Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை மீறலுக்கு இந்தியா துணை போகலாமா? - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசித் தொகுதி எம்.பி. பொ.லிங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. பெயர்தான் மழைக்கால கூட்டத் தொடரே தவிர, காமன்வெல்த் ஊழலில் டெல்லி முதல்வர் பதவி விலகும் கோரிக்கை, பிரதமர் மீது ஊழல் புகார் என கூட்டத்தொடரில் அனல் தகிக்கிறது.

இதற்கிடையில், கடந்த வாரம் இலங்கை எம்.பி.க்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தனர். ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் என நாடாளுமன்றத்தில் பரபரப்பு பற்றியெரிந்த போதுகூட, புன்சிரிப்போடு உறுப்பினர்களை சாந்தப்படுத் திய சபாநாயகர் மீரா குமார், சிங்கள எம்.பி.க்களுக்கு எதிர்ப்பு என்றதும் கொந்தளித்துப் போனார். அவரது கடுகடுத்த முகம் அதுவரை நாடாளுமன்றம் காணாதது.

உச்சகட்டமாக, சிங்கள எம்.பி.க்களிடம் அவர் மன்னிப்பு வேறு கேட்க, கொதித்துப் போனார்கள் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். இதுபற்றி விரிவாகப் பேசினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசித் தொகுதி எம்.பி. பொ.லிங்கம்.

“ஆகஸ்ட் 1-ம் தேதி மழைக்கால கூட்டத் தொடரின் தொடக்க நாளில்தான் சிங்கள எம்.பி.க்கள் வருகை தந்தனர். சமீபத்தில் நமது சபாநாயகர் மீரா குமார் இலங்கைக்குச் சென்றிருந்த போது, அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ந்து போன அவர், சிங்கள எம்.பி.க்களை நமது நாடாளுமன்றத்திற்கு வருமாறு அழைப்பு வி டுத்திருந்தார். இதன் அடிப்படையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷே தலைமையில் பத்து எம்.பி.க்கள் இந்தியா வந்திருந்தனர்.

நாடாளுமன்ற அவையில், மீரா குமாரின் இருக்கைக்கு அருகில் பெட்டி வடிவில் அமைந்திருந்த இடத்தில் அவர்கள் அமர்ந்தனர். முன்னதாக, இறந்து போன எம்.பி.க்களுக்கு இரங்கல் கூட்டம் நடப்பதாக இருந்தது. எங்களுக்கோ வந்திருக்கும் விருந்தினர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம். அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, செம்மலை, சிவசாமி, சுகுமார், ஆனந்த், குமார், ம.தி.மு.க. கணேசமூர்த்தி ஆகியோரும் இருந்தனர். நாங்கள் விசாரித்தபோது, ‘வந்திருப்பவர் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தம்பி சமல் ராஜபக்ஷே’ என்ற தகவல் கிடைத்ததும், அதிர்ந்து போய் எழுந்து சத்தம் போட்டோம்.

இவர்கள் வருவதற்கு முன்பே நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ‘ராஜபக்ஷே அரசு மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. ராஜபக்ஷே போர்க் குற்றம் செய்தவர். அங்கு நடந்த இனப் படுகொலை பற்றி விவாதிக்க வேண்டும்’ என நோட்டீஸ் கொடுத்திருந்தோம்.

சிங்கள எம்.பி.க்கள் வருகைக்கு நாங்கள் கடுமையாக ஆட்சேபணை தெரிவித்தபோது, ‘நீங்கள் இருக்கையில் அமருங்கள்’ என்றார் சபாநாயகர். எங்களுக்கு வந்த கோபத் தை அடக்க முடியாமல் மைய மண்டபத்தை நோக்கி விரைந்தோம். ‘இது முறையல்ல. உங்கள் இருக்கையில் அமருங்கள். எங்கள் விருந்தினர்களை கொச்சைப்படுத் தாதீர்கள்’ என எச்சரித்தார் மீரா குமார். எங்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தாவும், ‘இருக்கையில் இருந்தே உங்கள் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யுங்கள்’ என்றதால் இருக்கைக்கு வந்தோம்.

