீழ் வரும் இணைப்பில் கேளுங்கள்.

தற்கால மண்முனை , போரதீவு மாணவர்களின் நிலமைகள்.

இப்பிரதேசம் பற்றிய மேலதிக தகவல்கள் :-

போரால் பாதிக்கப்பட்ட படுவான்கரையின் இன்றைய கல்வி நிலமை.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவும் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல தடவைகள் மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பகுதியாகும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசங்களை 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர் இதனால் இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்து பல மாதங்களுக்குப் பின் மீண்டும் குடியேறினர்.

இப்பிரதேசத்தில் உள்ள மக்களில் அனேகமானோர் யுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன இதற்கான முக்கிய காரணம் கற்றலுக்கான வளங்கள் இங்கு குறைவாகக் காணப்படுவதும் மக்களின் வறுமை நிலையுமேயாகும்.

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 15500

மொத்தச் சனத்தொகை – 23988 (2007 ஆம் ஆண்டு)

கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 24

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 18000

மொத்தச் சனத்தொகை – 38282 (2007 ஆம் ஆண்டு)

கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 43

உதவவிரும்புவோர் தொடர்பு கொள்ள:-

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723

Fax: +49 (0)6781 70723

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Varathan%20ADE.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.