கூட்டம் முடிந்ததும் தனது அறைக்கு அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையை அழைத்த சபாநாயகர் மீரா குமார், ‘நீங்கள் செய்தது நாடாளுமன்றத்தின் மரபை மீறிய செயல். இதற்கு முன்பு நம்முடைய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எந்த வெளிநாட்டவருக்கும் இதுபோன்ற நிலை வந்ததில்லை’ என கடுகடுப்பைக் காட்டியிருக்கிறார். தம்பிது ரையும், ‘இது எங்கள் தமிழ் மக்களின் உணர்வு. இனப்படுகொலை நிகழ்த்திய ஓர் அரசுக்கு எங்கள் எதிர்ப்பைக் காட்டினோம்’ என தெரிவித்துவிட்டு வந்துவிட்டார்.

அன்று மதியம் மூன்று மணிக்கு இந்தோ-லங்கா கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற மீரா குமார், ‘இலங்கை எம்.பி.க்களுக்கு ஏற்பட்ட சம்பவம் கவலையளித்தது. அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பேசியிருக்கிறார். இது தேவையற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒவ்வாத விஷயங்களுக்காக எதிர்ப்புத் தெரிவிப்பது வாடிக்கையான ஒன்றுதான். அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதை நாங்கள் வருகிற கூட்டத் தொடரில் கட்டாயம் எழுப்புவோம். ‘ராஜபக்ஷேவைப் போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அகதிகள் மறுசீரமைப்புப் பணிகள், சமமான அரசியல் தீர்வு கிடைப்பது பற்றி விவாதிக்கப்பட வேண்டும்’ என சி.பி.ஐ. கட்சி சார்பில் பல நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் எங்களுக்குப் பதில் தர வேண்டிய இவர்கள், சிங்கள அரசு சொல்லும் பதிலையே தருகிறார்கள்.

வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, ‘இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வை இலங்கை அரசே ஏற்படுத்தும்’ என்ற தொனியில் பேசுகிறார். இந்திய அரசு இலங்கைக்குக் கொடுத்த பணம் பஸ், ரயில், கட்டட சேதம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்கின்றனர். இவற்றை முறையாக மேற்பார்வையிடவில்லை. இதைப் பற்றி வருகிற கூட்டத் தொடரில் விதி 193-ன் படி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாகக் கொண்டு வர இருக்கிறோம்.

மேலும், நமது மீனவர்கள் ஆயிரம் பேர் இலங்கை ராணுவத்தால் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். 1200 பேர் முழு ஊனம் அடைந்திருக்கிறார்கள். இரண்டாயிரம் பேர் கடு மையாகக் காயம் பட்டிருக்கிறார்கள். 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் உடைமைகளை இழந்துள்ளனர். இந்நிலை மாற வேண்டுமானால், கச்சத் தீவை மீட்பது ஒன் றுதான் ஒரே வழி என்பதையும் வலியுறுத்த உள்ளோம்.

பல நாடுகள் ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என அறிவித்துள்ளன. இந்நிலையில், சிங்கள எம்.பி.க்களை வரவேற்று நாடாளுமன்றத்தில் சிறப்புச் செய்வது மனித உரிமை மீறலுக்குத் துணை போவது போலாகும். இனியும் இதுபோல் நடக்காமல் சிங்கள அரசின் போர்க் குற்றத்திற்குத் தக்க நடவடிக்கை எடுக்க அரசு முயற்சிக்க வேண் டும் என்பதையும் வருகிற கூட்டத் தொடரில் அழுத்தமாகவே பதிவு செய்வோம்’’ என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பொ. லிங்கம்.

படம் : ஞானமணி

ஆ.விஜயானந்த்

- குமுதம் ரிப்போட்டர் 14.08.11

அடுத்த மாதம் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தொடரில் இந்தியா ஆதரவு தெரிவித்தால் சிங்களம் மீது ஒரு சர்வதேச விசாரணை நடக்கும். அதை நோக்கி எல்லாக்கட்சிகள் ஊடாகவும் பிரச்சாரம்/அழுத்தம் தர நாம் முயலவேண்டும்.

நாளை மறுநாள் எமது பிரச்சனை பற்றி விவாதம் லோக்சபாவில் நடக்கலாம். அது நல்ல ஒரு தீர்மானத்திற்கு இட்டு செல்லவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.